Friday, 6 December 2013

பாம்பிற்கு முட்டை வைப்பதும், பால் ஊற்றுவதும் எதற்காக தெரியுமா ?

பாம்பிற்கு முட்டை வைப்பதும், பால்
ஊற்றுவதும் எதற்காக தெரியுமா ?

விஞ்ஞான ரீதியில்
சொல்லப்போனால்
நிஜமாகவே பாம்புகள்
முட்டையையும், பாலையும்
குடிக்காது. அப்படி இருக்க நம்
முன்னோர்கள் எதற்காக இந்த
வழக்கத்தை கொண்டுவந்தனர்
என்பதன்
உண்மை நோக்கத்தை இங்கு காண்போம்.

பழங்காலங்களில்
மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக
இருந்தது பாம்புகள். காரணம்
அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம்
மிக மிக குறைவு.மனிதனை விட
பாம்புகள் எண்ணிக்கையில் அதிகம்
காணப்பட்டது.
ஒரு உயிரினத்தை கொல்லும்
உரிமை தன்னிடம்
இல்லை என்பதை உணர்ந்த அன்றைய
தலைமுறையினர்.
பாம்புகளை கொல்லாமல் அதன்
இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த
முயன்றனர். பாம்புகள்
இனப்பெருக்கம்
மேற்கொள்வது மிகவும்
வித்தியாசம். பெண் பாம்பு தான்
உடலில் இருந்து ஒரு வித வாசனை
திரவத்தை(பரோமோன்ஸ்)
அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண்
பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும்
வாசனையை கட்டுப்படுத்தும்
வேலையை பால்
முட்டையிலிருந்து வரும்
வாசனை தடுக்கிறது .ஆகவே
அவற்றால் இனப்பெருக்கம் செய்ய
முடியாது. இதற்காகத்தான் நாம்
பாம்புகளுக்கு பாலும், முட்டையும்
வைக்கிறோம்.

No comments:

Post a Comment