Tuesday, 5 November 2013

சமையல் குறிப்பு 1

சமையல் குறிப்புகள் .
காய்கறிகளில் உப்பு அதிகமா?
காய்கறிகள் சமைக்கும்போது அதில்
உப்பு அதிகமாக சேர்த்து விட்டால்,
கோதுமை மாவை உருட்டி அதில்
தோய்த்து எடுக்கவும். அதேபோல்
ஏதோ ஒன்றில் காரம் அதிகமாக
சேர்த்துவிட்டால் காரத்தை குறைக்க
எலுமிச்சை சாற்றை சில சொட்டுகள்
விடவும். இறைச்சி மிருதுவாக
இருக்க... சமைக்கப்படாத
பச்சை இறைச்சியை மிருதுவாக்க
எலுமிச்சையை தேய்க்கலாம்
அல்லது வாழையிலையில்
சுற்றி வைக்கலாம்.
தக்காளிகளை கெடாமல் பாதுகாக்க...
தக்காளிகளை கெடாமல் பாதுகாக்க,
ஐஸ் தண்ணீரில்
சிறிதளவு உப்பை சேர்த்து அதிகம்
பழுத்த தக்காளிகளை அதில்
போட்டு வைக்கலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது...
எலுமிச்சை சாதம் செய்யும்
போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை சேர்த்தால் மிகவும் ருசியாக
இருக்கும். கண்ணீர் வராமல்
வெங்காயம் நறுக்க... வெங்காயம்
நறுக்கும்போது கண்ணீர் வராமல்
இருப்பதற்கு, நறுக்க வேண்டிய
வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில்
வைத்த பின்னர் நறுக்க
ஆரம்பிக்கலாம். பால் புளிக்காமல்
இருக்க... பால் புளிக்காமல்
இருப்பதற்கு, ஏலக்காயை பால்
காய்ச்சும் போதே அதனுடன்
சேர்க்கவும். அவ்வாறு செய்தால்
நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல்
இருக்கும். முட்டை கெடாமல்
இருக்கிறதா என்பதை அறிய...
ஒரு முட்டையானது கெடாமல்
புதியதாக
இருக்கிறதா என்பதை அறிவதற்கு,
அந்த முட்டையை குளிர்ந்த
உப்பு தண்ணீரில் முழுகும்படியாக
வைக்கவும்.
முட்டையானது முழுகாமல்
மேலே வந்தால் அதை நீங்கள்
தூக்கி எறியலாம். அது தண்ணீரில்
மூழ்கினால் அதை சமையலில்
பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற தோசை...
வீட்டில்
சர்க்கரை நோயாளி இருந்தால்
சோயாபீன்ஸ் 1 கிலோ,
புழுங்கலரிசி 1 கிலோ,
உளுந்து 200 கிராம்
சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக்
கொண்டால் தேவைப்படும்
போது தோசை வார்த்து சாப்பிடலாம்.
சுவை மாறாமல் இருக்க... கேரட்,
பட்டாணி, பீட்ரூட் மற்றும்
மக்காச்சோளம் போன்றவற்றை வேக
வைக்கும் போது, கொஞ்சம்
சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவற்றின்
சுவை மாறாமலே இருக்கும்.
வெங்காயம் பிடிக்காதா?
வெங்காயத்தின் சுவை உங்களுக்கு
பிடிக்கவில்லையென்றால்,
அதற்கு பதில்
முட்டைகோஸை சமையலுடன்
சேர்த்துக் கொள்ளலாம். இந்த
சுவை கண்டிப்பாகப் பிடிக்கும்.
மேலும் படிக்கவும்
மறுமொழி இல்லை
பண் த பாலா
03-11-2013
சமையல் குறிப்புகள் .
சாம்பார் நிறமாகவும் மணமாகவும்
இருக்க. சாம்பாரில் இரண்டு,
மூன்று தக்காளியை மிக்ஸியில்
போட்டு அரைத்து போடுங்கள்.
சாம்பார் நிறமாகவும் மணமாகவும்
இருக்கும். கேரட்
நறுக்கும்போது...கேரட்டில்
வைட்டமின் `ஏ' சத்து அதிகம்
உள்ளதால் அவைகளை சமையல்
செய்யும்போது மட்டுமே சுத்தமாக்கி
நறுக்க வேண்டும்.
கேரட்டை நறுக்கி வெகுநேரம்
வைக்கக்கூடாது.
உருளைக்கிழங்கு கறி
செய்யும்போது... வீட்டில்
உருளைக்கிழங்கு கறி
செய்யும்போது தீய்ந்துவிடாமல்
இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரையைப்
பாதி வேக்காட்டில் தூவுங்கள்.
கறி தீய்ந்து போகாமல் இருக்கும்.
கூட்டுக் கறிகள் மணமாக இருக்க...
வீட்டில் வறுத்த
புழுங்கலரிசியை மாவாக்கி
வைத்துக் கொண்டால், கூட்டுக்
கறிகளை இறக்கும்போது லேசாகத்
தூவி இறக்கினால், மணம்
கூடுதலாக இருக்கும். பீட்ரூட்
பொரியல் செய்யும்போது..
தனி பீட்ரூட் பொரியல்
செய்வதை விட பீட்ரூட் உடன் கேரட்,
உருளைக்கிழங்கு மூன்றையும்
சேர்த்து வதக்கினால் மூன்று கலர்
இருக்கும். ருசியும் அதிகமாய்
இருக்கும். குழந்தைகளும்
விரும்பி சாப்பிடுவார்கள்.
வெங்காய சாலட் சுவையாக
இருக்க..வெங்காய சாலட்
செய்யும்போது அத்துடன் துருவிய
தேங்காய்ப் பூவைக்
கலந்து கொண்டால், அதன்
சுவையே தனியாக இருக்கும்.
உப்பு அல்லது காரம் அதிகமானால்..
சாம்பார், வற்றல் குழம்பு,
கூட்டு இவைகளில்
உப்பு அல்லது காரம்
அதிகமாகிவிட்டால்
ஒரு தக்காளிப்பழத்தை சிறு
துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக்
கொதிக்க வையுங்கள். எல்லாம்
சரியாகிவிடும். ஊறுகாய் கெடாமல்
இருக்க... எந்த ஊறுகாய்
தயாரித்தாலும் தொக்குத்
தயாரித்தாலும், அதில் தூள்
உப்பு போட்டு விடாதீர்கள்.
அப்படிச் செய்தால் சீக்கிரம்
கெட்டுவிடும். கல் உப்புதான்
இதற்கு ஏற்றது. சாம்பார் மணமாக
இருக்க... வீட்டுச் சாம்பார், ஹோட்டல்
சாம்பாரைப் போல் மணக்க
வேண்டுமா? சாம்பார்
செய்யும்போது சிறிய வெங்காயம்
மட்டும் போதாது. அதோடு 2 பெரிய
வெங்காயமும் நறுக்கி வதக்கிப்
போடுங்கள்.
சாம்பாருக்கு அரைத்துவிடும்
சாமானில் ஒரு ஸ்பூன் வறுத்த
கசகசா,
பொட்டுக்கடலை இரண்டையும்
சேர்த்து வதக்கிய வெங்காயத்தில் 7,
8 போட்டு அரைத்துக் கொட்டுங்கள்.
இறக்கும்போது 2 ஸ்பூன்
கடலை மாவைக் கரைத்து இறக்கவும்.
கறிவேப்பிலை வாடாமல் இருக்க...
ஹாட்பாக்ஸில் ஈரம் இல்லாமல்
கறிவேப்பிலையை உருவிப்
போட்டு இறுக்கமாக
மூடி வைத்தால், இரண்டு நாட்கள்
ஆனாலும் வாடாமல்
அப்போது பறித்தது போல
இருக்கும். இறைச்சி வேக வைக்க...
சில சமயங்களில்
இறைச்சி எவ்வளவு நேரம் வேக
வைத்தாலும் வேகாது. ரப்பர் போன்ற
நிலையில் இருக்கும். இதனைச்
சாப்பிடவும் முடியாது.
இதனை சரி செய்ய பப்பாளிக்காய்
உதவும். இறைச்சியின் அளவில்
எட்டில்
ஒரு பங்கு பப்பாளிக்காயை வேகாத
இறைச்சியுடன்
சேர்த்து ஒரு ஆவி வேக வைத்தால்
போதும். இறைச்சி பஞ்சு போல
ஆகி சாப்பிடவும் ருசியாக
இருக்கும். எலுமிச்சம்பழ சாதம்
செய்யும்போது... வீட்டில்
எலுமிச்சம் பழச் சாதம்
தயாரிக்கும்போது சுடு சாதத்தில்
பழரசத்தைக் கலக்கக் கூடாது.
அதே போல் ரசம் தயாரிக்கும் போதும்
ரசம் நன்றாக ஆறியவுடன் தான்
பழரசத்தைப் பிழிய வேண்டும்.
இல்லாவிட்டால், பழரசத்தின் குணம்
மணம் சத்து எல்லாமே பாழாய்ப்
போய்விடும். இன்னமும் சொல்லப்
போனால் கசந்துவிடும்.
ரொட்டி உலர்ந்து இருக்கிறதா?
வீட்டில் உலர்ந்த ரொட்டி, ரஸ்க்
இவை மீதமிருந்தால்,
அவற்றை மிக்ஸியில்
அரைத்து அந்த
துகள்களை எப்போதும் கைவசம்
வைத்திருங்கள். வறுவல்,
கூட்டு இவற்றில் உப்பு, காரம்
அதிகமாகிவிட்டால், பிரெட்
அல்லது ரஸ்க் தூளைச்
சிறிது தூவி, அதிகமாகிவிட்ட
உப்பு- காரத்தை சரி செய்யலாம்.
சப்பாத்திக் குருமா செய்யும்போது...
வீட்டில் சப்பாத்தி சாப்பிடும்
உங்களுக்கு, ஹோட்டலிலில்
இருப்பது போல் குருமா ருசியாக
சாப்பிட வேண்டும் என்று ஆசையா?
குருமா செய்யும்போது கேரட்,
பீட்ரூட்டுடன் பப்பாளிக்காயையும்
நறுக்கிப் போடடு, பட்டை, சோம்பு,
தேங்காய் அரைத்துப் போட்டுக்
குருமா செய்தால் நன்றாக இருக்கும்.
சப்பாத்தி சூடாக இருக்க...
சப்பாத்தியைச் சூடாக
எடுத்து வைக்க வடிகட்டி தட்டை
உபயோகப்படுத்தினால் அடியில்
வைத்த சப்பாத்திகள் ஆவியினால்
சொதசொதவென்று ஆவதைத்
தவிர்க்கலாம். தக்காளி சாதம்
செய்யும்போது... தக்காளி சாதம்
செய்யும்போது, அதில்
சிறிது மசாலாப் பொடியைத்
தூவிவிடுங்கள். தக்காளிசாதம்
சப்பென்ற
நிலைமை மாறி சுவையுடன்
கூடியதாக இருக்கும். கேரட்
கெடாமல் இருக்க...
கேரட்டை வாங்கி வந்தவுடன்
தண்ணீர் பக்கெட்டில்
போட்டு வைத்துவிடுங்கள்.
இரவு நேரத்தில்
தண்ணீரிலிருந்து எடுத்துவிடவும்.
மறுநாள் காலை தண்ணீரில்
போட்டு வைக்கவும். இந்த
முறையைப் பின்பற்றினால்
ஒரு வாரம் வரையில் கேரட்டைப்
பாதுகாக்கலாம்.பிரிட்ஜில் வைத்தால்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்
ஊற்றி அதில் கேரட்
போட்டு வைக்கவும். குழைந்த
சாதத்தை டிபனாக செய்யலாம்...
காலையில் செய்த சாதம் மிகவும்
குழைந்து போனால், மாலையில்
அதைக் கொண்டு ஒரு எளிய டிபன்
செய்துவிடலாம். உளுத்தம்
பருப்பை மட்டும் ஊற
வைத்து நன்கு அரைத்து, அத்துடன்
குழைந்த சாதம் பச்சைமிளகாய்,
இஞ்சி, பெருங்காயம்,
கறிவேப்பிலை, உப்பு இவற்றைப்
போட்டுப்
பிசைந்து இட்லிக்கு மாவு
அரைக்கும்போது... கிரைண்டரில்
இட்லிக்கு மாவு அரைக்கும்போது
ஐஸ்வாட்டர்
ஊற்றி அல்லது ஐஸ்கட்டிகளைப்
போட்டு அரைத்தால் கிரைண்டரில்
சுழற்சியால் ஏற்படும் சூட்டைத்
தவிர்த்து வெயில் காலத்தில்
மாவு அதிகம் புளிக்காமல் இட்லி,
தோசை பதமான ருசியுடன்
கூடியதாக இருக்கும். ரமழான்
ஸ்பெஷல்: நோன்புக்
கஞ்சி சமைப்பது எப்படி?
தேவையானப் பொருட்கள் அரிசி -
ஒரு கப் கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் -
ஒரு தேக்கரண்டி கோதுமை குருணை
- கால் கப் கொத்து கறி - 100 கிராம்
பெரிய வெங்காயம் -
ஒன்று தக்காளி - 2 பச்சை மிளகாய் -
5 மல்லித் தழை - 2
கொத்து புதினா - 2 கொத்து இஞ்சி,
பூண்டு விழுது -
ஒரு மேசைக்கரண்டி உப்பு -
அரை மேசைக்கரண்டி +
ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி பட்டை -
ஒன்று கிராம்பு - 4 எண்ணெய் - 2
மேசைக்கரண்டி ஊரவைத்த
ஜவ்வரிசி அல்லது சேமியா -
சிறிதளவு கடைசியில்
சேர்த்துக்கொள்ளலாம் (added by
adiraixpress)
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்
கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக
நறுக்கவும்.
பச்சை மிளகாயை காம்பு எடுத்து
விட்டு முழுதாக எடுத்துக்
கொள்ளவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில்
போட்டு ஒரு கப் தண்ணீர்
ஊற்றி திக்கான பால்
பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர்
ஊற்றி பிழிந்து தண்ணீப் பால்
எடுத்துக் கொள்ளவும். கடலைப்
பருப்பு, வெந்தயம்,
கோதுமை குருணை மூன்றையும்
தனித்தனியாக 2 மணிநேரம் ஊற
வைக்கவும். வாணலியில்
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும், கொத்திய
கறியை போட்டு அதனுடன் இஞ்சி,
பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
போட்டு ஒரு நிமிடம்
வதக்கி விட்டு, வாணலியை மூடி,
தீயை குறைத்து வைக்கவும். 2
நிமிடம்
கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் ஊற்றவும். கிராம்பு,
பட்டை, நறுக்கின வெங்காயம்
போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
மீண்டும்
ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு
விழுது போட்டு வதக்கி, நறுக்கின
தக்காளி, மல்லித் தழை, புதினா,
பச்சை மிளகாய் போட்டு 2 1/2
நிமிடம் வதக்கவும். எல்லாம்
வதங்கிய பின்னர் இரண்டாவதாக
எடுத்த தண்ணீர் தேங்காய்
பாலை ஊற்றவும். அதனுடன் ஊற
வைத்த கோதுமை குருணை,
வெந்தயம், கடலைப்
பருப்பு போட்டு மேலும் ஒரு கப்
தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
அரிசியை களைந்து வைத்துக்
கொள்ளவும். வாணலியில்
பருப்பு வெந்து,
பொங்கி நுரைத்து வரும்
போது அரிசியை போட்டு 7 கப்
தண்ணீர் ஊற்றி,
உப்பு போட்டு கலக்கி மூடி
விடவும். பழைய அரிசியாக
இருந்தால் நிறைய தண்ணீர்
சேர்க்கலாம். இடையிடையில்
திறந்து கிளறி விடவும்.
கிளறாமல் இருந்தால்
அடி பிடித்து விடவும்.
நன்கு வெந்ததும் திக்கான
தேங்காய்ப்பால் அரை கப்
ஊற்றி கிளறி விடவும். தேங்காய்
பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும்
இறக்கி விடவும்.
மேலே கொத்தமல்லி தழையினைத்
தூவவும்.

No comments:

Post a Comment