Friday, 20 December 2013

மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

மல்லிகை பூவின் மருத்துவ
குணங்கள் தெரியுமா?

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற
பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட
பெண்கள், ஒன்றுமே செய்ய
வேண்டாம்..உங்களுக்குப் பிடித்த
அளவிற்கு மல்லிகைப்
பூவை வாங்கி தலையில் சூடுங்கள்
போதும்.மன அழுத்தமும் குறையும்,
உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த
காலத்திலேயே பல்வேறு
பிரச்சினைகளுக்கு மருந்தாக
பயன்படுத்தி வந்தனர். அதேப்போல,
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட
மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக
பயன்படுத்தப்பட்டுள்ளது.அதில்
ஒரு சில அடிப்படை விஷயங்களை
உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி
சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில்
பூச்சித் தொல்லைகள் அதிகமாக
இருக்கும். வயிற்றில்
பூச்சி இருந்தால் உடல் மெலியும்,
சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள்
காணப்படும். அப்படியானவர்கள் 4
மல்லிகைப் பூவை தண்ணீரில்
போட்டு கொதிக்க வைத்து அந்த
நீரை அருந்தி வர வேண்டும்.
இவ்வாறு அருந்தி வர வயிற்றில்
உள்ள கொக்கிக் புழு, நாடாப்
புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள்
மட்டுமல்லாமல் பொதுவாக
அடிக்கடி பூச்சி மருந்து
சாப்பிடுபவர்கள் தவிர
அனைவருமே இந்த மல்லிகைத்
தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப்
பூக்களை நிழலில்
வைத்து உலர்த்தி அவை காகிதம்
போல ஆனதும், அவற்றை பொடியாக
அரைத்து பொடி செய்து வைத்துக்
கொள்ளவும். இதனை தண்ணீரில்
கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள்
தானாகவே கரைந்து போகும். எந்த
உயர் சிகிச்சையும்
தேவைப்படாது.நோய்
எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்
மல்லிகைப் பூக்கள்
ஒன்றிரண்டை உண்டு வர நோய்
எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல்
அவ்வப்போது ஏற்படும் சில உடல்
நலப் பிரச்சினைகளுக்கும்
மல்லிகை சிறந்த நிவாரணியாக
உள்ளது. அதாவது,
சிலருக்கு மல்லிகை வாசனை
தலைவலியை ஏற்படுத்தும். ஆனால்
தலைவலியை குணமாக்கும் குணம்
மல்லிகைக்கு உள்ளது என்பது
பலருக்கும் தெரியாது.
தலைவலி ஏற்படும் போது, சில
மல்லிகைப் பூக்களை கையில்
வைத்து கசக்கி அதனை தலையில்
பத்திடுவது போல
தேய்த்துவிட்டால்
தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில்
இருந்து ஒரு வகை எண்ணெய்
எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்
பல்வேறு உடல்
உபாதைகளுக்கு அருமருந்தாக
உள்ளது.எங்கேனும்
அடிபட்டு அல்லது சுளுக்குப்
பிடித்து வீக்கம் காணப்பட்டாலும்,
நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும்,
மல்லிகைப் பூவை அரைத்துப்
பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற
பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட
பெண்கள், ஒன்றுமே செய்ய
வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த
அளவிற்கு மல்லிகைப்
பூவை வாங்கி தலையில் சூடுங்கள்
போதும். மன அழுத்தமும் குறையும்,
உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல
மகத்துவங்களைக்
கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க
முடியாத நிலையில் இருக்கும்
தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள
பாலை வெளியேற்றவும்,
வலியை நீக்கவும் மல்லிகைப்
பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப்
பூவை அரைத்து மார்பகத்தில்
பற்று போட்டால் அந்த
வலி குறைந்து, பால் சுரப்பதும்
படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு
வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட
கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள்
காமாலை மற்றும் சில
பால்வினை நோய்களும் குணமாகும்.
தொண்டைப்புண் அற்றுப்
போவதற்கு மல்லிகைப்
பூக்களை அரைத்து, புண் உள்ள
பகுதியில் இரவில்
பூசி வரவேண்டும். அதாவது,
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால்
அவை குடல்
சுவர்களை அரித்து தின்றுவிடும்.
இதனால் குடல் புண்ணாகும்.
இதனால் செரிமானத்
தன்மை குறையும். இந்த
குடற்புழுக்களை அழிப்பதற்கு
மல்லிகை மலர்களை நீரில்
விட்டு கொதிக்க
வைத்து வடிகட்டி அருந்தினால்
குடல் புழுக்கள் நீங்கும்.
வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த
புண்களின் வேகம் வாய்ப்பகுதியில்
தாக்கி வாய்ப்புண் உண்டாகும்.
இவை நீங்க மல்லிகைப்
பூவை தண்ணீரில் கொதிக்க
வைத்து அது பாதியான
பின்பு வடிகட்டி அந்த
நீரை காலை மாலை என
இருவேளையும் அருந்தி வந்தால்
வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க
வைத்து, அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து குடித்து
வந்தால் கண்ணில் வளரும்
சதை வளர்ச்ச குறைந்து,
படிப்படியாக தெளிவான
பார்வை பெறலாம்.

No comments:

Post a Comment