பொதுவாக
இளவயதோரைப்பார்த்தாலே சிலர்
அவர்களுக்கு திமிர்,
தற்பெருமை மற்றும் ஆணவம் அதிகம்
இருக்கும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த வயதில்
உள்ள இளையோர்
அனைவருமே இத்தகைய
குணங்களை உடையவர்கள் அல்ல.
அத்தகைய குணத்தை பெற
வைப்பது சமூகம் தான்.
மேலும் உறவினர் ஒருவர்
குழந்தையில் உள்ள
ஒருவனை இளைஞனாகப்
பார்த்து விட்டால், உடனே அவர்
மனதில் ஓடுவது "அவன்
வளர்ந்துவிட்டான் மற்றும்
அவனுக்கு நிச்சயம் திமிர்
அல்லது வெட்கம் இருக்க வேண்டும்"
என்று தோன்றும். ஆனால்
இவை அனைத்துமே உண்மையில்
ஒரு கற்பனையான
ஒரு கதை தானே தவிர,
அனைத்து இளைஞர்களுக்குமே பொரு
ந்தாது. இப்போது மக்கள் மத்தியில்
இருக்கும் இளைஞர்களைப் பற்றிய
கற்பனையான மற்றும் தவறான
எண்ணங்களை பட்டியலிட்டுள்ளோம்.
1}டேட்டிங், ரொமான்ஸ், நைட்
பார்ட்டி போன்ற அனைத்தும்
இளைஞர்களுடன் தொடர்புடையது.
எனவே எந்த ஒரு இளைஞனைப்
பார்த்தாலும், அனைவரின் மனதிலும்
தோன்றுவது, அவர்களுக்கு நிச்சயம்
காதல் இருக்கும்
என்பது பற்றிய கெட்டதான
சிந்தனை மனதில் ஏற்பட
வழிவகுக்கிறது. இதற்கு காரணம்
சமுதாயமும், சூழ்நிலையும் தான்.
2}இள வயதுள்ளவர்கள்
பொறுப்பில்லாதவர்கள் என்ற
கருத்து இருக்கிறது. சரி தான்,
அவர்களால் ஏதாவது ஒரு கடினமான
சூழ்நிலை வந்தால், அதனை சரியாக
சமாளிக்கத் தெரியாது.
இதற்கு அவர்களது மன வளர்ச்சியும்,
சூழ்நிலையும் தான் காரணமே தவிர,
அவர்களது தவறில்லை.
3}பெரும்பாலானோரின் மனதில்,
இள வயதா? அப்படியெனில்
அவர்களுக்கு ஆணவம் அதிகம்
இருக்கும் என்ற எண்ணம் இருக்கும்.
உண்மையில்,
இது அவர்களது தவறல்ல. உடலில்
உள்ள ஹார்மோன்களின்
மாற்றங்களும், ஒருசில
சூழ்நிலைகளும் தான்
அவர்களது நடவடிக்கைகளை வித்தி
யாசமாக்குகிறது.
4}இளவயது தான், முதன்முதலில் மனதில்
இருக்கும்
கருத்தையோ அல்லது செயல்களையோ
வெளிப்படுத்தும் வாழ்வின் முதல்
நிலை. இந்த நிலையில் அவர்கள்
வெளியுலகத்தைப் பற்றி நிறைய
ஆராய்வார்கள்.
அப்போது அவர்களுக்கு எதற்கும்
ஒரு கட்டுப்பாடு உள்ளது என்பதை பு
ரிந்து கொள்ளும் சக்தி இருக்காது.
அதனால்
கட்டுப்பாடின்றி நடந்து கொள்வார்கள். ஆகவே இத்தகைய
அறிவை பெற்றோர்கள் தான்
சிறுவயதிலிருநந்தே சொல்லிக்
கொடுக்க வேண்டும்.
5}குழந்தையாக இருந்து, வளரும்
போது ஒவ்வொருவரின்
நடையிலும், உடையிலும் ,
பாவனையிலும் மாற்றங்கள்
நிகழ்வது சகஜம் தான்.
அப்போது அவர்களுக்கு, இந்த
உலகிலேயே மிகவும் ஸ்மார்ட் நான்
தான் என்று உணர்வார்கள். அதனால்
அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும்
துணிந்து செய்வார்கள். ஏன், இந்த
நிலையில் தவறான வழியில் கூட
செல்ல வாய்ப்புள்ளது.
ஆகவே இதனை பெற்றோர்கள் சரியாக
கண்டு கொள்ளாமலும்,
கவனிக்காமலும் ஆதரித்தால் , பின்
நிறைய பிரச்சனைகளை சந்திக்க
நேரிடும். இவையே மக்கள்
மத்தியில் இள வயதுள்ளவர்கள்
பற்றிய எண்ணங்கள்.
No comments:
Post a Comment