Thursday, 12 December 2013

சிரித்து விடு...

சிரித்து விடு
நீயும் இன்றே..
ஆசை தீர
சிரித்து விடு...!!
பணமிருந்தால்
ஒரு கல்வி
பாமரனுக்கு
ஒரு கல்வி..
போராடும் காலம்
வரும்..!!
போகட்டும்
சிரித்து விடு...
பாசம் கொண்டால்
வேசம் என்பர்
வேசம் போட்டு
பாசம் என்பர்..
ஏமாறும் காலம்
வரும்..!!
போகட்டும்
சிரித்து விடு...
காதல் தோன்றும்
காலம் அதில்
காதல் நம்பி
பிரிவு என்றால்..
சாதல் என்றே
எண்ணத் தோன்றும்..!!
போகட்டும்
சிரித்து விடு...
ஊன் கொடுத்து
உயிர் கொடுத்து
பாசத்தாலே சீராட்டி..
பாராட்டி பெற்ற
மகவும்..
படி துரத்தும்
காலம் வரும்..!!
போகட்டும்
சிரித்து விடு...
இதழ் சிரிக்க
மனம் நஞ்சாம்..
சூழல் உள்ள
காலம் இதில்..
சோகம் இல்லா
உன் சிரிப்போ,
கள்ளம் இல்லா
பொன் சிரிப்பாம்..
அதனால்,
சிரித்து விடு
நீயும் இன்றே..
ஆசை தீர
சிரித்து விடு...

No comments:

Post a Comment