காலங்களால் அழியாத
சாதனைகளுக்கு வித்திட்ட “சார்லஸ்
பாபேஜ்”
இன்றைய உலகில்
நமது கைக்குள்
இருக்கும் சின்ன
கைபேசியில் நவீன
கணனியே இயங்குகிறது என்ற
சொன்னால் அது மிகையல்ல.
இதனால் தான்
என்னவோ தொழில்நுட்பத்தின்
மகத்துவத்தையும், உன்னதத்தையும்
பலரும் நினைத்து பார்ப்பதில்லை.
தொலைக்காட்சி பெட்டியை போல்
அனைத்து வீடுகளிலும்
கணனி எளிதாக
உள்நுழைந்து விடுகிறது.
அதுமட்டுமா, அலுவலகங்கள்,
கல்வி நிலையங்கள்,
விற்பனை வளாகங்கள், வங்கிகள்,
ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ
நிலையங்கள் என எந்த
ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும்
கணனி இன்றி ஒரு அணுவும்
அசையாது எனும்
நிலைமைக்கு வந்து விட்டோம்.
அத்தனை பேரையும்
அடிமையாக்கி வாழ்ந்து
கொண்டிருக்கும் கணனியின்,
தொடக்கம்
எப்படி உருவானது என்று நினைத்து
பார்த்தாலோ ஆச்சரியங்கள்
மேலோங்கி நிற்கின்றன.
சார்லஸ் பாபேஜ்- வரலாறு
இதன் தொடக்கம் கணனியின்
தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ்
பாபேஜ் (1791-1871) என்பவரால்
உருவாக்கப்பட்டது.
இவர் 1791ம் ஆண்டு டிசம்பர் மாதம்
26ம் திகதி லண்டனில் பிறந்தார்.
தொடர்ந்து 1810ம் ஆண்டில்
கேம்பிரிட்ஜில் உள்ள
டிரினிட்டி பல்கலைகழத்தில்
இணைந்தவர், கணிதத்தில் சிறப்பான
திறமையை வெளிப்படுத்தினார்.
1834ம் ஆண்டு கணிதத்தையும்,
எந்திரத்தையும் இணைத்துப்
பகுப்பாய்வுப் பொறி (Analytical
Engine) என்ற முதல் கணனியை அவர்
உருவாக்கினார்.
கணனியின் ஆரம்ப வடிவம்
மிகப்பெரிய அறைக்குள்
திணிக்கப்பட்ட ஏராளமான
இயந்திரங்கள்
என்பதே வியப்பூட்டும்
உண்மையாகும்.
60 ஆண்டுகளுக்கு முன்
அறுபது ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்ட முதல்
கணனியை வைக்க ஒரு மிகப்பெரிய
அறை தேவைப்பட்டிருக்கிறது.
இப்போது இருப்பது போல வசதிகள்,
மானிட்டர், கீபோர்ட் எதுவும்
இல்லாத, புள்ளிகளும் கோடுகளும்
இணைந்து செயல்பட்ட முதல்
கணனியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணனியில் வேகமும்,
விவேகமும் மிகவும் குறைவு.
தற்போதைய சாதாரண கணனிகளின்
நினைவாற்றல் அந்த முதல்
கணனியின் நினைவாற்றலை விட
பத்து இலட்சம் மடங்கு அதிகம்
என்றால் நினைத்துப் பாருங்கள்.
அவருடன்
இணைந்து பணியாற்றியவர் புகழ்
பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன்
என்பவரின் மகளான ‘Augusta Ada
King’ என்பவர்
உலகின் முதல் கம்ப்யூட்டர்
புரோகிராமர் ஒரு பெண். அவர்
“அடா பைரன் லவ்லேஸ்(Ada Byron
lavles)” (1816-1852).
மிகச்சிறந்த கணித அறிஞராகவும்,
இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப்
பொறிகளான அனலிட்டிக்கல்
என்ஜின்(Analytical Engine) மற்றும்
டிஃபரன்ஸ் என்ஜினை(Difference
engine) வடிவமைத்தவர் சார்லஸ்
பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ்
உடன் சேர்ந்து பணியாற்றினார் அடா.
பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்”
வடிவமைப்பில்
ஈடுபட்டபோது அதன்
ஆற்றலை மற்றவர்களைவிட
மிகச்சரியாக விளங்கிக்கொண்டார்.
அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத்
தேவையான புரோகிராம்களையும்
எழுதினார்.
தலைமுறைக் கணனிகள்
பல வருடங்களுக்கு முன்னால் இந்த
சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும்,
இந்த சாதனை அதிகரப்பூர்வமாக
1948ம் ஆண்டு ஜூன் 21ம்
திகதி அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1948 இல் டிரான்சிஸ்டர்(Transistor)
கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்
அதுவரை இருந்து வந்த வெற்றிடக்
குழலுக்கு(Vacuum tube)
விடை தரப்பட்டது, இதன்
விளைவாக இரண்டாம் தலைமுறைக்
கணனிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச்
சுற்றமைப்பு(Integerated cirucuit –
IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்
மூன்றாம் தலைமுறைக் கணனிகள்
வந்தன.
இதனால் ஒரு சாதாரணச் சில்லைப்
(Chip) பயன்படுத்தி பல கணனிப்
பகுதிகளை இணைக்க முடிந்தது.
ஒரு இயக்க அமைப்பினைப்(Operating
system) பயன்படுத்தி பல
நிரல்களை (Programmes) இயக்கும்
வாய்ப்பும் உண்டாயிற்று.
மேலும் நான்காம் தலைமுறைக்
கணனி உருவாவதற்கும்
வழி ஏற்பட்டது.
1971 இல் இன்டெல் நிறுவனம்
கண்டுபிடித்த 4004 சில்லுவில்
மையச் செயலகம்(Central Processing
Unit – CPU), நினைவகம்(Memory),
உள்ளீடு/வெளியீட்டுக்
கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய
அனைத்தும் இடம்பெற்றன.
1981 இல் IBM நிறுவனம் தனியாள்
கணனியை(Personal Computer – PC)
அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்க ஐக்கிய
நாட்டில் உள்ள மொத்தக்
கணனிகளின் எண்ணிக்கை உலகின்
மற்ற எல்லா நாடுகளிலுள்ள
கணனிகளின் எண்ணிக்கையைவிடக்
கூடுதலாகும்.
அந்த முதல் விதை விழாமல்
இருந்திருந்தால், அந்த முதல்
மூளை எழாமல் இருந்திருந்தால்
இன்றைக்கு நாம் காணும்
பெரும்பாலான வளர்ச்சிகள்
சாத்தியமில்லாமல் போயிருக்கக்
கூடும்.
காலங்களால் அழியாத
சாதனைகளுக்கு வித்திட்ட
மாமனிதரை போற்றுவோம்!....
No comments:
Post a Comment