Tuesday, 19 November 2013

சிலம்பம்

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக்
கலை மற்றும் தமிழர்களின் வீர
விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்
விளையாட்டைக் கம்பு சுற்றுதல்
என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில்
தடியைக் கையாளும் முறை, கால்
அசைவுகள், உடல் அசைவுகள் மூலம்
தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என
பல கூறுகளைக் கொண்ட விரிவான
தற்காப்புக் கலை ஆகும்.
சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும்
கம்பினைத் தடுத்தல், எதிராளியின்
உடலில் சிலம்புக்கம்பினால்
தொடுதல் (தொடு புள்ளி) போன்றன
அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக்
குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை.
இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல
தமிழகத்தில் உள்ளன.சிலம்பாட்டம்
ஆடுவதற்குக் குறைந்தது இருவர்
வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற
ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப்
போட்டிகளில் விளையாடுவர்,
தற்காலத்தில் ஆண்கள், பெண்கள்
என்று இருபாலரும் சிலம் பாட்டத்தைக்
கற்று விளையாடி வருகின்றனர்.
திருவிழா, கோயில் விழாக்கள்,
மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம்
தவறாது இடம் பெறும்.
இக்கலை திருநெல்வேலி,
தூத்துக்குடி, மாவட்டங்களில்
பெருமளவு நடக்கிறது.
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற
விலங்குகளிடம்
இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட
முறையே சிலம்பம் எனப்படும்
கலையாக
வளர்ந்துள்ளது என்று சொல்வதுண்டு.
தமது கைகளில் எப்போதும் இருக்கக்
கூடிய சிறிய ஆயுதங்களான
கம்பு (தடி), சிறு கத்தி,
கோடரி போன்ற ஆயுதங்களைப்
பயன்படுத்தி விலங்குகளிடம்
இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக்
கலையைப் பயன்படுதினர்
என்று கூறப்படுகிறது. தமிழர்கள்
ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த
காலத்தில் முதலில்
எடுத்தது கம்பு எனப்படும்
ஆயுதமே ஆகும். இதுவே பின்னர்
சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.
ஆதி காலத்தில் மனிதர்கள்
சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல்,
வாள், கம்பு போன்ற பலவிதமான
ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த
ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’
ஆகும்.
முற்காலத்தில் இக்கலையை வீர
மறவர்கள் பயன்படுத்தினர்.
தற்போது இது ஒரு சில
பள்ளிகளிலும், தனியார்
அமைப்புகளாலும் கற்றுத்
தரப்படுகிறது. விளையாட்டுப்
போட்டிகளில் வீர
விளையாட்டாகவும்
இடம்பெறுகிறது.சிலம்பச்
சுவடிகளில் குறிப்பிடப்படும்
தொன்மையான சிலம்பச்சுவடு மற்றும்
அடி வரிசைகள், தமிழக
மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று,
தமிழகம் அன்னியர்களுக்கு
அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால்
அதன் பெயர்களும் ஆடும் முறைகளும்
சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி,
தெக்கன் களரி, சுவடு அடி முறை,
கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத்,
தஞ்சாவூர் குத்து வரிசை,
நெடுங்கம்பு என்ற பெயர்களில்
இன்றும் தமிழகம் மற்றும்
கேரளா உள்ளிட்ட பகுதிகளில்
ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பக்கலை பற்றிய அகழ்வாய்வுச்
சான்றுகள் மிகத் தொன்மையானவை.
கி.மு.2000 க்கும் முற்பட்ட ஆதிச்ச
நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான
சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்
பட்டுள்ளன. இவை சென்னை அருங்
காட்சியகத்தில் வைக்கப்
பட்டுள்ளன.பிரிட்டனில் உள்ள
அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய
போர் வீரர்கள் பயன்படுத்திய
நான்கு அடி நீளமுள்ள
கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள்
அந்த கம்பினைப் பயன்படுத்திய
முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால்
தமிழக எகிப்திய கலாச்சாரப்
பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக
சிலம்பக்கலையும் பரவியதாக
கருதப்படுகிறது.

No comments:

Post a Comment