ஆரோக்கியமான
உணவுகள்
அனைத்தையும்
எப்போதுமே நன்மையை மட்டும் தான்
விளைவிக்கும் என்ற நினைத்தால்
அது தவறு.
ஏனெனில் சில உணவுகள் உயிர்
போகும் அளவிலான தீமையை கூட
விளைவிக்கலாம்.
எப்படியெனில் நாம் உண்ணும்
ஒவ்வொரு உணவிலும்
உயிருக்கு தீங்கு விளைவிக்கும்
வகையில் ஒரு குறிப்பிட்ட
கெமிக்கல்கள் இருக்கிறது.
ஆனால் அதைப் பற்றி யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அந்த உணவுகளை இங்கு
பட்டியலிட்டுள்ளோம்.
இந்த உணவுகளை சாப்பிட்டால்
உடனே உயிர் போகாது. மாறாக,
வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்.
குறிப்பாக இந்த
உணவுகளை தவறான முறையில்
சாப்பிட்டால் தான்,
ஆபத்தை விளைக்கும்
என்பதை மனதில் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு:
பெரும்பாலானோருக்கு பிடித்த
உருளைக்கிழங்கு கூட
ஆபத்தானவை தான். அதுவும் இந்த
உருளைக்கிழங்கின்
விஷமானது தண்டு மற்றும்
இலைகளில் தான் இருக்கும்.
மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக
இருந்தால், அதில்
க்ளைக்கோ அல்கலாய்டு என்னும்
விஷம் நிறைந்திருக்கும்.
அப்போது அதனை உட்கொண்டால்,
உடலின் சக்தியானது கொஞ்சம்
கொஞ்சமாக குறைந்து,
கோமா வரை கொண்டு செல்வதோடு,
சில நேரங்களில்
திடீரென்று இறப்பிற்கு
வழிவகுக்கும்.
ஆப்பிள்:
என்ன அதிர்ச்சியாக உள்ளதா?
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,
ஆரோக்கியமாக இருக்கலாம்
என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஆனால் அந்த ஆப்பிளின்
விதையை சேர்த்து சாப்பிட்டால்,
வாழ்நாளின் எண்ணிக்கை தான்
குறையும். ஏனெனில் ஆப்பிளின்
விதையில் சையனைடு என்னும்
ஆபத்தான விஷம் உள்ளது.
ருபார்ப்:
இந்த மூலிகை இயற்கையாகவே
அதிகப்படியான விஷத்தைக்
கொண்டிருக்கும்.
பொதுவாக இதன்
வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல்
பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த
மூலிகையின்
இலையை சாப்பிட்டால்,
உடனே உயிர் போய்விடும்.
செர்ரி:
பெரும்பாலான மருத்துவர்கள்
செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல்
ஆரோக்கியமாக இருக்கும்
என்று சொல்வார்கள். இருப்பினும்
இந்த பழங்களிலும் கவனமாக இருக்க
வேண்டும்.
ஏனெனில் செர்ரிப் பழங்களில்
இலை மற்றும் கொட்டைகளில் தான்
விஷம் உள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்த
முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும்
பீச் போன்றவற்றை சாப்பிடும் போது,
அதன் விதையை வாயில்
போட்டு மெல்ல வேண்டாம்.
பாதாம்:
பாதாம் ஆபத்தான உணவுப் பொருள்
என்று சொன்னால், பலரும் நம்ப
மாட்டார்கள்.
ஆனால் உண்மையில் கசப்பாக
இருக்கும் பாதாமை சாப்பிட்டால்,
அதில்
சையனைடு உள்ளது என்று அர்த்தம்.
ஆகவே பாதாமை பச்சையாக
சாப்பிடுவதை விட, அதனை ஊற
வைத்து அல்லது வறுத்து
சாப்பிடுவது தான் சிறந்தது.
இதனால் அதில் உள்ள விஷம்
வெளியேறிவிடும்.
பஃப்பர் மீன்(Puffer Fish):
மீன் ரொம்ப பிடிக்குமா?
அப்படின்னா பஃப்பர் மீன்
சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில்
மிகவும் கொடிய விஷம் உள்ளது.
இதனை ஈரலுடன் எண்ணெயில்
போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த
விஷம் மீனில் பரவி,
உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
காளான்:
காளான் மிகவும் பிரபலமான மற்றும்
சுவைமிக்க உணவுப் பொருள்.
இத்தகைய காளானில் நிறைய
வெரைட்டிகள் உள்ளன.
அதில் சில காளான்களில்
விஷமானது அதிக அளவில்
இயற்கையாகவே நிறைந்துள்ளது.
ஆகவே காளான் வாங்கி சாப்பிடும்
போது, சரியான
காளானை தேர்ந்தெடுத்து
சாப்பிடுங்கள், இல்லாவிட்டால்
உயிரை விட நேரிடும்.
No comments:
Post a Comment