Saturday, 16 November 2013

தமிழர்கள் சொல்ல மறந்த நன்றி வணக்கம் !

தமிழர்கள் சொல்ல மறந்த
நன்றி வணக்கம் !
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும்
அந்த நாட்டு மக்களின் மொழியில்
நிச்சயமாக காணப்படும்
இரு சொற்கள் நன்றி மற்றும் வணக்கம்
ஆகும். இவை அந்த நாட்டு மக்களின்
பண்பாட்டை வெளிபடுத்தும்
சொற்களாகும்.
உலகின் மூத்த மொழியான
தமிழிலும் கணக்கிடப்படாத காலம்
தொட்டு தமிழர்கள் இந்த
இரு சொற்களை பயன்படுத்தி
வருகின்றனர். இச்சொற்கள்
தமிழர்களின்
பண்பாட்டு அடையாளச்
சொற்களாகவும் இருந்து வருகிறது.
நன்றி கூறுவது ஒருவர்
நமக்கு செய்த உதவிக்கு நாம்
செலுத்தும் ஒரு வகையான
மரியாதையே ஆகும். அதே போல்
ஒருவரை முதலில் சந்திக்கும்
போதும் ஒருவருடன் உரையாடும்
முன்பும்
அவர்களுக்கு நமது வாழ்த்தை,
நமது பணிவை எடுத்துரைக்கும்
சொல் வணக்கம் என்பதாகும் .
தமிழர்கள் எங்கும் எப்போதும்
பொதுவெளியில் தங்கள்
உரையை தொடங்கும்
முன்பு அவையோர்களுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு தான்
பேச்சை தொடங்குவார்கள் .
அதே போல்
தங்களது பேச்சை நிறைவு செய்யும்
போதும் நன்றி கூறிவிட்டு தான்
முடிப்பார்கள்.
அப்படியொரு சிறப்பான
பண்பாட்டை உடையவர்கள் தமிழர்கள்
என்பதில் நமக்கு பெருமையே.
ஆனால் இப்போது தமிழர்கள் இந்த
இரு பெரும்
பண்பாட்டு சொற்களை மறந்து
வருகிறார்கள்
என்பது ஒரு வேதனையான விடயம்.
இந்த இரு சொற்களையும் தமிழக
மக்கள் வெகுவாக
மறந்து வருகிறார்கள் . பள்ளியில் ,
அலுவலகத்தில், கல்லூரியில்,
இல்லத்தில், விழாக்களில்,
பொது வெளியில் என
அனைத்து தளங்களிலும் இந்த
சொற்களை பயன்படுத்துவதில்லை
தமிழர்கள் . இதற்கு பதிலாக
தமிழர்கள் தேங்க்ஸ் , குட் மார்னிங் ,
குட் ஈவ்னிங் போன்ற ஆங்கில
சொற்களையே அதிகம்
பயன்படுத்துகின்றனர் . இந்த
ஆங்கிலப் பண்பாடு, நகரத்தில்
மட்டும் காணப்படுவது இல்லை ,
ஊர்ப்புறங்களில் கூட தொற்றிக்
கொண்டுள்ளது. கிராமத்து மக்களும்
தேங்க்ஸ்
என்றே பயன்படுத்து கின்றனர்.
எங்கே போயிற்று தமிழர்களின்
பண்பாட்டு சொற்கள். வெளிநாட்டில்
இருந்து ஆங்கிலேயர்கள் சிலர்
தமிழகத்திற்கு வரும்
போது அவர்கள் எதிர்பார்ப்பது,
விரும்புவது நமது பண்பாட்டு
சொற்களைத் தான் . ஆனால்
நாமோ வெளிநாட்டினர்
பயன்படுத்தும் அவர்கள்
பண்பாட்டு சொற்களான தேங்க்ஸ் ,
குட் மார்னிங் போன்ற சொற்களைத்
தான் அவர்களிடமே திருப்பிச்
சொல்கிறோம்.
இப்போது தொலைபேசியில்,
அலைபேசியில் வரும் வர்த்தக
அழைப்புக்கள், பெரு நிறுவன
சேவைகள் , வங்கி சேவைகள்
அழைப்புகள் என அனைத்திலும்
நன்றி வணக்கம் என்பதை கேட்க
முடிவதில்லை .
ஒரு நிறுவனத்தை நாம்
அழைத்து பேசினாலும் அவர்கள்
நம்மிடம் வணக்கம் மற்றும்
நன்றி என்று சொல்வதே இல்லை .
மீறி நாம் நன்றி சொன்னாலும்
பதிலுக்கு அவர்கள்
நன்றி சொல்வதே கிடையாது.
பள்ளிகளில்
மாணவர்களுக்கு முதலில்
இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய
ஆசியர்களும் இதை மாணவர்களிடம்
கொண்டு செல்வதில்லை . இதனால்
தமிழ் குழந்தைகள் இந்த தமிழர்
பண்பாட்டு சொற்களை மறந்தே
போனார்கள் . இது எவ்வளவு பெரிய
இழிநிலை. தமிழின் மிக
முக்கியமான இந்த
பண்பாட்டு சொற்கள் தமிழர்
வழக்கத்தில்
இருந்து மறைந்து வருவது எவ்வளவு
பெரிய வேதனை .
ஆகவே தமிழர்களே , இந்த
சொற்களை நாம் மீட்டெடுக்க
வேண்டும்.
இவைகளை பயன்பாட்டில் மீண்டும்
கொண்டு வருதல் அவசியம் .
அது நம் கையில் தான் இருக்கிறது.
ஆங்கிலம் அலுவல் மொழியாக
இருக்கும் அலுவலகங்கள் கூட இந்த
தமிழர்
பண்பாட்டு சொற்களை பயன்படுத்துதல்
வேண்டும் . பள்ளி , கல்லூரிகள்,
இல்லங்களில் , அலுவலங்கள் என
அனைத்திலும் நன்றி வணக்கம் என்ற
தமிழர் பண்பாட்டு சொற்கள் ஒலிக்க
வேண்டும். நம் மொழியில் ஆயிரம்
கலப்பு சொற்கள் உள்ளே வந்தாலும்.
இந்த இரு முக்கியமான
பண்பாட்டு சொற்களை தமிழர்கள்
என்றும் எப்போதும் மறக்கக் கூடாது .
இதை இன்றிலிருந்து
செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம்...
நன்றி வணக்கம் !

No comments:

Post a Comment