தமிழர்கள் கலாச்சாரம்
எங்கே செல்கின்றது.
» » » » » » » » » » » » » » » » » » » » » » » » »
மேற்க்கு கலாச்சாரம்
தமிழர்கள் வாழும்
நாடுகளை தொற்றுகின்றது
என்கிறார்கள். இது பற்றிய
ஆராய்வுக்கான அவசியம்
தற்போது உள்ள தேவையும் பற்றி ஒரு கருத்துபரிமாற்றம்.
மேற்க்கத்தைய நாட்டு உடைகளின்
ஆதிக்கம்,கலாச்சார ஆதிக்கம்,
மது,மாது போன்ற
நடைமுறை சிக்கல்கல்கள் என பல
வகையில்
பிரித்து பார்க்கலாம்.தமிழர்கள்
தமது கலாச்சாரத்தை பேணாமல்
மேற்க்கத்தைய கலாச்சாரத்தில்
பாழாகின்றார்கள் என
அதி மேதாவிகள்
கருத்துக்கள்.பட்டிமன்றங்கள்,
பொதுமேடைகள், வலைத்தளங்கள்,
பத்திரிகைகள் என பல விமர்சகர்கள்
மேற்க்கத்தைய கலாச்சரத்தை தரம்
கெட்டதாக
விமர்சிப்பதை அறிந்திருக்கலாம்.
தமிழர்கள் அடர்ந்து வாழும்
இந்தியா, இலங்கை போன்ற
நாடுகளில்
எமது கலாச்சாரங்களுக்கான
ஆவணங்கள் சிலதை ஆராய்ந்தால் பல
விடயங்கள் வெளிப்படும்.பல
கல்யாண முறைகள்
இந்து கடவுள்களிடம்
உண்டு.உடைகளில் பல தமிழ்
உடைகள் ஆபாசமானதாக
இருப்பதை அவதானிக்கலாம்.
இதைவிட குடும்ப உறவுகளில்
கணவன் மனைவிக்கான அந்தரங்க
விடயங்களில்
வெளிப்படைத்தன்மை இல்லாமை
தமிழர்களிடம் இல்லை ஆனால்
மேற்க்கத்தைய நாட்டவர்கள்
வெளிப்படையான பல
விடயங்களை தப்பு என்பார்கள்.
மேற்க்கு நாட்டவர்கள் ஒரு கல்யாணம்
விவாகரத்து மறு கல்யாணம்
இது தப்பா என பார்த்தால்
இல்லை எனவே சொல்லலாம்.இவர்கள்
முதல் மனைவியின் விவாகரத்துடன்
இரண்டாம் மனைவியோடு வாழ்கை
நடத்தினாலும் முதல்
மனைவியை நண்பராகவே
கையாளவார்கள்.நம்மவர்
விரோதியாகவும், கேவலமாகவும்
நடத்துவதை அவதானிக்கலாம்.
அதேவேளை முதல்
மனைவியை இன்னொரு வாழ்கையை
அமைக்கவே விடுவதில்லை.
மேற்க்கத்தையவர்கள்
ஒரே வேளையில் பல
மனைவிகளுடன் குடும்பம்
நடத்தமாட்டார்கள்.தமிழர்கள்
அதிகமாக இந்தியாவில் பல
மனைவி,பல கணவன்
வாழ்கை அதிகமாகும்.உதாரணமாக,
கருணாநிதி. எம்.ஜி.ஆர்,
விஐயகுமார், சரத்குமார்,
எம்.ஆர்.ராதா, ராதிகா, லட்சுமி,
ஜெமினிகணேசன், என
அறிமுகமான
பட்டியலை நீட்டிக்கொண்டே
போகலாம்.சொல்வதெல்லாம்
உண்மை எனும்
தொலைக்காட்சி நிகழ்சிகளை
பாருங்கள் அதிகமானவை பல
திருமண குளறுபடிகளே.
மேற்கத்தைய நாட்டவர்களிடம் எந்த
அளவு வெளிப்படை தன்மை உண்டோ
அந்த அளவுகளிலேயே திருமண
பந்தங்களும்.தமிழர்களிடம்
எவ்வளவுக்கு மறைமுகத்தன்மைகள்
உண்டோ அந்த அளவுக்கு பல
சிக்கல்லை கொண்டதே
திருமணங்களும். உடைகள்
விடயத்தில் அவரவர் வாழும்
நாடுகளில் காலநிலைகள்,
நாகரீகங்கள்.பொருளாதாரநிலை என
பலவற்றை தாங்கியதே. தமிழர்கள்
தாம் வாழும் நாடுகளைபற்றியோ,
காலநிலைகள்
பற்றியோ சிந்திப்பவர்கள்
அல்ல.சகல வாழ்கை முறைகளையும்
கலவையாக
வாழுவதை அவதானிக்கலாம்.
உதாரணம் தமிழ் திருமணம் ஆனால்
சைனிஸ்,சகல இந்திய
மாநிலங்கள்,வெள்ளைக்காரனின்
முறைகள், பல்லக்கு,குதிரை என பல
இல்லாத முறைகள் என
கலப்பு முறைகளும் உடைகளும்
உணவுகளும் என ஒரு தவறான
பாதைகளை நோக்கி எமது சந்ததியை
எடுத்து செல்வதைக்கூடாத
தமிழர்கள் உணராமல் வாழ்கிறார்கள்.
"எந்த கலாச்சாரமும்
அவரவர்களுக்கு பெருமைக்குரியதே
ஆனால் தமிழர்கள்
மட்டுமே மற்றவரது கலாச்சாரத்தின்
தீயவற்றை இறுக
பற்றிவருகின்றோம்".
No comments:
Post a Comment