Thursday, 19 December 2013

ஆணழகன்

ஆண் அழகன்...

கோபத்தின் உச்சியிலும்
ஒரு பெண்ணிடம் தகாத
வார்த்தை பேசாததிலும்,
ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற
பெயரில் அவள் கூனிக்
குறுகும்படி அவள்
அங்கங்களை வர்ணிக்காததிலும்,
எந்த சூழ்நிலையிலும்
ஒரு பெண்ணின்
கண்ணீருக்கு காரணமாகாமல்
இருத்தலிலும் தான்,
ஆண்மையின் வீரம் இருக்கிறது.
உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும்
செயலிலும்,பேசும்
வார்த்தைகளிலும், மனதில் இருக்கும்
எண்ணங்களிலும் இருப்பதே வீரம்.
அத்தகைய
வீரத்தை உடையவனே உண்மையான
ஆணழகன்.

No comments:

Post a Comment