“ஸ்லிம்” ஆக வேண்டுமா?
உணவே மருந்து,
மருந்தே உணவு என்பது தமிழர்களின்
பாடம்.
நமது முன்னோர் தங்களுக்கு வரும்
நோய்களை உணவில்
மாற்றங்களை செய்வதன்
மூலமே போக்கிக் கொண்டனர்.
இந்த வரிசையில் தமிழர்கள்
உணவில் அடிக்கடி இடம் பெறும்
ஒரு தாவரம் புதினா.
மடிந்த விளிம்புகளுடன் கூடிய
பச்சை பசேலென்ற இலைகளுடன்
காணப்படும் புதினா அபாரமான
மணமும், ருசியும் கொண்டது.
புதினாவில் வயல் புதினா, கார்ன்
புதினா, ஜப்பானிய புதினா,
கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட
40 வகை புதினாக்கள்
இருக்கின்றனவாம்.
இதில் ஏ.பி.சி வைட்டமின்கள்,
துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு,
இரும்பு, பொட்டாசியம்,
சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து,
புரதம் என்று பல சத்துக்கள்
நிரம்பி காணப்படுகின்றன.
இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்
பொருட்கள் பெருங்குடல்
புற்று நோயை தீர்க்கும்
என்று மருத்துவ உலகம்
கண்டறிந்துள்ளது.
புதினாவை உணவில்
அனைத்து கீரைகள் மற்றும்
காய்கறிகளுடனும்
சேர்த்து பயன்படுத்தலாம்.
பத்து புதினா இலைகளை கழுவி
பச்சையாக
அப்படியே மென்று சாப்பிடலாம்.
அல்லது புதினா இலைகளை
தண்ணீரில் கொதிக்க
வைத்து அருந்தலாம்.
புதினா, வயிற்று வலி, அஜீரணம்,
வாயுத் தொல்லை, மலச் சிக்கல்,
உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட
பல வயிற்றுக்
கோளாறுகளை தீர்த்து விடுகிறது.
இதன் தண்டுகளையும்,
இலைகளையும் சேர்த்து தண்ணீரில்
கொதிக்க வைத்து, அதில் தேன்,
எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும்
, அதிகாலையிலும்
குடித்து வந்தால் வயிற்றில் உள்ள
கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன்,
காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும்.
செரிமானம் ஆவதில்
பிரச்சினை இருந்தால்
புதினா சாறுடன்
எலுமிச்சை சாறு கலந்து குடித்தால்
செரிமானக் கோளாறு நீங்கி விடும்.
புதினாவை அரைத்து முகத்தில்
பூசி வந்தால் முகப்பரு, வீக்கம்,
தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும்.
புதினாவில்
இருந்து தயாரிக்கப்படும் மென்தால்
என்ற எண்ணெய்
தலைவலிக்கு நல்லது.
புதினாவில் இருந்து பற்பசையுடன்,
காதுவலி, வீக்கம், சைனஸ்,
மூட்டுவலி ஆகியவற்றுக்கான
மருந்துகளும்
தயாரிக்கப்படுகின்றன.
புதினாவை அடிக்கடி உணவில்
சேர்த்து வந்தால் ஊளைச்
சதை குறைந்து ‘ஸ்லிம்’ ஆகலாம்.
No comments:
Post a Comment