Monday, 11 November 2013

கலப்பட உணவை கண்டறிவது எப்படி.

கடைகளில் நாம் நம்பி வாங்கும்
உணவுப் பொருள்களில் நம்
கண்ணால் கண்டுபிடிக்க முடியாத
படி பலவகையான கலப்படங்கள்
சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல்
அதை காசு கொடுத்து வாங்கி உண்டு
நம் உடல் நலத்தை கெடுத்துக்
கொள்கிறோம். தவறான வழியில்
காசு சம்பாதிக்க மக்கள்
உயிரோடு விளையாடும் இந்த
கயவர்கள் எப்படியெல்லாம்
உண்ணும் உணவில் தரமற்ற
ஆபத்தான
பொருட்களை கலக்கிறார்கள்?
அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்
பெருங்காயத்தில் பிசின்
அல்லது கோந்துகளுக்கு மணம்
சேர்த்து கலப்படம் செய்கிறார்கள்.
சுத்தமான பெருங்காயத்தை நீரில்
கரைத்தால் பால் போன்ற கரைசல்
கிடைக்கும்.கலப்படமற்ற
பெருங்காயத்தை எரியச் செய்தால்
மிகுந்த ஒளியுடன் எரியும்.
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள்
சேர்க்கிறார்கள்.
சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ்
நீரில் கரைத்தால் அதில்
சுண்ணாம்பு இருந்தால் கிளாசின்
அடிப் பகுதியில் படியும்.
ஏலக்காயில் அதன்
எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவு
டர் சேர்க்கிறார்கள் இதை கையால்
தடவிப்பார்த்தால் முகப்பவுடர்
கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த
ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்
மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற
ரசாயனம் கலக்கிறாகள். அடர்
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில்
இந்த மஞ்சளை சிறிது கலந்தால்
மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
மிளகாய் தூளில்
மரப்பொடி ,செங்கல்
பொடி,Rodamine Culture மற்றும்
சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்க
ள். நீரில் கரைத்து சோதித்தால்
மரத்தூள் மிதக்கும் வண்ணப்
பொடி தண்ணீரில்
நிறமுண்டாக்கும்.செங்கல்
பொடி மிளாய் பொடியை விட
சீக்கிரம் கிளாசின் அடியில் போய்
செட்டில் ஆகிவிடும். 2 கிராம்
மிளாய் பொடியில் 5 ml acetone
சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம்
தோன்றினால் Rodamine Culture
கலப்படத்தை உறுதி செய்யலாம்.
காபித் தூளில்
சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த
நீரில் கலந்து குலுக்கினால்
காபித்தூள் மிதக்கும்
சிக்கரி கீழே படிந்து விடும்.
கொத்துமல்லி தூளில்
குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள்.
நீரில் கரைத்தால் குதிரைச்
சாணத்தூள் மிதக்கும்
கிராம்பில் அதன்
எண்னெயை எடுத்து விட்டிருப்பார்க
ள். எண்ணை நீக்கப்பட்ட
கிராம்பு சுருங்கி இருக்கும்
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள்
கொண்டு வண்ணம் ஊட்டப்
பட்டிருக்கும். கைகளில்
வைத்து தேய்த்தால் விரல்களில்
கருமை படியும்.
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,
வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-
மி.லி.ஹைட்றோ குளோரிக்
அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய
நெய்
கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம்
நன்றாக குலுக்கவும்
வனஸ்பதி கலந்திருந்தால்
பத்து நிமிடங்களுக்கு பின்
சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் மெட்டானில் (Metanil)
மஞ்சள் என்ற ரசாயனம்
கலக்கிறார்கள்.அடர்
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில்
இந்த மஞ்சளை சிறிது கலந்தால்
மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
ரவையில் இரும்புத் தூள்
கலக்கிறார்கள்
காந்தத்தை அருகே காட்டினால்
இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும்
கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில்
கரைத்தால் தண்ணீரில் வண்ணம்
கரையும்
பாலில்,நெய்யில் மசித்த
உருளக்கிழங்கு அல்லது பிற
மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட
பாலில் ஒரு சொட்டு டிஞ்சர்
அயோடின் சேர்த்தால் மர வண்ண
டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில்
யூரியா கலப்படம் செய்திருந்தால் 5
ml
பாலில்இரண்டு துளி bromothymol
blue சொலுசன்
கலந்து பத்து நிமிடம்
கழித்து நீலநிறமானால்
யூரியாகலந்திருப்பதை உறுதி செய்ய
லாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால்
ஒரு துளி பாலை வழ வழப்பான
செங்குத்து தளத்தில் வழிய
விட்டால் தூய பால்
வெள்ளை கோட்டிட்டது போல்
வழியும் கலப்பட பால் எந்த
அடையாளமும்
ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடு
ம். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய்
எல்லாம் சேர்த்து பால் போன்ற
செயற்கை பாலையும்
உருவாக்கி விடுகிறார்கள்.
தேயிலைத்தூளில் பயன்படுத்திய
பின் உலத்திய தூள்
செயற்கை வண்னமூட்டிய தூள்
கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர்
தாளில் தேயிலைத்
தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு,
பிங்க் புள்ளிகள் உண்டானால்
அதில் கலர்
சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள்
சேர்த்திருந்தால் காந்தம் மூலம்
கண்டுபிடிக்கலாம்
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன்
எண்ணெய் கலக்கிறார்கள்.
எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக்
ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக
ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில்
கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன்
கலப்படமிருந்தால் அரக்கு வண்ண
படிவு உண்டாகும்.
குங்குமப்பூவில் நிறம் மற்றும்
மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள
நார்கள் கலக்கிறார்கள்.தூய
குங்குமப்பூ எளிதில்
முறியாது கடினமாக இருக்கும்.
கலப்பட நார் எளிதில்
முறிந்து விடும்.
ஜவ்வரிசியில் மணல் மற்றும்
டால்கம் பவுடர் சேர்கிறார்கள்.
வாயிலிட்டு மென்றால் கல் நற
நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக
வைக்கும் போது தூய
ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட
பப்பாளி விதைகள், கருப்பு கற்கள்
சேர்க்கிறார்கள். முட்டை வடிவ
கரும்பச்சை பப்பாளி விதைகள்
சுவையற்றவை.
தேங்காய் எண்ணெயில் பிற
எண்ணெய்கள் கலக்கிறார்கள்.
தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில்
வைத்தால் உறையும் ஆனால்
கலந்த .பிற எண்ணெய்
உறையாது தனித்து இருக்கும்
"கம்பு "வில் பூஞ்சைகள்
கலக்கிறார்கள். உப்பு நீரில்
பூஞ்சைகள் மிதக்கும்.
இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)
தரங்குறைந்த கருவாய்
பட்டை (கேசியா) வில் வண்ணம்
சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட
வண்ணம் நீரில் கரையும்.
சாதாரண உப்பில் வெள்ளைக் கல்
தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள்
உப்பை தண்ணீரில் கரைத்தால்
சுண்ணாம்பு கலப்படம் இருந்தால்
தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய
உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் சர்க்கரை பாகு கலப்படம்
செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த
பஞ்சுத்திரியை தீயில் காட்டினால்
எரியும் கலப்பட தேனில்
எரியாது வெடி ஒலி உண்டாகும்
கடலை எண்ணெயில்
பருத்திக்கொட்டை எண்ணெய்
கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென்
கரைசல் சேர்த்து லேசாக
மூடி பொருத்தி கொதிநீரில் 30
நிமிடம்
சூடு படுத்தினா கலப்படமிருந்தால்
ரோஸ் நிறமுண்டாகும்
.
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர்
கலக்கிறார்கள். சில
துளி எலுமிச்சை சாறு அதில்
விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால்
இதை உறுதி செய்யலாம்.
முட்டை யில் டீ டிக்காசன் மூலம்
சாயம்
ஏற்றி நாட்டு கோழி முட்டியாக
விற்கிறார்கள்.
மாத்திரைகள் மருந்து பொருட்களில்
போலி மருந்துகள் நிறைய
புழக்கத்தில் உள்ளது நீங்கள்
வாங்கும் மருத்தினை http://
verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல்
தானா ,காலாவதியானதா என
சோதிக்கலாம்
விழிப்புணர்வு மூலம் மட்டும்
தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க
முடியும்.

No comments:

Post a Comment