இரவில் தூக்கம் வராமல்
அவதிபடுபவரா நீங்கள்?
அன்று பிரசுரிக்கப்பட்டது.
இவ்வுலகில் தூக்கம்
என்பது ஒரு பெரிய
பிரச்சினை ஆகிவிட்டது.
நிம்மதியான தூக்கம்
ஒவ்வொருவருக்கும் அவசியம்.
இத்தகைய தூக்கப்
பிரச்சனை வருவதற்கு காரணம்,
அதிக வேளைப்பளுவின் காரணமாக
மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய
தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில
செயல்களை செய்வதால்,
சரிசெய்யலாம். அதுவும்
மருந்து மாத்திரைகள்
இன்றி ஆழமான, ஆரோக்கியமான,
நிம்மதியான தூக்கத்தை தூங்கவும்,
புத்துணர்ச்சியுடன்
எழுந்து வேலைகளை செய்யவும்
சில வழிகள் உள்ளன.
இப்போது அந்த செயல்கள்
என்னவென்று படித்து தெரிந்து
கொள்ளுங்கள்.
* பொதுவாக தாமதமாக
படுக்கைக்கு சென்று, தாமதமாக
எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம்
படுத்து, சீக்கிரம் எழுதல்
என்பதை ஒரு முறையாக செய்தல் மிக
அவசியம். அதிலும் இந்த இரண்டில்
ஏதாவது ஒன்றை பின்பற்றி வர
வேண்டும். இதனையே வழக்கமாக
தொடர்ந்தால், நன்றாக தூங்க
வாய்ப்புள்ளது. மேலும் எங்கு இடம்
மாறி சென்றாலும், இந்த
பழக்கத்தை தொடர வேண்டும்.
சிலருக்கு புது இடம் சென்றால்
தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான
நேரத்தில் தூங்க செல்வதாலும்,
சரியான நேரத்தில்
எழுந்திருப்பதாலும், நாம்
ஆரோக்கியமான தூக்கத்தைப்
பெறலாம்.
* காலையில்
எழுந்து உடற்பயிற்சி செய்தல்
உடலுக்கு ஒருவகையான
புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நடைபயிற்சி, ஓடுதல்,
வண்டியோட்டுதல்
அல்லது பளு தூக்குதல்
என்று வெறும் 20-30 நிமிடங்கள்
ஏதாவது ஒரு வேலையை செய்தால்,
இரவில் உடலானது சோர்வடைந்து,
நன்றாக தூங்க முடியும்.
* அதே போல் நாம் இரவு தூங்கும்
முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30
நிமிடம் நடை நடத்தல், சூடான
குளியல் போன்றவை அவசியம்.
இப்படி செய்வதால் உடல்
தளர்த்து ஒரு விதமான
புத்துணர்ச்சியுடன் நிம்மதியான
தூக்கத்தைப் பெறலாம் என்பதில்
சந்தேகம் இல்லை.
* இரவில் அதிக தண்ணீர் குடிக்க
வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர்
குடிக்கவும். இரவில் அதிக
தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில்
சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க
வேண்டியிருக்கும். அதனால்
தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும்
தூங்க நேரமாகும். மேலும்
காலையில் நல்ல தூக்கம் வந்து, பின்
எழுந்திருக்க முடியாமல்,
வேலைகள் அனைத்தும்
சோம்பேறித்தனமாகவும், நம் உடல்
சோர்வாகவும் இருக்கும்.
* நல்ல தரமான தலையணை மற்றும்
மெத்தையை வாங்கி தூங்க
வேண்டும். இதனாலும் நல்ல
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
* இரைச்சல் மற்றும் வெளிச்சம்
தூக்கத்தை கெடுக்கும்.
எனவே உறங்கும் அறையில்
வெளிச்சம் மற்றும் இறைச்சல்
இல்லாதவாறு செய்து கொண்டு, பின்
தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல
தூக்கத்தை பெற முடியும்.
எனவே அவற்றில்
இருந்து விடுபடுவதற்கான
வழிகளைத் தேடவும்.
* இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட
எளிதான
உணவை சாப்பிடுவது நல்லது. பால்
மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில்
தானியம், என்று இரவில்
சாப்பிடுவதால் நிம்மதியான
தூக்கம் நிச்சயம். இரவில்
கொழுப்பு மற்றும்
புரதச்சத்து கொண்ட
உணவுகளை சாப்பிடுவதை
தவிர்க்கவும். ஏனெனல்
அவை இரவில் ஜீரணமாகாமல், தூங்க
செய்யாமல் செய்துவிடும்.
எனவே இது போன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வந்தால்,
நிம்மதியான மற்றும் அமைதியான
தூக்கத்தைப் பெறலாம்.
வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால்,
அதை எங்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sunday, 1 December 2013
இரவில் நன்றாக தூக்கம் வர...
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment