Sunday, 29 December 2013

ஆச்சரியம் தரும் நெய்யின் மகத்துவம்

ஆச்சரியம் தரும் நெய்யின்
மகத்துவம்...

நெய்யில்லா உண்டி பாழ்
என்பது சித்தர்கள் கூற்று.
இதை இன்றைய அறிவியல்
பூர்வமாக ஆராய்ந்தால் அதன்
மருத்துவ குணங்கள்
நமக்கு வியப்பளிக்கும்.
எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட
நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது
என்பதைப் பற்றி முதலில்
அறிவோம்.

பாலை நன்றாக
காய்ச்சி ஆறிய பின் அதில்
சிறிதளவு தயிரை கலந்து
மூடிவைத்து 6 அல்லது 8
மணி நேரத்திற்குப் பின் எடுத்துப்
பார்த்தால் அது முழுவதும் தயிராக
மாறியிருக்கும்.
இந்த தயிரில்
சிறிது நீர்விட்டு மத்தால்
கடைந்தால் வெண்ணெய் தனியாக
பிரிந்துவிடும். இதனை சட்டியில்
இட்டு காய்ச்சும்
போது அது உருகும். அதில்
வெற்றிலை அல்லது முருங்கை
இலையை போட்டால் நன்றாக
பொரியும். நல்ல
வாசனை உண்டாகும். பின்
அதனை இறக்கி வடிகட்டி
பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுக்கப்படும்
நெய்யானது வெகுநாட்கள்
வரை கெடாமல் இருக்கும். இத்தகைய
நெய்யில்தான் மருத்துவ குணங்கள்
அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த
ஆயுர்வேத மருத்துவத்தில்
நெய்யின் பயன்பாடு அதிகம்
இருந்து வந்துள்ளது. மருத்துவக்
குணம் வாய்ந்த மூலிகைகளில்
உள்ள அணுக்களின்
சுவர்களை ஊடுருவக்கூடிய
தன்மை நெய்க்கு இருப்பதால்
இத்தகைய மருந்து தயாரிப்பில்
நெய்யை அதிகம்
பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க
நெய்யே சிறந்த பொருளாகும்.

நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத
மருந்தாளர்களால்
அழைக்கப்படுகிறது. ஏன் என்றால்
முழு உடல் நலம் கொடுத்து நீண்ட
ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும்
மருந்துகளுக்கு துணைமருந்தாகவும்,
மருந்துகள் கெடாமல்
பாதுகாப்பதற்கும்
நெய்யையே பயன்படுத்தி
வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம்
கொழுப்பு சத்துக்கள்
நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள
அமிலத்தன்மையை சமன்
செய்து வயிறு மற்றும் குடல்
பகுதியில் உள்ள மியூகஸ்
லையனிங்
பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற
சத்துக்கள் கிடையாது. இதனால் பால்
மற்றும் பால் பொருட்கள்
ஒத்துக்கொள்ளாதவர்கள்
நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கேன்சர், வைரல்
நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic
Acid உள்ளது. இது உடல்
பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற
கொழுப்பு அமிலம் நெய்யில்
உள்ளதாக அண்மையில்
கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த
நெய்யை உணவில்
எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி
அதாவது நெய்யை நன்கு உருக்கி
சுடு சாதத்தில்
சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
நெய்யை உருக்கி சாப்பிடுவதால்
உடலுக்கு குளிர்ச்சியைக்
கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும்
போது எண்ணைய்க்கு பதிலாக நெய்
சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த
பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத,
பித்த, கபத்தின் சீற்றங்களைக்
குறைத்து அதனதன் நிலையில்
நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத்
தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப்
பலப்படுத்தி கண்
பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல்
வலுவில்லாமல் காணப்படுவார்கள்.
சிறிது தூரம் நடந்தால்கூட
அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும்.
உடனே அமர்ந்து விடுவார்கள்.
கால்கள் அதிகமாக வலிப்பதாகக்
கூறுவார்கள். இதற்கு காரணம்
உடலில் சத்தின்மையே.
இவர்கள் தினமும் மதிய உணவில்
நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத்
தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள்
பசியின்மையால்
அவதியுறுவார்கள். சரியான
நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும்,
அதிக பட்டினியாகவும்
இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண
அமிலங்கள் சுரந்து குடலின்
உட்புறச்
சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.
மேலும் வாயுக்
கோளாறு உள்ளவர்களுக்கும்,
உணவில் அதிக காரம் சேர்த்துக்
கொள்பவர்களுக்கும், மது போன்ற
போதை வஸ்துக்கள்
உபயோகிப்பவர்களுக்கும், மன
அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல்
புண்ணாகிவிடும். இதனால்
வாயிலும் புண்கள் உருவாகி,
ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய்
சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின்
உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள்
ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண
சக்தியைத் தூண்டும்.

No comments:

Post a Comment