Thursday, 5 December 2013

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி...

சந்திரனில்
இருந்து பூமிக்கு சூரிய
ஒளி மின்சாரம்: ஜப்பானின் புதிய
முயற்சி...
சந்திரனில்
இருந்து பூமிக்கு சூரிய
ஒளி மின்சாரம் கொண்டு வர
ஜப்பான் நிறுவனம்
ஏற்பாடு செய்துள்ளது.
ஜப்பானில் கடந்த 2011–ம்
ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும்,
சுனாமியும் ஏற்பட்டதில்
புருஷிமா அணுஉலை வெடித்து
சிதறியது. அதனால் அங்குள்ள
அணுமின் நிலையங்கள்
மூடப்பட்டு வருகின்றன.
எனவே, நாட்டின் மின்
தேவைக்கு விஞ்ஞானிகள்
மாற்று வழியை உருவாக்க
முயற்சி செய்கின்றனர். இந்த
வகையில் சூரிய ஒளி மூலம்
மின்சாரம்
தயாரிப்பதை தீவிரப்படுத்த
உள்ளனர்.
பூமியை பொறுத்தவரை எப்போதும்
சூரிய ஒளி கிடைப்பதில்லை.
பகலில் மட்டுமே கிடைக்கிறது.
மோசமான தட்ப வெப்பநிலை மேக
மூட்டம் இருந்தால் அதையும்
முழுமையாக பெற முடியாது.
எனவே, சந்திரனில்
இருந்து பூமிக்கு சூரிய
ஒளிமூலம் மின்சாரம்
தயாரித்து பூமிக்கு கொண்டு வர
ஜப்பானில் உள்ள
‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ (SHIMIZU
Corporation )என்ற
நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சந்திரனின் பூமத்திய
ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார்
பேனல்’ தகடுகளை சீராக
அமைத்து அதன் மூலம் சூரிய
ஒளி மின்சாரம்
தயாரித்து பூமிக்கு கொண்டு வர
திட்டமிட்டுள்ளது.
அதற்கு ‘ஜனா ரிங்’ என
பெயரிட்டுள்ளனர்.
இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட்
மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு
கொண்டு வர முடியும்.
ஒரு டெராவாட் என்பது 1 லட்சம்
கோடி வாட் ஆகும். இந்த
திட்டத்தின் கட்டுமான
பணி வருகிற 2035–ம் ஆண்டில்
தொடங்கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க
சந்திரனின் பூமத்திய
ரேகை பகுதியில் 11 ஆயிரம்
கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர்
இடைவெளியில்
ஆங்காங்கே சோலார் மின்கலன்கள்
அமைக்கப்பட உள்ளன.
சந்திரனில் சோலார் பேனல் தகடுகள்
மற்றும் சோலார் மின்கலன்கள்
அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
சந்திரனின் பூமத்திய
ரேகை பகுதியில் அமைக்கப்படும்
சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள்
மூலம் பெறப்படும் மின்சாரம்
மைக்ரோவேவ் மற்றும் லேசர்
டிரான்ஸ்மிசன் நிலையங்களில்
இணைக்கப்படும். பின்னர் அவை 20
கி.மீட்டர் விட்டமுள்ள
ஆண்டனாக்கள் மூலம்
பூமிக்கு வரும்.

No comments:

Post a Comment