Monday, 18 November 2013

கருவில் இருக்கும் குழந்தை ஆரோககியமாக வளரணுமா?

பெரும்பாலும் 70 சதவீத
பெண்களுக்கு தங்கள்
குழந்தை ஆரோக்கியமாக
பிறக்குமா என்ற சந்தேகம்
ஏற்படுகிறது. நீரிழிவு,
தைராய்டு போன்ற நோய் இருக்கும்
தாயின் கருவில் இருக்கும்
குழந்தைக்கு குறைபாடு ஏற்படலாம்.
மனித உடல 46
குரோம்மோசோம்களால்
உருவாக்கப்பட்டது. இதில்
பாதி தாயிடமிருந்தும்
மீதி தந்தையிடமிருந்தும்
வருகின்றன.
மேலும் நமது உடலில் 25 முதல் 35
ஆயிரம் ஜீன்கன் இருப்பது தெரிய
வந்துள்ளது. இவற்றில்
எந்தவொரு மரபணுவில் சிறிய
கோளாறு இருந்தாலும்
அது சிசுவை பாதிக்கும்
வாய்ப்புள்ளது. தாய்,
தந்தை இருவருக்கும்
ஆரோக்கியமான ஜீன்கள் இருந்தாலும்
சில சமயம் குழந்தைக்கு நோய் ஏற்பட
வாய்ப்புண்டு.
இதற்கான காரணம் கர்ப்ப காலத்தில்
எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள்
தான். இது ஜீன்களில்
மாறுதல்களை ஏற்படுத்தக்கூடும்.
அதனால் சில நோய்கள்
குழந்தைக்கு குறைபாட்டை
ஏற்படுத்தும்.
அவற்றில் சில: சிகில் செல்
அனீமியா, நுரையீரல் சிஸ்டிக்
பைப்ரோசிஸ், பேமிலியில்
டிஸ்டோனியா, மெனிங்கோசீல்
(மூளை லேயரில்
இருந்து மூளை வெளியே வந்து
விடுதல்), தலை சிறியதாக
இருத்தல், தலை உருவாகாமல்
இருப்பது,
முதுகுத்தண்டு பகுதியில்
கட்டி ஏற்படுவது. வயிற்றில்
குடல்பகுதி வெளியே இருப்பது,
இரண்டு தலை உருவாகுதல்,
ஹீமோபீலியா,
தலசீமியா போன்றவை.
35 வயதுக்கு மேல் கருவுறும்
பெண்கள், முதல்
மூன்று மாதங்களுக்கு ஏதேனும்
மருந்து சாப்பிட்டவர்கள், கர்ப்பம்
தரிக்கும் முன்பே நீரிழிவு நோய்
உள்ளவர்கள்,
அடிக்கடி கருச்சிதைவு
ஏற்பட்டவர்கள்
மரபணு சோதனையை அவசியம்
செய்ய வேண்டும்.
கர்ப்பகாலத்தில் போது முறையான
பரிசோதனைகள் செய்வதன் மூலம்
கருவில் உள்ள குழந்தையின்
முறையான
வளர்ச்சியை மட்டுமல்லாமல்
குழந்தைக்குள்ள
பிறவிக்குறைபாடுகளையும்
தெரிந்து கொள்ள முடியும்.
* இதற்கிடையில் முதலில்
குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக்
பெயரை வைத்து பேசலாம். நிறைய
பெற்றோர்களுக்கு என்ன
குழந்தை என்று தெரியாமல்
எப்படி பெயர்
வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும்.
ஆனால்
இதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது தான் குழந்தைக்கு ஏதேனும்
ஒரு செல்லப் பெயரை,
அதாவது இரு பாலினத்திற்கும்
பொதுவான ஏதேனும் ஒரு செல்லப்
பெயரை வைத்து அழைக்கலாம்.
வேண்டுமென்றால் இந்த
பெயரை பிறந்த பிறகு மாற்றிக்
கொள்ளலாம்.
* தாயானவள் முதலில்
குழந்தையிடம் பேச வேண்டும்.
இது ஒரு பழைய நம்பிக்கை தான்,
இருப்பினும் குழந்தைக்கு தாயின்
குரலானது மிகவும் பிடிக்கும்.
அப்படி பேசுவதால்
குழந்தையானது அமைதியுடன்,
தாயின் குரலைக் கேட்டுக்
கொண்டு நிம்மதியாக இருக்கும்.
மேலும் இப்படி பேசுவதால்
பிறக்கும் போது அழும்
குழந்தை கூட தாயின்
குரலை கேட்டதும் அழுகாமல்
இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்
பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக
இருக்கும். மேலும் கருவில்
இருக்கும் குழந்தைக்கு மென்மையான
பாட்டுக்கள் என்றால் மிகவும்
பிடிக்கும். ஆகவே வீட்டில்
ஏதேனும் ஒரு மென்மையான
பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட்
செட்டை வயிற்றில் வைக்கலாம்.
அப்படி பாட்டுக்களை கேட்கும்
போது குழந்தை வயிற்றில்
உதைத்தால் அது சந்தோஷத்தில்
நடனம் ஆடுகிறது என்று அர்த்தம்
ஆகும்.
* மேலும் குழந்தை கருவில்
இருக்கும் போது எப்போதும்
பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச
வேண்டும். இதனால்
குழந்தையானது பிறந்த பின்னும்
எப்போதும் பாசிட்டிவ்-
ஆகவே யோசிக்கும். மேலும்
தாயானவள் எப்போதும் சந்தோஷமாக
இருக்க வேண்டும். அதனால்
குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
* அனைத்து தாய்க்கும்
குழந்தை வயிற்றில் உதைக்கும்
போது கணவர் அதை உணர
வேண்டும் என்று நினைப்பர்.
அப்படியே அவர்களது கணவரும்
ஆசைபடுவர்.
ஆகவே அப்படி உதைக்கும் போது,
குழந்தையின் தந்தையும்
குழந்தையிடம் அடிக்கடி பேச
வேண்டும். அப்போது தான் தாய்க்குப்
பின் தந்தை தூக்கினாலும்
குழந்தை இது தான்
தந்தை என்பதையும்
புரிந்து கொள்ளும். மேலும்
இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும்
போது தந்தை அதை நன்கு உணர,
அவருக்கும் அந்த பிரசவத்தின்
அற்புதமும் நன்கு புரியும்.எனவே,
இப்படியெல்லாம் நடந்து பாருங்கள்,
குழந்தை ஆரோக்கியமாக
புத்திக்கூர்மையுடன் பிறக்கும்
என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment