Saturday, 30 November 2013

இந்திய மண்ணை அழிக்க அந்நியர் விதைத்த மரம்...

எல்லோருக்கும் பசுமைப்
புரட்சி நினைவு இருக்கும்.
வெள்ளையர்களிடம்
இருந்து விடுதலை பெற்ற பின்
நமது சொந்த காலில் நிற்கவேண்டிய
நிர்பந்தம் நமக்கு இருந்தது.
விவசாய நாடான நாம்
விவசாயத்தை முன்னேற்றவே நினைத்தோம்.
அதை பயன்படுத்திக் கொண்ட
அந்நியர்கள் “ இவ்விதைகளைத்
தூவினால் மட்டும் போதும் தண்ணீர்
ஊற்றத் தேவை இல்லை.
இவை வளர்ந்து மரமானால் இவற்றில்
இருந்து விறகுகள் நிறைய
கிடைக்கும். மரத்தை எரித்தால் நல்ல
கரியும் கிடைக்கும்“
என்று சொல்லி நமது ஆட்சியாளர்களை ஏமாற்றி ஹெலிகாப்டர்
மூலம் வளர்க்கப்பட்டது தான் சீமைக்
கருவேலம் என்று அழைக்கப்படும்
வேலிக்காத்தான்,ஓட
மரம்,முள்ளு மரம் ,இச்சீமைக்கருவேல
மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம்.
சீமைக்கருவேல மரங்கள் கருவேல
மரங்கள் போலல்ல மிகவும் கொடிய
நச்சுமரங்கள். இம்மரங்கள்
தரிசு நிலங்களில் வளரும்
என்று தான் எல்லோரும் நினைத்துக்
கொண்டிருப்போம் ஆனால்
இவை வளர்ந்ததனால் தான்
நமது நிலங்கள்
தரிசானது என்பதே உண்மை.

இவைகளிடம் அப்படி என்னதான்
நச்சுத்தன்மை இருக்கிறது என்று கேட்கிறீர்கள்
தானே....?

தரிசாக இருந்தாலும்
நிலத்தடி நீரை எப்படியாவது உறிஞ்சிக்கொண்டு வளர
வரம்பெற்று வந்தவை இந்த மரங்கள்.
மக்களுக்கும், விலங்குகளுக்கும்
மற்றும் பிற தாவரங்களுக்கும்
நீரின்றி வரண்டு காணப்படும்
இடங்களில் கூட
இவை செழித்து வளர்ந்திருப்பதை நீங்களே காணலாம்.
வெட்டிப் பிடுங்கி எறிந்தாலும்
மீண்டும்
முளைத்து வந்து செழிக்கும்
தன்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும்
இந்தச் சீமைக்கருவேல மரங்கள்
நிழல்தரும் அளவுக்குக்கூட மரமாக
வளராமல் பக்கவாட்டில் வளரும்.
நீரை ஆவியாக்கி வானத்திலேற்றி மழைக்குக்
காரணமாக இருக்க மரங்களை நாம்
வளர்க்க வேண்டும் என்று நாம்
அறிந்திருக்கிறோம். அதற்காகத்தான்
சாலையோர
மரங்களை நட்டு வைக்கிறோம்.
ஆனால் இந்த மரத்தில்
நீரை ஆவியாக்கும் தன்மை மிக
மிகக் குறைவு.
இது முளைத்திருக்கும் இடங்களில்
வேறு எந்தச் செடியும்
பெரியதொரு செழிப்பில் வளர
வாய்ப்பில்லை.

இவைகளால் வரும் முக்கியத்
தீமைகள்:

* மற்ற செடிகளை, மரங்களை வளர
விடாமல் தடுத்தல்,
* அவற்றின்
சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளுதல்,
* நிலத்தடி நீரை உறிஞ்சி அதன்
மட்டத்தைக் கீழிறக்குதல்,
*நீரை உறிஞ்சினாலும்
ஆவியாக்காமல்
தனக்குள்ளே பதுக்கிவைத்துக்
கொள்ளுதல்,
* நிழலுக்குக் கூடப் பயன் தராமல்
நிலத்தை பாழ்படுத்துதல்,
* வளரும்
நிலத்தை தரிசு நிலமாகவே வைத்திருத்தல்.

இப்படி எவ்வளவோ தீமைகளைத்
தரும் வேலிக்காத்தானை நாம் இருந்த
இடம் தெரியாம ஒழிக்க
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு புரட்சி செய்தாலன்றி நம்
நாட்டுச்
செழிப்பினை மீட்டு வருவது கடினம்....!

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

முதுமையிலும் இனிமையாக
வாழ்வது எப்படி?
வெறுமையான கூடுகள் போல்
காணப்படுகின்றன, சில வீடுகள்!
அங்கு பிள்ளைகளும் இல்லை.
பேரக்குழந்தைகளும் இல்லை.
விளையாட்டும் இல்லை. சிரிப்பும்
இல்லை. ஜாலியும், சந்தோஷமும்
நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல
வீடுகளில் இப்போது ஒரு சில
முதியோர்கள் மட்டும்
வசிக்கிறார்கள்.
முதியோர்கள்
குடும்பத்திற்கு பாரமாக,
ஆரோக்கியமும், மன நிம்மதியும்
இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை.
காதுகளும் கேட்கவில்லை. யாரும்
தன்னை மதிப்பதில்லை’ என்ற
விரக்தியோடுதான்
மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? –
இல்லை. அவர்கள் முதுமையிலும்
இனிமையாக
வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
எப்படி? இதோ சொல்கிறேன்.. 1960-
ம் ஆண்டுகளில் இந்தியர்களின்
சராசரி ஆயுள் 42 வயது.
தற்போது பெண்களுக்கு 67-ம்,
ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக
இருக்கிறது. அதனால் நாமெல்லாம்
எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த
நாளைக்கூட கொண்டாடலாம்!
அப்படி கொண்டாட வேண்டும்
என்றால்
முதுமையை வரவேற்று அதனோடு
வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
நம்மை படைக்கும்போதே கடவுள்
நமது உடலில் எந்த
பிரச்சினை எதிர்காலத்தில்
வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ
வசதியாக முக்கியமான
ஒவ்வொரு உறுப்பிலும் இலவச
இணைப்புபோல் அதிகப்படியான
அளவை, அதிகப்படியான
சக்தியை கொடுத்திருக்கிறார்.
கிட்னியில் இன்னொன்று, ஈரலில்
80 சதவீதம் தேவைக்கு அதிகமாக,
கல்லீரலில் 60 சதவீதம் கூடுதலாக..!
இப்படி ஒவ்வொன்றிலும்
கடவுளின் கருணை தெரிகிறது.
அதனால்தான் இளமையில் ஆடாத
ஆட்டம் ஆடினாலும்
அடிக்கடி நோய்வாய்ப்படாமல்
தப்பித்துவிடுகிறோம். ஆனால்
முதுமை அப்படி அல்ல.
‘மார்ஜின் ஆப் எர்ரர்’
என்று குறிப்பிடும் அந்த
சக்தி இயல்பாகவே முதுமையில்
குறைந்துவிடுகிறது. உடலின்
எல்லா பகுதிக்கும் முதுமையில்
ரத்த ஓட்டம் குறையும்.
மூளைக்கு செல்லும் ரத்தத்தின்
அளவு குறையும்போது ‘மைனர்
ஸ்ட்ரோக்’ எனப்படும்,
வெளிக்கு தெரியாத பக்கவாத
பாதிப்புகள் தோன்றும்.
அதனால்தான் சிலர்
ஐந்தாறு தடவை அழைத்த
பின்பு தான்
சுதாரித்துக்கொண்டு ‘என்னையா
அழைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.
ஆஸ்டியோபோராசிஸ் என்ற
எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோய்
முதுமையில் தென்படும்.
பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ‘
மனோபாஸ்’ ஆகும்
காலகட்டத்திலே இந்த
தொந்தரவு தோன்றி விடும்.
இதில் குறிப்பிடத்தக்க
பிரச்சினை என்னவென்றால்,
கீழே இனிமையாக வாழ்வது எப்படி?
வெறுமையான கூடுகள் போல்
காணப்படுகின் அவர்கள் விழுந்தால்
எளிதாக எலும்பு முறியும்.
சிகிச்சை எடுத்துக் கொண்டாலும்
விரைவாக பலன் கிடைக்காது.
மூட்டுத் தேய்மானமும் முதுமையில்
உருவாகி,
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
சிலருக்கு தேவைப்படும்.
அறுபது வயதுக்கு பிறகு
முதியவர்கள் உடலில்
ஒவ்வொரு நோயாக
வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கும்.
சர்க்கரை நோய் தாக்கி இருந்தால்,
ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு எவ்வளவு இருக்கிறது?
என்பதைவிட, அவரது உடலில்
சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக
இருக்கிறது என்பது கவனிக்கத்
தகுந்தது.
ஏன்என்றால் நீண்ட காலமாக அந்த
நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி,
இதயம்
போன்றவை பாதிக்கப்படக்கூடும்.
ஈரல், கிட்னி ஆகிய
இரண்டு உறுப்புகளும் நாம்
இளைஞராக இருக்கும்போது,
சாப்பிடும் மாத்திரையில் இருக்கும்
தேவையற்ற
வைகளை அப்படியே பிரித்தெடுத்து
ரத்தத்தில் கலக்கவிடாமல்
வெளியேற்றிவிடும்.
முதுமையில் அந்த
இரண்டு உறுப்புகளின்
செயல்பாடும் மந்தமடைவதால்
நோய்களுக்காக சாப்பிடும்
மாத்திரைகளில் இருக்கும்
தேவையற்றவைகளும்
பிரித்தெடுக்கப்படாமல்
அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும்.
அதனால்தான் முதுமையில்
நோய்களுக்காக சாப்பிடும்
மருந்துகளால் அதிக
பக்கவிளைவுகள்
சிலருக்கு தோன்றுகின்றன.
நோயாளிக்கு டாக்டர்கள்
மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது,
‘மிகக் குறைந்த அளவு’, ‘அதிகபட்ச
அளவு’ என்ற
இரு எல்லைகளை கையாண்டு அதற்கு
தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள
வேண்டிய
அளவை நிர்ணயிப்பார்கள்.
இதை ‘தெரபூயிட்டிக் வின்டோ’
என்போம்.
அந்த இடைவெளியை முதுமையில்
மிக கவனமாக
கண்காணித்து மாத்திரைகள்
வழங்கவேண்டும்.
தேவைக்கு அதிகமான ‘டோஸ்’
கொடுத்துவிட்டால், பக்க
விளைவுகள் அதிகரித்துவிடும்.
எல்லா வியாதிகளுக்கும்
அறிகுறிகள் உண்டு.
இளமையில் உடலில் அதிக
சக்தி இருக்கும்போது அறிகுறிகளை
எளிதாக கண்டு சிகிச்சையை உடனே
தொடங்கிவிடலாம்.
முதியவர்களுக்கு உடலில்
சக்தி குறைவதால் உள்ளே நோயின்
பாதிப்பு அதிகம் இருந்தாலும்,
அறிகுறிகளை அவ்வளவு எளிதாக
கண்டறிய முடியாது. சிறுநீர்
பாதை அருகில் ‘ப்ரோஸ்டேட்
சுரப்பி‘ உள்ளது.
முதுமையில் அந்த சுரப்பி வீங்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத்
தோன்றும். முழுமையாக
வெளியேறவும் செய்யாது.
திடீரென்று சிறுநீர் வெளியேறாமல்
தொந்தரவு செய்வதும் உண்டு. உடல்
இயக்கம் குறைவதால்
தூக்கமின்மையும்
முதியோர்களை அதிகம்
தொந்தரவு செய்கிறது.
பற்கள் விழுந்துவிடுவதால்
மென்று அவர்களால் சாப்பிட
முடியாது. அதனால்
உணவு உண்பதில் பிரச்சினையும்,
ஜீரணக்கோளாறும் தோன்றுகிறது.
புற்றுநோயும்
முதியோர்களை அதிக அளவில்
தாக்கி நிலைகுலையச் செய்கிறது.
கட்டி, ஆறாத புண்கள்
தோன்றினாலோ இருமலில்,
வாந்தியில், சிறுநீர் மற்றும்
மலத்தில் ரத்தம்
வெளிப்பட்டாலோ டாக்டரிடம்
சென்றுவிடவேண்டும். பெண்களைப்
பொறுத்தவரையில் அதிக ரத்தப்
போக்கு உடனடியாக கவனிக்கத்
தகுந்தது. இதுபோன்ற ஏராளமான
உடல்பிரச்சினைகள் மட்டுமின்றி,
மனப் பிரச்சினைகளாலும்
முதியோர்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.

பற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்!

பற்களை பராமரிக்க செய்ய
வேண்டியதும்,செய்ய கூடாதததும்!
பல் போனால் சொல்
போச்சு என்பார்கள். இந்தப்
பொன்மொழி எப்போது தோன்றியது
என்று யாருக்கும் தெரியாது. ஆனால்
பல காலமாக பற்களை சரிவர
பராமரிக்க வேண்டும் என
பெரியவர்கள்
சொல்லி வருகிறார்கள். ஏனெனில்
பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான
வாசல் என்கிறார் பிரபல பல்
மருத்துவமனையில் பல் நிபுணராக
பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும்
போது நடிகை சினேகா போல்
அழகாக இருக்கும். ஒருவரின்
சிரிப்பை அழகாக எடுத்துக்காட்டும்
பற்களை பாதுகாப்பது அவசியம்.
உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர்
கொண்டு வாய் கொப்பளிக்க
வேண்டும். அப்போது தான் பல்
இடுக்குகளில் உணவு பொருட்கள்
தங்காது. தினமும் காலை, மற்றும்
இரவு படுக்கும் முன்
பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள
அழுக்குகளை நீக்க பிளாஸ்
பயன்படுத்தலாம். மெல்லிய நூல்
போல் இருக்கும் பிளாசை பற்கள்
இடுக்குகளில் விட்டு சுத்தம்
செய்யலாம்.
இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள்
கடைகளில் கிடைக்கிறது. இவை பல்
இடுக்கில் உள்ள
உணவு பொருட்களை அகற்ற
பயன்படும். ஓரல் இரிகேட்டர்,
வாயில் தண்ணீரை வேகமாக
செலுத்தும் கருவி. இதனை பற்கள்
சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
இவை தவிர
வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல்
டாக்டரின் ஆலாசனைப்படி சுத்தம்
செய்வது அவசியம்.
பற்களில் ஏற்படும்
மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
பற்களில் கறை படிவதால்
அல்லது பல்
சொத்தை அல்லது வெங்காயம் மற்றும்
பூண்டு போன்ற
உணவுகளை அதிகமாக
உட்கொண்டது அல்லது தொண்டை,
வயிறு அல்லது நுரையீரல்
பிரச்சனை… இவற்றால் வாய்
துர்நாற்றம் ஏற்படும். இந்தப்
பிரச்சனை உள்ளவர்கள்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை
தண்ணீர் குடிக்க வேண்டும்.
எவ்வளவு தண்ணீர்
எடுத்துக்கொள்கிறார்களோ,
அவ்வளவு துர்நாற்றம் வீசாது.
பற்கள் எடுப்பாக இருந்தால்,
அதை கிளிப்
போட்டு சரியாக்கலாம். சில சமயம்
தாடை எலும்புகள் தூக்கலாக
இருக்கும்.
அவர்களுக்கு அறுவை சிகிச்சை
மூலம் சரி செய்யலாம். புளோரைட்
பாதிப்பால் பற்களின் நிறம்
பழுப்பாக இருக்கும். அவர்களின்
முக அமைப்புக்கு ஏற்ப
பற்களுக்கு மேல் செயற்கையான கேப்
போட்டுக்கொள்ளலாம்.
சிலர் சிரிக்கும் போது பற்களின்
ஈறுகள் கறுப்பாக தெரியும்.
இது மெலனின் பிக்மெட் அதிகமாக
சுரப்பதால் ஏற்படுத் விளைவு.
அதனை போக்க ஈறுகள் மேல்
இருக்கும்
கறுப்பு தோலை அகற்றி பிங்க்
நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின்
நிறம் மாறும் என்பதால்
எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை
மறுபடி செய்ய வேண்டும்.
சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள்
அதிகமாக தெரியும். அதனை லிப்
ரீபொசிஷனிங் முறையில்
சரி செய்யலாம். அதே போல்
பற்களுக்கு இடையே அதிக
இடைவெளி இருக்கும் இடத்தில்
செயற்கை பற்களை பொருத்தலாம்
என்று சொல்லும் டாக்டர்
தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க
டிப்ஸ் தருகிறார்.

செய்யக்கூடியவை...

தினமும் காலையும் மாலையும் பல்
துலக்க வேண்டும். இரவு படுக்கும்
முன் பல் இடுக்கில் உள்ள
உணவுப்பொருட்களை ‘பிளாஸ்’
கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை உணவு சாப்பிபட்ட
பிறகும் வாய்
கொப்பளிப்பது அவசியம். பால்
சார்ந்த உணவுகளையும், சத்துள்ள
உணவுகளையும்
சாப்பிடுவது நல்லது.
எல்லாவற்றையும் விட முக்கியம்
பற்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டால்
உடனடியாக பல்
நிபுணரை அணுகி ஆலோசனை பெற
வேண்டும்.
கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப்
பிரச்சனை இருந்தால் அதற்கு பல்
சொத்தையும் ஒரு காரணம் என்பதால்
அதற்கான சிகிச்சையும்
எடுத்துக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை...

கடினமான
உணவுப்பொருட்களை முன்னால்
உள்ள பற்களால் கடிக்கக்கூடாது.
கடவாய் பற்களை பயன்படுத்தலாம்.
முன் பற்கள் அசைவ
உணவுகளை கிழித்து சாப்பிட
மட்டுமே உதவும்.
பென்சிலை கடிப்பது மற்றும்
பிளாஸ்டிக் பொருட்களை பல்லால்
கடித்து கிழிப்பது, பூவின் நார்
மற்றும் துணியில் உள்ள
நூலை பற்கள்
கொண்டு அறுக்கக்கூடாது.
புகை தினமும் காலையும்
மாலையும் பல் துலக்க வேண்டும்.
இரவு படுக்கும் முன் பல் இடுக்கில்
உள்ள உணவுப்
பொருட்களை பிளாஸ்
கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட
பிறகும் வாய்
கொப்பளிப்பது அவசியம்.

Friday, 29 November 2013

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது?

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி,
நல்ல காத்துக்கு எங்கே போறது?
இனிமே மரம் நட்டாலும்
அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20,
30 வருஷங்கள் ஆகுமே’
என்று சங்கடப்படுபவர்களே...
உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில
குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள
நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம்
நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின்
ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச்
சீதோஷ்ண நிலையில் வாழும்
தன்மையையும், அதிக
நன்மை களையும் கொடுக்கும் இந்தச்
செடிகளைப் பற்றிய அறிமுகம்
இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக்
குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை,
காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட்
என்னும் வேதிப் பொருளை நீக்கும்.
சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப்
பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில்
படாத இடங்களில்கூட வாழும்
தன்மைகொண்டவை. அதிகமாக
அசுத்தக்
காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான
ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின்
நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின்
ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மலைப் பனை (Bamboo Palm) :
காற்றில் கலந்துள்ள
ஃபார்மால்டிஹைட்
நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான
ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant):
நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும்
ஃபார்மால்டிஹைடைக்
கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும்
. வறண்ட சூழ்நிலை களில்கூட
வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos)
: நாசா விஞ்ஞானிகளின்
அறிக்கைப்படி காற்றைச்
சுத்தப்படுத்தும் தாவரங்களின்
பட்டியலில் மூன்றாம் இடம்
பிடித்திருக்கும் இந்தச் செடி,
கார்பன்
மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு
காற்றின் அளவை அதிகரிக்கச்
செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.
முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட
செடிகளையேனும் வளர்ப்போமே!

வெல்ல முடியாததையும் வெல்வது எப்படி? Dr.அப்துல்கலாம்.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள்
இந்தியாவிலும் உருவாக முடியும்
என்ற ஆழமான
நம்பிக்கையை இளைஞர்
சமுதாயத்தில் விதைத்து வருகிறார்
டாக்டர் அப்துல் கலாம்.
இந்தியாவின் ஒவ்வொரு இடமும்
அறிவு மையமாக வேண்டும்
என்று கருதும் அவர் தினந்தோறும்
சுற்றுப் பயணம்
செய்து அறிவு புரட்சி ஏற்படுத்தி வருகிறார்.
இளைஞர்களுக்காக இங்கு தன்
எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்...
இளைஞர்களே உங்களுடன் நான்
அறிவு தொடர்பாக சில
விஷயங்களை பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன். அறிவுதான்
உங்களை மிகப் பெரியவர்களாக்கும்.
அறிவுதான் வெல்ல
முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது.
இந்த அறிவு நான்கு அம்சங்களைக்
கொண்டது.
1. கற்பனைத் திறன்,
2. நேர்மை,
3. துணிவு,
4. வெல்ல முடியாத சக்தி.
இந்த நான்கும் ஒன்று சேர்ந்த
குணங்களைக் கொண்டவர்கள்
அறிவில் சிறந்த குடிமகன்களாக
திகழ்வார்கள்.
கற்பனைத்திறன்
பற்றி கூற வேண்டுமானால்...
கற்றல் தருவது கற்பனைத்திறன்....
கற்பனைத்திறன்
தூண்டுவது சிந்தனையை....
சிந்தனை அளிப்பது அறிவு...
அறிவு உங்களை மிகச்சிறந்தவராக்கும்...
நேர்மையின் தெய்வீக அம்சங்கள்
பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
அவை...
நீதி நேர்மை குடியிருக்கும்
இதயங்களின் நடத்தையில்
அழகு மிளிர்கிறது.நடத்தையில்
அழகு மிளிர்கிற இல்லங்களில்
நல்லிணக்கம்
மலர்கிறது.நல்லிணக்கம் மலர்கின்ற
இல்லங்கள் நிறைந்த தேசத்தில்
ஒழுங்கு நிலவுகிறது..ஒழுங்கு நிலவுகிற
தேசங்கள் நிறைந்த உலகத்தில்
அமைதி தவழ்கிறது..

இதயம், நடத்தை, தேசம் மற்றும் உலகம்
ஆகிய நான்குக்கும் ஓர் அழகான
இணைப்பு, தொடர்பு உள்ளது.
ஒருநாட்டில் உள்ள அனைவருக்கும்
நேர்மை பொதுவானாதாக இருக்க
வேண்டும்.

குடும்பத்தில்,கல்வியில், சேவையில், தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்க
வேண்டும்.

நிர்வாகம், அரசியல், அரசு,
நீதித்துறை ஆகிய அனைத்திலும்
நேர்மை நிலை கொண்டு இருக்க
வேண்டும். வெல்ல முடியாத
ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த
நேர்மைதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான்
உங்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டும்.
வித்தியாசமாக சிந்திக்கும்
துணிவு கண்டுபிடிக்கும்
துணிவு இதுவரை யாரும் செல்லாத
பாதையில் செல்லும்
துணிவு முடியாதது எது என்பதை அறியும்
துணிவு சிக்கல்களை தீர்க்கும்
துணிவு இவையே இளைஞர்களின்
உயிர்மூச்சாக இருக்க வேண்டும்...
அவர்கள் வெற்றி பெற வேண்டும்...
இளைஞர்களின் முதல் குறிக்கோள்
அவர்கள் தங்கள் படிப்பில்
சிறந்து விளங்குபவர்களாக இருக்க
வேண்டும். நாட்டுக்கான
அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில்
கேள்வி கேட்கும் தன்மை,
கற்பனைவளம், தொழில்நுட்ப
அறிவு, தொழில்முனையும் திறன்
மற்றும் அறவழியிலான
தலைமைப்பண்பு ஆகியன
அவரிடத்தே உருவாகியிருக்க
வேண்டும்.
இவை ஐந்தையும் பெற்ற
ஒரு மாணவர் தன்னிச்சையாக கற்றுக்
கொள்ளக் கூடிய ஒரு மாணவராக
வளர்ந்து நிற்பார். தன்னைத்
தானே இயக்கிக் கொள்ளக்கூடிய,
தன்னைத் தானே கட்டுப்படுத்திக்
கொள்ளக் கூடிய கற்றுக்
கொள்பவராக அவர் உருவாவார்.
அதிகாரம் பெற்றவரை மதிக்கத்
தெரிந்தவராக அவரிடம்
முறைப்படி கேள்வி கேட்க
தெரிந்தவராக இருப்பார்.
இவர்களைப் போன்றவர்கள்
சேர்ந்துதான் வளமான
இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த
புத்தகங்கள்தான் சரியான பாதையில்
அவர்களை இட்டு செல்லும்.
ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் அவர்
தந்தை வாங்கித் தந்த காம்பஸ்தான்
அவரை சிந்திக்க
தூண்டியிருக்கிறது. அவரது 12
வயதில் பரிசளிக்கப்பட்ட
புத்தகம்தான்
அவருக்கு இரண்டாவது அற்புதமாக
விளங்கியது.
பெரிய ஆய்வுக்கூடமோ அதிக
செலவு பிடிக்கும்
கருவிகளோ இன்றி, இந்த
பிரபஞ்சத்தின்
உண்மைகளை தனது கணித
அறிவால் கண்டறிந்தார்.
வெல்லமுடியாத
சக்தி பற்றி சர்.சி.வி.ராமன்
தனது 82 வது வயதில்
உரை நிகழ்த்தினார். அது இன்றும்
என் ஞாபகத்தில் உள்ளது:
என் முன்னே உள்ள
இளைஞர்களே..பெண்களே...நான்
உங்களுக்கு சொல்லிக் கொள்ள
விரும்புவதெல்லாம்.எப்போதும்
நம்பிக்கையையும் துணிவையும்
இழந்துவிடாதீர்கள். உங்கள் முன்
உள்ள சவாலை துணிச்சலான
ஈடுபாட்டின் மூலமாகத்தான்
வெற்றி பெற முடியும்
என்று என்னால் உறுதிபட சொல்ல
முடியும். இந்தியர்களின்
சிந்தனை ஜெர்மன், வட
ஐரோப்பியர்களுக்கு கொஞ்சமும்
குறைந்தது அல்ல.
நம்மிடம் இல்லாதது துணிச்சல்
மட்டும்தான். நம்மை இயக்கும்
சக்தியை பெற நாம்
தவறிவிடுகிறோம். அது இருந்தால்
நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும்.
நமக்குள்
ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான்
கருதுகிறேன்.
இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம்
நம்மை தோற்கடிக்கும் இந்த
சக்திகளை அழிப்பதுதான்.
நமக்கு வெற்றிக்கான
சக்தி வேண்டும். நம்மை சரியான
இடத்துக்கு எடுத்து செல்கின்ற
பாதை தேர்வு செய்கின்ற
சக்தி வேண்டும்.
இந்த பூமியில் மிகச்சிறந்த
இடத்தை பெறக்கூடிய
பெருமைமிகு நாகரிகத்தை சேர்ந்தவர்கள்
என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை.
இந்த வெல்ல முடியாத
சக்திகளே நம்மை சரியான
பாதைக்கு அழைத்து செல்லும் என்றார்
ராமன்.
எனவே நண்பர்களே அறிவு என்பது

அறிவு = கற்பனைத்திறன் +நேர்மை +துணிச்சல் +வெல்லமுடியாத சக்தி.

இளையபருவத்திலேயே இந்த
குணாதிசயங்களை வளர்த்துக்
கொள்ள வேண்டும். ஆசிரியர்களும்
கல்வியாளர்களும் உண்மையான
அறிவு மாணவர்களிடம் சென்று சேர
வேண்டும் என்று விரும்ப
வேண்டும். மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அனைவருக்கும் என்
வாழ்த்துக்கள்.....!