அறிமுகமானதிலிருந்து குக்கிராமத்திலும்
கூட இணைய
இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய
வசதிகள் ஏற்பட்டன. பயனுள்ள
இத்தொழில்நுட்பத்தில் உள்ள
குறைகளைப்
பயன்படுத்தி ஹேக்கர்கள் செய்யும்
திருட்டுத்தனங்கள்
நிறையவே உள்ளது.
மிகப்பெரிய பேராபத்துக்களையும்
இதன் மூலம் செய்துவருகிறார்கள்.
இத்தகைய அபாயங்கள் மிகப்பெரிய
அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
என்னென்ன பிரச்னைகள், எத்தகைய
அபாயங்கள் உள்ளன
என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு
வைஃபை(WiFi) என்றால் என்ன?
என்பதைத் தெரிந்துகொள்வோம்.
WiFi என்பது wireless fidelity
என்பதின் சுருக்கம்.
இது ஒரு wireless local area network
ஆகும். கணினி இணையதள
இணைப்புகளுக்கும்,
நெட்வொர்க்குகளுக்கும்
இணைப்புகளை ஏற்படுத்திய
கம்பிவட
தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக
வளர்ந்துள்ள புதிய பரிணாம
வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய
கம்பியில்லா இணைய
இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.
வைஃபை நெட்வொர்க்கில் உள்ள
குறைகள்
Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி,
மொபைல், டேப்ளட் பிசி போன்ற
சாதனங்களில் இணைய
இணைப்பு எந்த இடத்திலிருந்தும்
பெற முடியும் என்றாலும்
முறையான தடுப்பு,
பாதுகாப்பு வசதிகளைப்
பயன்படுத்தாத பொழுது இது பெரும்
அச்சுறுத்தலாகவே உள்ளது.
அதாவது இணைய
இணைப்பை வான்வழி சிக்னல்களாக
அனுப்பி பெற்றுப்
பயன்படுத்துவதால் இடையில்
வேறு யாரேனும் அதில்
குறுக்கிட்டுப் பயன்படுத்த
சாத்தியங்கள் அதிகம். இதன் மூலம்
கணினி ஹேக்கர்கள் எளிதாக
ஒரு கணினியின் நெட்வொர்க்கில்
புகுந்து நாச வேலைகளில் ஈடுபட
முடியும். .
உதாரணமாக சொல்வதெனில்
சமீபத்தில் நடைப்பெற்ற
குண்டுவெடிப்புச் சும்பவத்தில்
ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல்
பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய
வந்தது. அந்த
மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர்
அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
அதாவது அமெரிக்காவில் உள்ள
ஒருவரின் கணினியின்
நெட்வொர்க்கில் புகுந்து ஹேக்
செய்து அவருடைய கணினியின்
மூலம், அவருடைய
மின்னஞ்சலை நாசவேலைக்குப்
பயன்படுத்தியிருந்தார்கள்
என்பது தெரிய வந்தது.
தொடர்பில்லாத ஒரு நபரின்
கணினியின் மூலம் அந்த
நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய
வந்தது. வயர்லெஸ் அக்சஸ்
கார்டுகளின் (Wireless Access Cards)
மூலம் இயங்கும் லேப்டாப்கள்,
தானியங்கி இணைப்பு அமைப்புகள்
ஆகியவை தற்போது பெருகி வருகிறது.
அதாவது ஒயர்லஸ் இணைப்பைப்
பயன்படுத்துபவர்கள்
வான்வழியே தகவல்களை அனுப்புவதால்
அதனை தடுத்து ஹேக்
செய்வது சுலபமாகிறது.
அத்தகவல்களை யார்வேண்டுமானாலும்
பார்க்க முடியும். எந்த
இடத்திலிருந்து வேண்டுமானாலும்,
எந்த ஒரு நெட்வொர்க்கைப்
பயன்படுத்தினாலும் ஹேக்
செய்வது சுலபமாகிறது.
தடுக்கும் வழிகள் (
(ways to stop Hacking) வயர்லெஸ்
கருவியின் அட்மின்
பாஸ்வேர்ட்டை (Wireless modem
admin password) நீங்கள் உடனடியாக
மாற்ற வேண்டும்.அதாவது உங்கள்
நெட்வொர்க்கின் பெயர்,
அல்லது பொதுவான பெயருடன்
12345 என இருக்கும்
கடவுச்சொற்களை உடனடியாக
மாற்றி வேறு புதிய
கடவுச்சொல்லை பயன்படுத்த
வேண்டும்.
உங்களுடைய வயர்லெஸ்
கருவி பயன்படுத்தக்கூடிய WPA/
WEP
பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும்
இயக்கத்தில் வைத்திருக்க
வேண்டும். பயன்படுத்தும்
நேரத்தை தவிர, மற்ற நேரங்களில்
இணைய
இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது.
வளாகத்தின் மையப்பகுதியில்
ஒயர்லெஸ் அணுகள்
இடத்தை வைப்பது நல்லது.
சுவர் அல்லது சுவற்றின்
மூளைகளில் வைப்பதால் கசிவுகள்
ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய
இணைய நெட்வொர்க்குகளை பிறர்
எளிதாகப் பயன்படுத்த முடியும்.
தற்பொழுது புதியதாக
வெளிவந்துள்ள
வைபை மோடங்களில் குறிப்பிட்ட
கணினியின் ஐபி அட்ரஸ் மட்டும்
கொடுத்து இணையத்தை அணுகும்
வழிமுறைகளும், அதற்கான
வசதிகளும் வந்துவிட்டன.
அவ்வாறான வசதியுள்ள
சாதனங்களில் குறிப்பிட்ட கணினி,
மொபைல் மற்றும்
டேப்ளட்களை மட்டுமே இணைந்து செயலாற்றத்தக்க
வகையில் செட்டிங்ஸ்
மாற்றி அமைத்துக்கொள்ளலாம் இதன்
மூலம் உங்களுடைய இணைய
இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த
முடியாமல் செய்வதோடு, இடையில்
உங்களுடைய
கணினியை வேறு யாரும்
அணுகி நாச வேலைகள்
செய்வதையும் தடுக்க முடியும்....!
Monday, 18 November 2013
wi-fi பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment