மாணவர்களுக்கு படிப்பை விட்டால்
விளையாட்டுதான் தெரியும்,
எப்போதும் விளையாடிக்
கொண்டிருப்பதையே அவர்கள்
விரும்புகிறார்கள் அந்த
விளையாட்டிற்கு தடை
ஏற்படும்போது தடை
போடுகிறவர்களை பகையாளியாக
பார்க்கிறார்கள்,
விளையாட்டிற்கு படிப்பு ஒரு
தடையாகி விடுகிறது,
விளையாட்டை விட்டுவிட்டுதான்
படிக்க வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது,
விளையாட்டை துறந்து படிப்பதை
விட, படிப்பை துறந்து
விளையாடுவதிலேயே ஆர்வம்
காட்டுகிறார்கள்
சக வயது நண்பர்களோடு சேர்ந்து,
எந்த கட்டுபாடுகளும் இல்லாமல்
மகிழ்ச்சி கடலில் குளிப்பதற்கான
ஒரு இடம்
விளையாட்டு மைதானம்தான். மனம்
விரும்பிய ஆட்டமெல்லாம்
ஆடமுடியும்,
கட்டுபாடுகளை கடந்து தடைபோட
யாருமில்லாத ஒரு களமாக
இருப்பது விளையாட்டு மைதானம்
மட்டும்தான் அதை வேண்டாம்
என்று உதறிப்போட எந்த
மாணவனுக்கும், எந்த
இளைஞனுக்கும் மனம் வராது
இடைவிடாமல் விளையாடும்
மாணவன் படிப்பில் நிச்சயமாக
கோட்டை விடுவான், எந்த
பாடத்திலும் சரியான மதிப்பெண்
வாங்க முடியாது, அவன்
படிப்பிற்கு தடையாக
இருப்பது விளையாட்டுதான்
என்பதை பெற்றோர்கள்
புரிந்து கொள்கிறார்கள் அதன்
பிறகுதான்
விளையாட்டிற்கு பெரும்
தடை ஏற்படுகிறது, கட்டளைகளும்,
கட்டுப்பாடுகளும் அவன்
முன்னே வந்து விழுகிறது,
தன்னை கட்டப்பட்டுள்ளதாக
உணருகிறான்.
இத்தனை கட்டுப்பாடுகள்
வந்தபோதும் மனம் தடைசெய்யப்பட்ட
விளையாட்டிற்காகவே ஏங்கி
தவித்துக்கொண்டிருக்கும்
படிப்பில் ஆர்வமுள்ள மாணவன்
சற்று உட்க்கார்ந்து படிக்க
ஆரம்பிப்பான் ஆர்வமில்லாதவன்
சற்று கண் தப்பினாலே மறுபடியும்
விளையாட்டுத்திடலுக்கு
பறந்துவிடுவான். பெற்றோர்கள்
பார்க்காத நேரத்தில்
விளையாடிவிட்டு அவர்கள்
முன்பாக படிப்பதைப் போல
பாவனை செய்வான், மனமெல்லாம்
விளையாட்டை பற்றியே யோசித்துக்
கொண்டிருக்கும். படிக்க
விருப்பமில்லையென்றாலும்
ஒரு நிர்ப்பந்தத்திற்காக
புத்தகத்தை பார்த்துக்கொண்டிருப்பான்
இங்கே மாணவர்கள் எதை யோசிக்க
வேண்டும்? நல்ல மதிப்பெண்
வாங்கும் மாணவர்களை பெற்றோர்கள்
பெரும்பாலும்
விளையாடாதே என்றெல்லாம்
கட்டளை போடமாட்டார்கள்,
மதிப்பெண் குறையும்போதுதான்
இந்த தடைகள் ஏற்படுகிறது.
விளையாடி முடித்து வீட்டிற்கு
வந்தபிறகும் விளையாட்டுத்தனமாக
இல்லாமல் படிக்க ஆரம்பிக்கலாம்,
இப்போது படிக்கும் கல்விதான்
பின்னாளில் சமுதாயம் அங்கீகரிக்கக்
கூடிய ஒருவனாக நம்மை மாற்றும்,
கல்வியறிவில்லாமல், நல்ல
வேலை கிடைக்காமல் கையேந்தும்
நிலை வரக்கூடாது என்பதற்காகவே
பெற்றோர்கள் படிக்க சொல்கிறார்கள்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
படிப்பு மட்டுமல்லாது படிப்போடு
வேறு திறமைகளையும் வளர்த்துக்
கொள்ளுங்கள் எதிர்கால கலைஞர்கள்,
அறிஞர்கள், கவிஞர்கள்,
விஞ்ஞானிகள் உங்களிலேதான்
உள்ளார்கள்.
சில மாணவர்களுக்கு நன்றாக
படிக்கும் அல்லது ஒழுக்கமுள்ள
மாணவனை கண்டால் பிடிக்காது,
அவனை ஏளனமாகவே பார்ப்பார்கள்,
கிண்டல் செய்வார்கள் கடைசியில்
அந்த மாணவன் உயர்ந்த நிலையில்
வரும்போது அவனை கிண்டல்
செய்தவர்கள்
அவனிடமே கைகட்டி வேலை
செய்யும் நிலை ஏற்படலாம்,
இவ்வாறில்லாமல்
ஒவ்வொரு மாணவனும் நல்ல
நிலையில் வரவேண்டும்
என்பதற்காகதான் பெற்றோர்கள் படிக்க
சொல்கிறார்கள்
மாணவர்கள் சற்று யோசியுங்கள்
விளையாட்டு என்பது முக்கியம்
அதைப்போலவே படிப்பும்
முக்கியம்தான்.
விளையாடுவதற்கு நேரம்
எடுத்துக்கொள்வதைப் போல
படிப்பதற்கும் நேரமெடுத்துக்
கொள்ளுங்கள். விளையாட
விளையாட விளையாட்டில் ஆர்வம்
ஏற்படுவதை போல, படிக்க படிக்க
படிப்பிலும் ஆர்வம் வந்துவிடும்
ஏன்
படிப்பையே ஒரு விளையாட்டாக
நினைத்து படபடப்பில்லாமல்
சும்மா படியுங்கள் நாளைய உலகம்
உங்கள் கையில் வந்து விடும்.
Tuesday, 5 November 2013
விளையாடியது போதும்
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment