கண்தானம் செய்ய விருப்பம்
தெரிவித்து பதிவு செய்த ஒருவர்
இறந்துவிட்டார் என்றால் அந்த
வீட்டிலுள்ளவர்கள் உடனே செய்ய
வேண்டியது என்னென்ன?
இறந்து ஆறு மணி நேரத்திற்குள்
கண் டாக்டருக்குத் தெரிவிக்க
வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப
முக்கியம். அதற்காக
ஆறு மணி நேரம்
வரை காலத்தை வீணாக்காதீர்கள்.
ஆறு மணி நேரத்திற்குப்
பிறகு என்றால் இறந்தவரின்
கரு விழியில் நீர் சேர
ஆரம்பித்து கருவிழி வீங்கிவிடும்.
கருவிழி வீங்கிப் போய்விட்டால்
அதனுடைய ஒளி ஊடுருவிச்
செல்லும் தன்மை போய்விடும்.
அப்புறம்
எதற்குமே உபயோகப்படாது.
ஆகவே இறந்தவுடன்
உறவினர்களுக்குத்
தெரிவிக்கும்போதே கண்
டாக்டருக்கும்
தெரிவித்து விடுங்கள்.
இறந்தவரது கண்கள் திறந்திருந்தால்
உலர்ந்து போகாமலிருக்க
கண்களை மூடி வையுங்கள்.
அதே மாதிரி, ஈரமான பஞ்சினால்
கண்கள் இரண்டையும்
மூடி வையுங்கள். ஏ.சி. இருக்கிற
வீடாக இருந்தால் பேனை ஆப்
செய்துவிட்டு,
ஏ.சி.யை போட்டு விடுங்கள்.
இறந்தவரின்
தலையை இரண்டு தலையணைகள்
வைத்து நன்கு உயர்த்தி வையுங்கள்.
இறந்தவரின் மெடிக்கல் ரிப்போர்ட்
சர்டிபிகேட் முதலிய எல்லா பேப்பர்
களையும் ரெடியாக
எடுத்து வையுங்கள். கண்தானம்
பண்ண உறுதிமொழி கொடுத்த
பேப்பரையும் மறக்காமல்
எடுத்து வையுங்கள். இவையெல்லாம்
கண் டாக்டர் வந்து நேரம் வீணாகாமல்
இருப்பதற்காக செய்ய வேண்டிய
விஷயங்களாகும்.
கண் வங்கியிலிருந்து வரும்
ஆம்புலன்சில் ஒரு கண்
டாக்டர்,ஒரு டெக்னீசியன், ஒரு நர்ஸ்
அடங்கிய குழுவினர் இருப்பார்கள்.
சுமார்
பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில்
இவர்கள் கருவிழிகளை எடுத்துக்
கொண்டு சென்று விடுவார்கள்.
கருவிழி பாதிப்பினால் கண்
பார்வை இழந்தோர், கண் வங்கியில்
தங்களது பெயரைப்
பதிவு செய்து வைத்திருப்பார்கள்.
இறந்தவரது கருவிழி கிடைத்தவுடன்
சீனியாரிட்டி அடிப்படையில்
யாருக்கு முதலில் கருவிழியைப்
பொருத்த
வேண்டுமோ அவர்களை உடனே கூப்பிட்டு ஆபரேஷன்
செய்து பொருத்த வேண்டிய
வேலைகளை ஆரம்பித்துவிடுவார்கள்.பாதிக்கப்பட்டவரின்
கருவிழி நீக்கப்பட்ட அந்த இடத்தில்
இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட
கருவிழி பொருத்தப்படும்.
கருவிழியைச் சுற்றி சுமார்
பதினாறு தையல்கள்
போடப்பட்டு இந்தக் கருவிழி மிக
அழகாகப் பொருத்தப்படும்.
கருவிழி பொருத்திய
இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே அவருக்கு கண்
நன்றாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.
கருவிழி பாதிப்பினால் கண்
பார்வை போனவர்களுக்கு மட்டுமே,
இந்த
மாற்று கருவிழி பொருத்துவதால்
கண் பார்வை கிடைக்கும்.
ஒரு வயது குழந்தை முதல்
ஆரோக்கியத்துடன் இருக்கும் எந்த
வயதுக்காரர்களும் கண்களை தானம்
பண்ணலாம். ஒரு முக்கிய விஷயம்
உயிரோடு இருக்கும்போது யாரும்
கண்தானம் செய்ய முடியாது.
இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர்
கருவிழி பாதிப்பினால்
கண்பார்வை இல்லாமல்
இருக்கிறார்களாம். இதில்
குழந்தைகளும், இளைஞர்களும்தான்
அதிகம். இவர்கள் வாழ வேண்டிய
காலம் ரொம்ப அதிகம்.
எனவே இவர்களுக்கு மாற்று கருவிழி கிடைத்தால்
இவர்களுக்கும் கண்
பார்வை கிடைத்து நீண்ட நாட்கள்
நம்மைப்போல இந்த உலகத்தைப்
பார்த்து பயன்பெறுவார்கள்
அல்லவா...? யோசியுங்கள்....!
Monday, 4 November 2013
கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்தவர் மரணித்தால் செய்ய வேண்டியவை
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment