கம்ப்யூட்டர்களும்
கால்குலேட்டர்களும் நம்மில்
பலருக்கும் தெரியவே தெரியாத
காலத்தில் அந்த இயந்திரங்களைத்
தோற்கடிக்கும் வேகத்தில்
கணக்கு கேள்விகளுக்கு விடைகளை அளித்தவர்
சகுந்தலா தேவி(November 4, 1929 –April 21, 2013)
பெங்களூரில் 1929-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி பிறந்த
அவர் மூன்று வயதிலேயே தன்
கணிதத்
திறமையை வெளிக்காட்டி உலகை அசர
வைத்தார்.
8 வயதாவதற்குள் மைசூர் மற்றும்
அண்ணாமலை பல்கலைக்கழகங்களில்
தன் கணிதவியல்
சாகசங்களை நடத்திக் காட்டினார். 201
இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணின்
23-வது மூலத்தை மனக்
கணக்கிட்டுச் சொல்லி அசர
வைத்தார். ஒரு முறை லண்டனிலுள்ள
இம்பீரியல் கல்லூரியின்
கம்ப்யூட்டர் துறையினர் இவருடைய
மனக் கணக்குத் திறனை சோதிக்கத்
தீர்மானித்தனர்.
அங்கிருந்த கம்ப்யூட்டர்
தேர்ந்தெடுத்த எந்தவித
தொடர்புமில்லாத இரண்டு 13 இலக்க
எண்களைப்
பெருக்குமாறு சகுந்தலாவிடம்
கூறப்பட்டது. அதன் விடையை அவர்
28 வினாடிகளில்
கூறி உலகையே அதிர வைத்தார்.
இந்த விடை 26 இலக்கம் கொண்ட
ஒரு எண்.
7686369774870 x 2465099745779
=18947668177995426462773730.
இந்த விடையை அவர் யோசிக்க
எடுத்துக் கொண்ட நேரம்
என்பதைவிட அதை அவர் சொல்ல
எடுத்துக் கொண்ட
நேரமாகவே இதைக் கருத
வேண்டியிருக்கிறது....!
கணினி 13000
கட்டளைகளுக்கு அப்புறம்
ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல
தயாரான பொழுது அந்த பெண்
பத்து நொடிகள்
முன்னமே சொல்லி விட்டாள்.அரங்கம்
எழுந்து நின்று கைதட்டியது..இது உலக
சாதனையாக கின்னஸ் புத்தகத்தில்
இடம்பெற்றுள்ளது....!
No comments:
Post a Comment