முதுமையிலும் இனிமையாக
வாழ்வது எப்படி?
வெறுமையான கூடுகள் போல்
காணப்படுகின்றன, சில வீடுகள்!
அங்கு பிள்ளைகளும் இல்லை.
பேரக்குழந்தைகளும் இல்லை.
விளையாட்டும் இல்லை. சிரிப்பும்
இல்லை. ஜாலியும், சந்தோஷமும்
நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல
வீடுகளில் இப்போது ஒரு சில
முதியோர்கள் மட்டும்
வசிக்கிறார்கள்.
முதியோர்கள்
குடும்பத்திற்கு பாரமாக,
ஆரோக்கியமும், மன நிம்மதியும்
இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை.
காதுகளும் கேட்கவில்லை. யாரும்
தன்னை மதிப்பதில்லை’ என்ற
விரக்தியோடுதான்
மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? –
இல்லை. அவர்கள் முதுமையிலும்
இனிமையாக
வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
எப்படி? இதோ சொல்கிறேன்.. 1960-
ம் ஆண்டுகளில் இந்தியர்களின்
சராசரி ஆயுள் 42 வயது.
தற்போது பெண்களுக்கு 67-ம்,
ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக
இருக்கிறது. அதனால் நாமெல்லாம்
எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த
நாளைக்கூட கொண்டாடலாம்!
அப்படி கொண்டாட வேண்டும்
என்றால்
முதுமையை வரவேற்று அதனோடு
வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
நம்மை படைக்கும்போதே கடவுள்
நமது உடலில் எந்த
பிரச்சினை எதிர்காலத்தில்
வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ
வசதியாக முக்கியமான
ஒவ்வொரு உறுப்பிலும் இலவச
இணைப்புபோல் அதிகப்படியான
அளவை, அதிகப்படியான
சக்தியை கொடுத்திருக்கிறார்.
கிட்னியில் இன்னொன்று, ஈரலில்
80 சதவீதம் தேவைக்கு அதிகமாக,
கல்லீரலில் 60 சதவீதம் கூடுதலாக..!
இப்படி ஒவ்வொன்றிலும்
கடவுளின் கருணை தெரிகிறது.
அதனால்தான் இளமையில் ஆடாத
ஆட்டம் ஆடினாலும்
அடிக்கடி நோய்வாய்ப்படாமல்
தப்பித்துவிடுகிறோம். ஆனால்
முதுமை அப்படி அல்ல.
‘மார்ஜின் ஆப் எர்ரர்’
என்று குறிப்பிடும் அந்த
சக்தி இயல்பாகவே முதுமையில்
குறைந்துவிடுகிறது. உடலின்
எல்லா பகுதிக்கும் முதுமையில்
ரத்த ஓட்டம் குறையும்.
மூளைக்கு செல்லும் ரத்தத்தின்
அளவு குறையும்போது ‘மைனர்
ஸ்ட்ரோக்’ எனப்படும்,
வெளிக்கு தெரியாத பக்கவாத
பாதிப்புகள் தோன்றும்.
அதனால்தான் சிலர்
ஐந்தாறு தடவை அழைத்த
பின்பு தான்
சுதாரித்துக்கொண்டு ‘என்னையா
அழைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.
ஆஸ்டியோபோராசிஸ் என்ற
எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோய்
முதுமையில் தென்படும்.
பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ‘
மனோபாஸ்’ ஆகும்
காலகட்டத்திலே இந்த
தொந்தரவு தோன்றி விடும்.
இதில் குறிப்பிடத்தக்க
பிரச்சினை என்னவென்றால்,
கீழே இனிமையாக வாழ்வது எப்படி?
வெறுமையான கூடுகள் போல்
காணப்படுகின் அவர்கள் விழுந்தால்
எளிதாக எலும்பு முறியும்.
சிகிச்சை எடுத்துக் கொண்டாலும்
விரைவாக பலன் கிடைக்காது.
மூட்டுத் தேய்மானமும் முதுமையில்
உருவாகி,
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
சிலருக்கு தேவைப்படும்.
அறுபது வயதுக்கு பிறகு
முதியவர்கள் உடலில்
ஒவ்வொரு நோயாக
வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கும்.
சர்க்கரை நோய் தாக்கி இருந்தால்,
ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு எவ்வளவு இருக்கிறது?
என்பதைவிட, அவரது உடலில்
சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக
இருக்கிறது என்பது கவனிக்கத்
தகுந்தது.
ஏன்என்றால் நீண்ட காலமாக அந்த
நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி,
இதயம்
போன்றவை பாதிக்கப்படக்கூடும்.
ஈரல், கிட்னி ஆகிய
இரண்டு உறுப்புகளும் நாம்
இளைஞராக இருக்கும்போது,
சாப்பிடும் மாத்திரையில் இருக்கும்
தேவையற்ற
வைகளை அப்படியே பிரித்தெடுத்து
ரத்தத்தில் கலக்கவிடாமல்
வெளியேற்றிவிடும்.
முதுமையில் அந்த
இரண்டு உறுப்புகளின்
செயல்பாடும் மந்தமடைவதால்
நோய்களுக்காக சாப்பிடும்
மாத்திரைகளில் இருக்கும்
தேவையற்றவைகளும்
பிரித்தெடுக்கப்படாமல்
அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும்.
அதனால்தான் முதுமையில்
நோய்களுக்காக சாப்பிடும்
மருந்துகளால் அதிக
பக்கவிளைவுகள்
சிலருக்கு தோன்றுகின்றன.
நோயாளிக்கு டாக்டர்கள்
மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது,
‘மிகக் குறைந்த அளவு’, ‘அதிகபட்ச
அளவு’ என்ற
இரு எல்லைகளை கையாண்டு அதற்கு
தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள
வேண்டிய
அளவை நிர்ணயிப்பார்கள்.
இதை ‘தெரபூயிட்டிக் வின்டோ’
என்போம்.
அந்த இடைவெளியை முதுமையில்
மிக கவனமாக
கண்காணித்து மாத்திரைகள்
வழங்கவேண்டும்.
தேவைக்கு அதிகமான ‘டோஸ்’
கொடுத்துவிட்டால், பக்க
விளைவுகள் அதிகரித்துவிடும்.
எல்லா வியாதிகளுக்கும்
அறிகுறிகள் உண்டு.
இளமையில் உடலில் அதிக
சக்தி இருக்கும்போது அறிகுறிகளை
எளிதாக கண்டு சிகிச்சையை உடனே
தொடங்கிவிடலாம்.
முதியவர்களுக்கு உடலில்
சக்தி குறைவதால் உள்ளே நோயின்
பாதிப்பு அதிகம் இருந்தாலும்,
அறிகுறிகளை அவ்வளவு எளிதாக
கண்டறிய முடியாது. சிறுநீர்
பாதை அருகில் ‘ப்ரோஸ்டேட்
சுரப்பி‘ உள்ளது.
முதுமையில் அந்த சுரப்பி வீங்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத்
தோன்றும். முழுமையாக
வெளியேறவும் செய்யாது.
திடீரென்று சிறுநீர் வெளியேறாமல்
தொந்தரவு செய்வதும் உண்டு. உடல்
இயக்கம் குறைவதால்
தூக்கமின்மையும்
முதியோர்களை அதிகம்
தொந்தரவு செய்கிறது.
பற்கள் விழுந்துவிடுவதால்
மென்று அவர்களால் சாப்பிட
முடியாது. அதனால்
உணவு உண்பதில் பிரச்சினையும்,
ஜீரணக்கோளாறும் தோன்றுகிறது.
புற்றுநோயும்
முதியோர்களை அதிக அளவில்
தாக்கி நிலைகுலையச் செய்கிறது.
கட்டி, ஆறாத புண்கள்
தோன்றினாலோ இருமலில்,
வாந்தியில், சிறுநீர் மற்றும்
மலத்தில் ரத்தம்
வெளிப்பட்டாலோ டாக்டரிடம்
சென்றுவிடவேண்டும். பெண்களைப்
பொறுத்தவரையில் அதிக ரத்தப்
போக்கு உடனடியாக கவனிக்கத்
தகுந்தது. இதுபோன்ற ஏராளமான
உடல்பிரச்சினைகள் மட்டுமின்றி,
மனப் பிரச்சினைகளாலும்
முதியோர்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.
Saturday, 30 November 2013
முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?
Labels:
சுயமுன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment