Tuesday, 12 November 2013

கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு...
இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பழமொழி. அந்தளவுக்கு கொழுப்பைக்
கரைப்பதில்
கொள்ளுக்கு முக்கியமான
இடமுண்டு. ஆனால்
கொள்ளு என்பது குதிரைத் தீவனம்
என்கிற நம்பிக்கையில்,
அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம்
கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும்,
திசுக்கள் முறையாக
வேலை செய்யவும், பழுதடைந்த
திசுக்களை சரி பார்க்கவும் புரதம்
மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம்
என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும்
இரு வகை உண்டு. பொதுவாக
அசைவ உணவுகளின் மூலம்
கிடைப்பதெல்லாம் சுப்பீரியர்
புரதம். பருப்பு வகையறாக்கள்
இன்ஃபீரியர் புரதம். சோயாவும்
கொள்ளும் சுப்பீரியர் புரத
வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ
உணவுக்காரர்களுக்கு, அசைவ
உணவுகளின் மூலம் கிடைக்கிற
உயர்தர புரதத்தை அள்ளிக்
கொடுக்கும் ஒரே தானியம்
கொள்ளு.
கொள்ளின் பலன்கள்
கொழுப்பைக் கரைப்பதில்
கொள்ளுக்கு முதலிடம்.
உடலிலுள்ள தேவையற்ற
தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.
கொள்ளுத் தண்ணீர்
ரத்தத்தை சுத்திகரிப்பதுடன்,
உடலிலுள்ள நச்சுத்
தன்மைகளை எல்லாம்
எடுத்து விடும். வளரும்
குழந்தைகளுக்கும்,
உடற்பயிற்சி செய்வோருக்கும்
மிகவும் உகந்தது. ஆயுர்வேதத்தில்
கொள்ளை தலையில் வைத்துக்
கொண்டாடாத குறைதான்.
அதில் பெரும்பாலான
நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப்
பயன்படுகிறது. பைல்ஸ்
எனப்படுகிற மூல நோய்க்கு,
ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல்
மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக்
கட்டுப்படுத்த...
இப்படி கொள்ளு குணமாக்கும்
பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப்
புண்ணுக்கும், சிறுநீரகக்
கற்களை வெளியேற்றவும், அதீத
ரத்தப் போக்கைக்
கட்டுப்படுத்தவும்கூட
கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம்
சொல்கிறது.
சிக்குன் குன்யா நோய் பாதித்த
வர்களுக்குக் கூட கொள்ளு வேக
வைத்த தண்ணீரில் சூப் வைத்துக்
கொடுக்கச் சொல்லிப்
பரிந்துரைக்கப்படுகிறது.
ஆந்திராவில் மஞ்சள்
காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக
உபயோகிக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, கொள்ளை வேக
வைத்து மசித்து, சருமப்
பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.
சூட்டைக் கிளப்புமா...?
கொள்ளு சூட்டைக் கிளப்பும்
என்றும், அதனால்
அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்றும்
மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு.
கொள்ளு சூடானது என்பது உண்மைதான்,
அதாவது, வளர்சிதை மாற்ற
விகிதத்தை வேகப்படுத்தும்.
அதனால்தான் கொழுப்பைக் குறைக்க
கொள்ளு எடுத்துக்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன்
பின்னணியும் இதுதான்.
குதிரை குண்டாக இருந்தால்
அதனால் வேகமாக ஓட முடியாது.
கொள்ளு கொடுப்பதால்தான்
குதிரை கொழுப்பின்றி,
சிக்கென்று இருக்கிறது. உடல்
திண்மையுடன் வேகமாக ஓடுகிறது.
மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக்
கொள்ளலாம்..?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில்
சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும்
சேர்த்து தினமும்
அப்படியே குடிக்கலாம். வேக
வைத்த கொள்ளை, சாலட் போல
சாப்பிடலாம். கொள்ளை வெறும்
கடாயில் வறுத்துப் பொடித்துக்
கொண்டு, சாம்பார், ரசம், பொரியல்,
கூட்டு என எல்லாவற்றிலும்
சேர்க்கலாம். உணவின் மூலம்
உடலுக்குள் சேரும்
கொழுப்பிலிருந்து இது நம்மைக்
காப்பாற்றும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள்,
குறிப்பாக மட்டன் பிரியர்கள்,
அத்துடன்
கொள்ளு சேர்த்து சமைக்கலாம்.
மட்டன் அதிக
கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில்
தங்க விடாமல் காக்கும். அதற்காக
தினமும் மட்டன் சாப்பிட வேண்டும்
என்கிற அவசியமில்லை.
இது என்றோ ஒரு நாளைக்குத்தான்.
மதியமோ, இரவோ பலமான
விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என
வைத்துக்கொள்வோம். அன்றைய
தினம் காலையில் நொய்யரிசியும்
கொள்ளும் சேர்த்துக்
கஞ்சி செய்து குடித்தால்,
அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப்
போகிற உணவின் கொழுப்பினால்
உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்....!

No comments:

Post a Comment