எல்லோருக்கும் பசுமைப்
புரட்சி நினைவு இருக்கும்.
வெள்ளையர்களிடம்
இருந்து விடுதலை பெற்ற பின்
நமது சொந்த காலில் நிற்கவேண்டிய
நிர்பந்தம் நமக்கு இருந்தது.
விவசாய நாடான நாம்
விவசாயத்தை முன்னேற்றவே நினைத்தோம்.
அதை பயன்படுத்திக் கொண்ட
அந்நியர்கள் “ இவ்விதைகளைத்
தூவினால் மட்டும் போதும் தண்ணீர்
ஊற்றத் தேவை இல்லை.
இவை வளர்ந்து மரமானால் இவற்றில்
இருந்து விறகுகள் நிறைய
கிடைக்கும். மரத்தை எரித்தால் நல்ல
கரியும் கிடைக்கும்“
என்று சொல்லி நமது ஆட்சியாளர்களை ஏமாற்றி ஹெலிகாப்டர்
மூலம் வளர்க்கப்பட்டது தான் சீமைக்
கருவேலம் என்று அழைக்கப்படும்
வேலிக்காத்தான்,ஓட
மரம்,முள்ளு மரம் ,இச்சீமைக்கருவேல
மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம்.
சீமைக்கருவேல மரங்கள் கருவேல
மரங்கள் போலல்ல மிகவும் கொடிய
நச்சுமரங்கள். இம்மரங்கள்
தரிசு நிலங்களில் வளரும்
என்று தான் எல்லோரும் நினைத்துக்
கொண்டிருப்போம் ஆனால்
இவை வளர்ந்ததனால் தான்
நமது நிலங்கள்
தரிசானது என்பதே உண்மை.
இவைகளிடம் அப்படி என்னதான்
நச்சுத்தன்மை இருக்கிறது என்று கேட்கிறீர்கள்
தானே....?
தரிசாக இருந்தாலும்
நிலத்தடி நீரை எப்படியாவது உறிஞ்சிக்கொண்டு வளர
வரம்பெற்று வந்தவை இந்த மரங்கள்.
மக்களுக்கும், விலங்குகளுக்கும்
மற்றும் பிற தாவரங்களுக்கும்
நீரின்றி வரண்டு காணப்படும்
இடங்களில் கூட
இவை செழித்து வளர்ந்திருப்பதை நீங்களே காணலாம்.
வெட்டிப் பிடுங்கி எறிந்தாலும்
மீண்டும்
முளைத்து வந்து செழிக்கும்
தன்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும்
இந்தச் சீமைக்கருவேல மரங்கள்
நிழல்தரும் அளவுக்குக்கூட மரமாக
வளராமல் பக்கவாட்டில் வளரும்.
நீரை ஆவியாக்கி வானத்திலேற்றி மழைக்குக்
காரணமாக இருக்க மரங்களை நாம்
வளர்க்க வேண்டும் என்று நாம்
அறிந்திருக்கிறோம். அதற்காகத்தான்
சாலையோர
மரங்களை நட்டு வைக்கிறோம்.
ஆனால் இந்த மரத்தில்
நீரை ஆவியாக்கும் தன்மை மிக
மிகக் குறைவு.
இது முளைத்திருக்கும் இடங்களில்
வேறு எந்தச் செடியும்
பெரியதொரு செழிப்பில் வளர
வாய்ப்பில்லை.
இவைகளால் வரும் முக்கியத்
தீமைகள்:
* மற்ற செடிகளை, மரங்களை வளர
விடாமல் தடுத்தல்,
* அவற்றின்
சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளுதல்,
* நிலத்தடி நீரை உறிஞ்சி அதன்
மட்டத்தைக் கீழிறக்குதல்,
*நீரை உறிஞ்சினாலும்
ஆவியாக்காமல்
தனக்குள்ளே பதுக்கிவைத்துக்
கொள்ளுதல்,
* நிழலுக்குக் கூடப் பயன் தராமல்
நிலத்தை பாழ்படுத்துதல்,
* வளரும்
நிலத்தை தரிசு நிலமாகவே வைத்திருத்தல்.
இப்படி எவ்வளவோ தீமைகளைத்
தரும் வேலிக்காத்தானை நாம் இருந்த
இடம் தெரியாம ஒழிக்க
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு புரட்சி செய்தாலன்றி நம்
நாட்டுச்
செழிப்பினை மீட்டு வருவது கடினம்....!