Thursday, 21 November 2013

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை!...

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய
மருத்தவ சிந்தனை!...
எல்லீஸ் டேல்
கோல்வொர்த்தி என்பவர்
ஒரு பொறியாளர்.
இவருக்கு பிறந்ததில்
இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது.
அதாவது இவரால் இயற்கையாய்
மூச்சு விட கஷ்டம்
அது மட்டுமின்றி தூங்க
முடியாது என்பதுடன் ஆக்டிவாக
இருக்கவே இயலாது. இவருக்குள்ள
இந்த நோய் “மார்ஃபான்
சின்ட்ரோம்” (Marfan Syndrome)
என்பதாகும்.
மார்ஃபான் சின்ட்ரோம் என்றால்
என்ன? இதயம் ரத்ததை பம்ப் செய்யும்
முக்கிய வெஸல் அஒர்டா (Aorta)
என்பது அனைவருக்கும் தெரிந்த
ஒன்று. இந்த அஒர்டாவின்
வேலை ரத்தம் கொண்டு செல்ல
விரிந்து தேவையான
ரத்ததை ஒவ்வொரு பகுதிக்கு எடுத்து
செல்லும் முக்கிய குழாய். இந்த
மார்ஃபன் சின்ட்ரோம் வந்தால் இந்த
அஒர்டா விரியாமல் ரத்த அழுத்தம்
அதிகமாகி வெடிக்கும்
நிலை உண்டு. அப்படி வெடித்தால்
ரத்தம் மற்ற பாகங்களுக்கு செல்லாமல்
உடனே மரணிக்கும் ஒரு அபாயம்
உண்டு.
இவருக்கும் தன் இளவயது முதல்
தெரியும் என்றாவது ஒரு நாள் இந்த
அஒர்டா ரத்த குழாய் வெடிக்கும்
என. ரொம்பவும் ஒரு நாள் ரொம்ப
முடியாமல் போக டாக்டரிடம்
சென்றவுடன் அவருக்கு வழக்கமாக
செய்யபடும்
அறுவை சிக்கிச்சை மூலம் அந்த ரத்த
குழாயை வெட்டி எடுத்து ஒரு
உலோக
செயற்கை குழாயை பொருத்துலாம்
அதன் பிறகு ரத்ததை மெலிதாக்கும்
மருந்துகள் சாப்பிட்டால்
ஓரளவு நிவாரணமும் இது தான்
இந்த நோய்க்கு தீர்வு என
குறிப்பிட்டுள்ளனர் ராயல்
பிராம்ன்டன் லண்டன் மருத்துவமனை.
ஆனால் இவருக்கு அதில்
உடன்பாடு இல்லை. ஏன் என்றால்
அது மிகவும் வலியை தரும் கடும்
அறுவை சிகிச்சை மற்றும் அந்த
ரத்ததை மெலிதாக்கும்
மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் என்றாவது ஒரு சிறு கீரல்
உடம்பில் விழுந்தால் கூட
குபு குபு என ரத்தம்
வெளியேறி இறக்கும் அபாயம்
உண்டு. அதனால் இரண்டு நாட்கள்
அவகாசம்
கேட்டு வீட்டுக்கு வந்து யோசனை
செய்கையில் தன் தோட்டத்தில்
அடிக்கடி தண்ணீர்
பாய்ச்சும்போது அந்த தண்ணீர் பைப்
டேமேஜ் ஆகி அதற்க்கு செலஃபன்
டேப் ஒட்டு போட்ட விஷயம்
நினைவில் வந்தவுடன் நேராக சில
பொருட்களை தானே வாங்கி ஒரு
சிறிய கருவியை செய்து,
இதை எனக்கு பொருத்துங்கள்
சரியாகிவிடும் என
ம்ருத்துவ்ர்களிடம் தெரிவிக்க
அவர்களும் உனக்கென்ன தெரியும்
நாங்க டாக்டர் என சொல்லாமல்
அதை ஆராய்ந்து அவருக்கு மிக
சிறிய பேசிக்
அறுவை சிகிச்சை மூலம்
இதை செய்து இந்த மனிதன்
இப்போது பல ஆண்டுகளாய்
சாதாரணமாய் இருக்கிறார்
அதுமட்டுமல்ல இதை போல மேலும்
40 பேருக்கும்
இதே டெக்னாலஜியை பொருத்தி
அவர்களும் நன்றாய் உள்ளனர். இவர்
அடுத்து பிரிட்டிஷ் கார்ட்
ஃபவுன்டேஷனிலும் – ஜர்னலிலும்
இதை இன்னும் அனைத்து உலகத்தில்
உள்ள மார்ஃபன் சின்ட்ரோம்
நோயாளிகளுக்கு இந்த எளிய
அறுவை சிகிச்சையை செய்யுமாறு
ரெக்வெஸ்ட் அனுப்பியுள்ளாராம்.
இந்த புதிய செயல்முறை என்ன?
அதாவது அஒர்டாவை வெட்டி
நடுவில்
குழாயை பதிப்பதற்க்கு பதலாய்
அஒர்டா குழாயை சுற்றீ
ஒரு வழக்கமாய்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து
மெடிக்கல் மெஷ் எனப்படும்
ஒரு மெல்லிய மெட்டிரியலை அந்த
குழாயை சுற்றீ தைத்துவிடுவதால்
அந்த குழாய் பெரிதாகி வெடிக்கும்
அபாயம் இல்லையாம்.
இதனை செய்து முடிக்க 3
ஆண்டுகள் வரை டாக்டர்கள் இவரின்
ஒத்துழைப்போடு ஆராய்ச்சி செய்து
இதுக்கு காம்பிளக்ஸ்
சர்ஜரி தேவையில்லை சிம்பிளாய்
செய்தால் போதுமானது என்று
உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment