முன்
ஒரு காலத்தில்,’பணக்காரர்களின்
வியாதி’
என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய்
. ஆனால் இன்றோ,
சர்க்கரை நோயாளிகள் இல்லாத
வீடே இல்லை என்ற
அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம்
அதிகரித்துள்ளது.
இதை ‘வாழ்க்கைமுறை நோய்’
என்று கூறுவர். சர்க்கரை நோய்
எல்லோருக்கும் வரும் என்று இல்லை.
அப்படியே வந்தாலும்
தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும்
உணவு, வாழ்க்கைமுறை,
உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற
காரணிகள், சர்க்கரை நோய்
வருவதற்கான
வாய்ப்பை முடிவு செய்கின்றன.
ஆரோக்கியமான
வாழ்க்கைமுறையை மேற்கொண்டால்
சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
தற்போது கிட்டத்தட்ட ஆறரைக்
கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை
நோய் உள்ளது. 7.7
கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய்
வருவதற்கான எல்லைக்கோட்டில்
உள்ளனர். 2030-ல் இது 8.7
கோடியாக அதிகரித்துவிடும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.
இனியாவது நாம் ஆரோக்கிய
வாழ்வை மேற்கொண்டால்
சர்க்கரை நோய் வராமல்
காத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளின்
எண்ணிக்கை பெருகிவிட்டதால்,
இதைச் செய்யுங்கள், அதைச்
செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும்
தங்களுக்குத் தெரிந்தவகையில்
ஆலோசனைகளை அள்ளி
வீசுகின்றனர்.
எதையாவது செய்து நோயைக்
குணப்படுத்திவிட வேண்டும்
என்று மக்களும் இருக்கின்றனர்.
அது சரி! சர்க்கரை நோயை எப்படிக்
கண்டறிவது?
எப்படி என்கிறிர்களா? முதலில்
சாதாரண ரத்த
பரிசோதனை பற்றி பார்ப்போம்:
ஒருவருக்கு ரத்தத்தில் 200
மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற
அளவில் இருந்தால் –
அவருக்கு சர்க்கரை நோய்
உள்ளது என்று அர்த்தம். 140 –
அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான
நிலை’ என்று அர்த்தம்.
ஒருவருக்கு 140-க்கு மேல்
சர்க்கரை அளவு செல்லும்போது,
அவருக்கு சர்க்கரை நோய்
உள்ளதா என்பதை உறுதிப்படுத்த
மற்றொரு பரிசோதனைக்குப்
பரிந்துரைக்கப்படும்.
இதன்படி,
சாப்பிட்டு இரண்டு மணி நேரம்
கழித்து மீண்டும் ரத்தம்
பரிசோதனை செய்யப்படும். இதில்
140-க்கும் குறைவாக இருந்தால்
அது சராசரி. 200-க்கு மேல்
இருந்தால் சர்க்கரை நோய்.
இதிலும்குழப்பம் என்றால்,
அடுத்தக்கட்டப்
பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்
.
2 ஹெச்பிஏ1சி (HbA1c)
பரிசோதனை:முன்னரே சொன்னது
போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச்
சிவப்பு அணுக்கள் உள்ளன.
குளுகோஸானது இந்தச்
சிவப்பு அணுவில் எளிதில்
ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த
சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12
வாரங்கள் வரை இருக்கும். அதன்
பிறகு அவை அழிக்கப்படும். இந்தச்
ரத்த சிவப்பு அணுவைப்
பரிசோதனைசெய்வதன் மூலம்,
எட்டு முதல் 12 வாரங்களில்ல்
ஒருவரது ரத்தத்தில்
சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக்
கண்டறிய முடியும்.
பரிசோதனை முடிவில் 6.5
சதவிகிதத்துக்கு மேல்
என்று வந்தால்,
அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல்
6.4 சதவிகிதம் வரை இருந்தால்,
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை.
5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால்,
அது இயல்பான அளவு (Normal).
சிலர், சர்க்கரை நோய் ரத்தப்
பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு
முன்னர் இருந்தே சரியான உணவுக்
கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள்
மேற்கொண்டு சர்க்கரை அளவைக்
கட்டுக்குள் கொண்டுவருவர்.
இவர்களுக்கு பரிசோதனை
செய்யும்போது ரத்தத்தில்
சர்க்கரை அளவு சரியாக
உள்ளதுபோல தோன்றும். இந்த
ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்-
மூலம், மூன்று மாதக்
காலத்து சர்க்கரை அளவைக்
கணக்கிடலாம்.
Thursday, 7 November 2013
சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment