பொருளாதாரம் ஈட்டும் பெண்களா?
பொழுதை போக்கும் பெண்களா?
பெண்கள் எப்போதும்
வினோதமானவர்கள், இயற்கையாய்
கடவுள் பெண்களை சற்றே குறைவான
உடல் சக்தியுடன் படைத்த காலத்தில்
இருந்து சாட்டிலைட்டை இயக்கும்
தற்கால பெண்மணிகள் வரை நீங்கள்
பார்த்தால் எவ்வளவு பரிணாம
மாற்றங்கள். அடுப்பூதும்
பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என
அடக்கி வாசித்த ஆண் வர்க்கம்
இதை செய்தது மூன்று
காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த
உடன் வெளியே அனுப்பினால்
என்னவாகும் என்ற பதபதைப்பு.
இரண்டாவது பெண்
ஒரு படி பார்க்கும்
மாப்பிளையை விட படித்திருந்தால்
கல்யாணம் அமையாது.
மூன்றாவது பெண் படித்து இந்த
பெண் என்ன சாதிக்க போகிறாள்.
அடுப்படி தானே இவளுக்கு நிரந்தரம்
என்ற நினைத்தமையால்
ஒரு மூன்று நான்கு ஜெனரேஷனில்
படிப்பு என்பது ஆரம்ப
கல்வியோடு முடிந்து போனது.
இதை உடைத்தெறிந்த பல தலைவர்கள்
பெண்களுக்கு கல்வி முக்கியம் என
ஒரு வழியாக
போராடி பெற்று கொடுத்த
படிப்பு இன்று பெரும்பாலும்
பொருள் ஈட்ட, பொழுது போக்க,
புரளி பேச
மட்டுமே பயன்படுகிறது என்று
நினைக்கையில் வருத்தம் தான்
சற்றே ஓங்கியிருக்கிறது.
பெண்களுக்கு கட்டாய
கல்வி என்று நினைத்த சில கர்ம
வீரர்களின் எண்ணம் வேறு. பெண்கள்
படிப்பது வேலைக்கு செல்வதற்க்கு
மட்டுமல்ல என்று அவர்களின்
உயர்ந்த எண்ணம் அநேக
பெண்களுக்கு தெரிவதில்லை.
அடிமை சாசனமாய் இருந்த
பெண்களுக்கு படிப்பு என்பது ஒரு
மூன்றாம் கண் போல.
பெண்களுக்கு அனைத்தும்
தெரிந்திருக்க வேண்டும். சட்டம்
தெரிந்திருக்க வேண்டும்.
குடும்பத்தில் பண்போடு பழகவும்,
குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி
கொடுக்கவும், குடும்ப வர்த்தகம்
என்று ஒன்று இருந்தால் அதிலும்
ஞானம் பெறவே இந்த
படிப்பறிவுக்கு பாடுபட்டனர்.
என்னை கேட்டால் பெரும்பாலும்
பெண்கள் படிக்கும் நோக்கமே தான்
சொந்தக்காலில் நிற்க முடியும்
என்பதற்க்கே. பத்தாம்
வகுப்பு படிக்கும் போதே மனம்
சொல்கிறது இந்த குருப் படித்தால்
இந்த வேலைக்கு செல்லாம் இந்த
மென்பொருள் படித்தால் இந்த
நாட்டுக்கு செல்லாம்
என்று அதை நோக்கியே பயணித்து 34
வருஷம் சர்வீஸ் போட்ட
அப்பாவை விட தற்காலிக
பொருளாதாரத்திர்க்கு ஏற்ப
அப்பாவை விட முதல்
மாதத்திலேயே சம்பளம் அதிகம்
வாங்கி காட்டின உடன் பெற்றோர்கள்
புளங்கிதம் அடைகின்றனர்.
இது கஷ்டப்படும் குடும்பம் என்றல்ல
அனைத்து பெற்றோர்களும்
கல்வி இருந்தா என் பெண்
எப்படியாவது
புழைச்சிக்கிடுவான்னு ஒரு
நம்பிக்கை. ஆனால் இந்த
படிப்பு அவர்களுக்கு ஞானத்தை
பெற்று தந்தாலும்,
கூடவே தனித்துவத்தை தந்து
விடுகிறது இது தனியே இருக்கும்
வரை ஒரு நல்ல செயல்தான். ஆனால்
கல்யாண்ம் என்ற ஒரு புது உறவில்
இதுவே பெரும் பிரச்சினையாக
வந்து விடுகிறது. பெண்
பார்க்கையிலே பெண்ணோடு அப்பா
கன்டிஷன் போடுவார் பெண்
வேலைக்கு போவா கல்யாணத்திற்க்கு
பிறகும் என்று ஆரம்பிக்கும் இந்த
கண்டிஷன் தான் பலர் வாழ்க்கையில்
சத்துரு.
பொருளாதார சூழ் நிலையில்
வேலைக்கு செல்லும்
பெண்களுக்கு இது பொருந்தாது.
பெருமைக்காக, பெண் என்ன
ஆண்களுக்கு அடிமைபட்ட இனமா?
மாமியார் தொல்லை,
வீட்டு வேலை அலர்ஜி என்று பல
காரணங்களுக்காக
வேலைக்கு செல்லும் பெண்கள்
இழப்பது ஒன்றல்ல
இரண்டல்ல பெரும்பாலும்
நிம்மதியற்ற வாழ்க்கை.
அந்நியோன்யம் மறந்து போகிறது.
பிள்ளைகளின் மழலையை ரசிக்க
முடியாமல் போகிறது. தான் படித்த
படிப்பு தன்
பிள்ளைகளுக்கு சொல்லிக்
கொடுக்காமல் தன்னை விட
குறைவாய் படித்த ஒரு ஆளிடம்
டியூஷன் விடுவது, தன்
குடும்பத்துக்கு ஏனோ தானோ என்று
சமைக்கும்
ஒரு அரை குறை ஆளை வைப்பது என
எல்லாவற்றிற்க்கும் அவுட் சோர்ஸ்
செய்து தான் நிம்மதியாக
வெளியே சென்று திரும்ப வரும்
ஒரு விஷயத்தை தவிர
வேறு எதுவும் இவர்கள்
பெற்று விடவில்லை.
ஏன்டா உலகத்தில் பெண்கள்
வேலைக்கே செல்வதில்லையா,
பெண்கள் ப்டித்தால் அதை வீட்டில்
தான் செலவிட
வேண்டுமா என்று நீங்கள்
என்னை பிரான்டும் நேரத்திற்க்குள்
சொல்வேன் நீங்கள் வாழ்வது இந்திய
சமூகம். இது குடும்பம் குழந்தை என
பழகி போன உங்கள் மாமியாரும்,
மாமனாரும், என்னதான்
படித்திருந்தாலும் தன்
மனைவி வேலைக்கு செல்வதில்
நாட்டமில்லை என்று நினைக்கும்
பெரும்பாலான
கணவர்களுக்கு நடுவில்
இது சக்ஸஸ்ஸான சாத்தியம்
என்று சொல்லுவதற்க்கில்லை.
அப்படி ஒரு புதுமை பெண்ணாய்
நீங்கள் ஜொலிக்க விரும்பினால்
இந்த கல்யாணம் என்ற
அடைப்புக்குறியில் நீங்கள்
அடங்கவே முடியாது. இதுவும்
வேணும் அதுவும் வேணும்
என்று அடம் பிடிக்கும்
சிறு குழந்தைத்தனமான எண்ணம்
தான் உங்களுக்கு நீங்கள் வைக்கும்
வேட்டு.
இதையும்
மிஞ்சி வேலைக்கு செல்லும்
பெண்கள் கண்டிப்பாய் அவர்கள் சுய
நலம் ஒன்றின் காரணமே தவிர
வேறு ஒன்றுக்கு இல்லை என்பதே.
திருமணம்
ஆகி பின்பு பொருளாதார சூழ்
நிலையால் சுய தொழில்,
வேலைக்கு செல்வது என சில
முடிவுகள் வரேவேற்க்க தக்கது,
வீட்ல ஒரே போருப்பா என
ஒரே காரணத்திர்க்காக
வெளியே வேலைக்கு செல்வது
கண்டிப்பாய் அவர்கள்
வாழ்வுக்கு அவர்களே வைக்கும்
ஆப்பு தான்.
மெத்த படித்த பல பெண்கள்
கௌரவத்தோடு இன்று வீட்டில்
இருந்து சாதிக்கின்றனர், தன்
பிள்ளைகளை நன்கு படிக்க வைத்த
நற் பண்புகளோடு நல்ல
சிட்டிசன்களாய் உருவாக்கும்
இவர்கள் தான் உண்மையிலே சக்ஸஸ்
பெண்மனிகள்.
வீட்டுக்கு வெளியே கிளம்பும்
போது எடுக்கும் மொபைல் ஃபோன்
வீட்டுக்குள் நுழைவதற்க்குள் சில
எஸ் எம் எஸ்களையும், சில கால்
லிஸ்டில் உள்ள கால்களையும்
அழித்து விட்டு வரும் பெண்களும்
ஆண்களும் இன்று இந்த குடும்பம்
சார்ந்த வாழ்க்கை வாழாதது தான்.
குடும்பம் வேணும் நல்ல குழந்தைகள்
வேணும் ஆனாலும்
வேலைக்கு சென்று இதை சாதிப்பேன்
என்னும் பெண்களுக்கு – நீங்கள்
யாரை ஏமாற்றுகிறீர்கள்
என்றே கேட்பேன்.
இவை அனைத்தையும்
தாண்டி நிறைவான குடும்பம்
உங்கள் இன் லாஸ் மற்றும்
பொறுப்பு மிகுந்த கணவன் மற்றும்
பிள்ளைகளின் மூலம் நீங்கள்
அடைந்தால் நீங்கள் வரம்
வாங்கியவர்கள் தான் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment