Saturday, 21 December 2013

சளி,இருமல்,அஜீரணத்துக்கு கஷாயம்...

அதிமதுரம் டீ...

தேவையான பொருட்கள்:

அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி
தேன்
அல்லது நாட்டு சர்க்கரை அல்லது
கருப்பட்டி – சுவைக்கேற்ப.

செய்முறை:

அதிமதுரம்
நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும். வாங்கி நிழலில் காய
வைத்து, சுத்தம்
செய்து பொடி செய்து, காற்று புகாத
டப்பாவில் போட்டு வைக்கவும்.
பொடியை நீரில் போட்டு 2 நிமிடம்
கொதிக்க வைத்து தேன்
அல்லது நாட்டு சர்க்கரை கலந்து
வடிகட்டி பருகவும். இது தீராத
தாகத்தை தணிக்கவல்லது,
சளிக்கு நல்லது.
தொண்டை புண்ணை ஆற்றும்
வல்லமை கொண்டது.

இஞ்சி கசாயம்...

தேவையானவை:

இஞ்சி சாறு – 4 ஸ்பூன்
தேன் – 4 ஸ்பூன்
லெமன் ஜுஸ் – 2 ஸ்பூன்
தண்ணீர் – ¾ டம்ளர்.

செய்முறை:

இஞ்சி அரைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும். தேன், லெமன் ஜுஸ்
மற்றும் தண்ணீரோடு கலந்தால் கசாயம்
தயார். இது அஜீரணக்
கோளாறுக்கு நல்ல மருந்து.

No comments:

Post a Comment