Tuesday, 5 November 2013

சமையல் குறிப்பு

சமையல் குறிப்புகள் .
காய்கறிகளில் உப்பு அதிகமா?
காய்கறிகள் சமைக்கும்போது அதில்
உப்பு அதிகமாக சேர்த்து விட்டால்,
கோதுமை மாவை உருட்டி அதில்
தோய்த்து எடுக்கவும். அதேபோல்
ஏதோ ஒன்றில் காரம் அதிகமாக
சேர்த்துவிட்டால் காரத்தை குறைக்க
எலுமிச்சை சாற்றை சில சொட்டுகள்
விடவும். இறைச்சி மிருதுவாக
இருக்க... சமைக்கப்படாத
பச்சை இறைச்சியை மிருதுவாக்க
எலுமிச்சையை தேய்க்கலாம்
அல்லது வாழையிலையில்
சுற்றி வைக்கலாம்.
தக்காளிகளை கெடாமல் பாதுகாக்க...
தக்காளிகளை கெடாமல் பாதுகாக்க,
ஐஸ் தண்ணீரில்
சிறிதளவு உப்பை சேர்த்து அதிகம்
பழுத்த தக்காளிகளை அதில்
போட்டு வைக்கலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது...
எலுமிச்சை சாதம் செய்யும்
போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை சேர்த்தால் மிகவும் ருசியாக
இருக்கும். கண்ணீர் வராமல்
வெங்காயம் நறுக்க... வெங்காயம்
நறுக்கும்போது கண்ணீர் வராமல்
இருப்பதற்கு, நறுக்க வேண்டிய
வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில்
வைத்த பின்னர் நறுக்க
ஆரம்பிக்கலாம். பால் புளிக்காமல்
இருக்க... பால் புளிக்காமல்
இருப்பதற்கு, ஏலக்காயை பால்
காய்ச்சும் போதே அதனுடன்
சேர்க்கவும். அவ்வாறு செய்தால்
நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல்
இருக்கும். முட்டை கெடாமல்
இருக்கிறதா என்பதை அறிய...
ஒரு முட்டையானது கெடாமல்
புதியதாக
இருக்கிறதா என்பதை அறிவதற்கு,
அந்த முட்டையை குளிர்ந்த
உப்பு தண்ணீரில் முழுகும்படியாக
வைக்கவும்.
முட்டையானது முழுகாமல்
மேலே வந்தால் அதை நீங்கள்
தூக்கி எறியலாம். அது தண்ணீரில்
மூழ்கினால் அதை சமையலில்
பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற தோசை...
வீட்டில்
சர்க்கரை நோயாளி இருந்தால்
சோயாபீன்ஸ் 1 கிலோ,
புழுங்கலரிசி 1 கிலோ,
உளுந்து 200 கிராம்
சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக்
கொண்டால் தேவைப்படும்
போது தோசை வார்த்து சாப்பிடலாம்.
சுவை மாறாமல் இருக்க... கேரட்,
பட்டாணி, பீட்ரூட் மற்றும்
மக்காச்சோளம் போன்றவற்றை வேக
வைக்கும் போது, கொஞ்சம்
சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவற்றின்
சுவை மாறாமலே இருக்கும்.
வெங்காயம் பிடிக்காதா?
வெங்காயத்தின் சுவை உங்களுக்கு
பிடிக்கவில்லையென்றால்,
அதற்கு பதில்
முட்டைகோஸை சமையலுடன்
சேர்த்துக் கொள்ளலாம். இந்த
சுவை கண்டிப்பாகப் பிடிக்கும்.

No comments:

Post a Comment