Tuesday, 31 December 2013

தமிழ் திருமண முறைகள்...

இக்காலத்தில் இடம்பெறும்
திருமணங்கள் தமிழ்
முறைப்படியும் இல்லாமல் வைதீக
முறைப்படியும் இல்லாமல்
இரண்டும்
கலந்து நடைபெறுகின்றன.
திருமணத்தின் போது செய்யப்படும்
சடங்குகள் எல்லாம்
அறிந்து செய்வதில்லை, இயந்திரம்போல்
முன்னுக்கு பின் முரண்பாடாக
செய்து வருகிறார்கள்.
எனவே தமிழ்த்திருமண முறைகள்
கீழே ஒழுங்காக
தொகுத்து தரப்பட்டுள்ளன.

திருமண உறுதி / நிச்சயதார்த்தம்:

திருமண
உறுதி சடங்கை நிச்சயதார்த்தம்
என்று வட மொழியில் சொல்வர்.
காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற
சொல்லே நிலைத்து விட்டது.
மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும்
சான்றோர்களையும்,சுற்றத்தார்களையு
ம் அவையில் கூட்டி மணநாள்
குறித்து ஒப்புதல்
செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :

அவையில் சான்றோர்களுடன்
மணமக்களை சார்ந்த பெற்றோர்கள்
அமர்ந்து இருவரும்
ஒருவருக்கொருவர்
மாலையிட்டு சந்தானம், பன்னீர்
கொண்டு நலுங்கு செய்து கொள்ள
வேண்டும்.
இரு தட்டில்
வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள்
வைத்து அதில் திருமண
உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்ப
ம் இட்டு வைக்க, சான்றோர்
(இரு நகல்கள்) சபையில்
படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்க
ல்பம் செய்து திருமண
உறுதி புடவையும்,
அணிகலன்களையும் கொடுத்தல்
வேண்டும். மணமகள்
அப்புடவையை அணிந்து வந்து சபை
யோரை வணங்க வேண்டும்.
சான்றோர்கள் மஞ்சள்,
அரிசி தூவி ஆசீர்வதித்து பின்
மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.

தமிழ் திருமுறை, திருமண தீபம்:

மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள்
பிள்ளையார், முளைப்பாலிகை,
நவகோள்கள்
வைத்து இரு குத்து விளக்கில்
ஒன்றில் மணமகள் வீட்டாரும்,
மற்றொன்றில் மணமகன் வீட்டாரும்
தீபம் ஏற்ற வேண்டும்.

அம்மை அப்பர் கலச வழிபாடு:

மூன்று கலசத்தில் முதல் கலசம்
கொண்டு புண்ணிய வாசம் செய்த
பிறகு அடுத்த இரு கலசங்களில்
இத்திருமணத்துக்கு சாட்சியாக
அம்மை அப்பர் தெய்வத்தையும்
ஆவாஹனம் செய்து வரவழைக்க
வேண்டும்.

நவகோள் வழிபாடு:

முழு பச்சை பாக்குகள்
ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள்
குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில்
உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமம
ாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ
மந்திரத்தை சொல்லி நவக்கிரக
பூஜையை முடித்த வேண்டும்.

முளைப்பாலிகை வழிபாடு:

தமிழ் திருமணங்களில்
முளைப்பாலிகை வழிபாடு மிக
முக்கியமாக இடம் பெறுமாம்
திருமண விழாவில் இறைவனின்
திருவுளத்தை அறிந்த
கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.

மணமக்களை கன்னியர்களாக
வரவழைத்தல்:

மணமகள்,மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள்,
முளைப்பாலிகை இவற்றை வணங்க
செய்து புண்ணியகவாசம் செய்த
நீரை மணமக்கள்
மீது தெளித்து புத்தாடை மற்றும்
தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.

மங்கள நான் வழிபாடு:

மங்கல நானை தேங்காயில்
சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க
வேண்டும். மங்கல நாணில் உள்ள
திருமாங்கல்யத்தை மேலாக வைத்து,
மஞ்சள், குங்குமம் வைத்து,
தர்ப்பையில் மங்கல நாணின்
பாதத்தை தொட்டு கொண்டு தமிழ்
வேத மந்திரம்
அல்லது அபிராமி அந்தாதி பாடலை
பாட வேண்டும்.

முன்னோர்கள் வழிபாடு:

வந்தவுடன் மணப்பொங்கல்
வைத்திருப்பார்கள்.
அதற்கு பூஜை செய்து விட்டு,
முன்னோர்கள் உருவப்
படத்தையோ அல்லது அருவமான
மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல
பொருட்கள்
கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்க
ள் கொண்டு தமிழ் மந்திரம்
சொல்லி வழிபட வேண்டும்.

பாத பூஜை:

பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத
பூஜை செய்யும்போது நாற்காலியில்
அமர்ந்து நிதானமாக பாத
பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வா
திக்க வேண்டும். மணமகள் தான்
முதலில் பாத பூஜை செய்ய
வேண்டும்.

மங்கல நான் ஆகுதி:

அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்க
ப்பட்ட மங்கல நாணை குண்டத்தில்
அருகில் வைப்பார்கள். திருமந்திரம்
ஓதி மணமக்களை தொட்டு வணங்கி த
மிழ் வேதியர் திருமந்திரம்
ஓதி பெரிய மனிதரிடம் மங்கல,
நானை கொடுக்க அவர் மணமகனிடம்
கொடுக்க மணமகள் கழுத்தில்
பூட்டி மூன்று முடிச்சு இட
வேண்டும்.

விளக்கேற்றும் உரிமை, பட்டம்
கட்டுதல்:

மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள்
காமாட்சி அம்மன்
விளக்கை ஏற்றி நிற்க வேண்டும்.
தாலி கட்டிய பிறகு மணமகளின்
அப்பா, மணமகளின் தாய்மாமன்
இவர்கள் மணமகளுக்கு நெற்றியில்
பட்டம் கட்ட வேண்டும்.

அக்னி வலம் நிகழ்ச்சி:

மணமகன்
சுண்டு விரலோடு மணமகள்
சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்
னி வலம் வரவேண்டும்.
காமாட்சி அம்மன்
தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு
பெண் செல்ல வேண்டும்.
மணமகளுக்கு பின்னால்
முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு
சிறுமிகள் செல்ல வேண்டும்.

அம்மி மிதித்தலும்
மெட்டி அணிவித்தலும்:

அம்மி மிதித்தல்,
மெட்டி அணிவித்தல்
நிகழ்ச்சி அக்னி வலம் வரும்
பொழுது மூன்றாவது சுற்றில்
நடைபெறும் அம்மி,
என்பது கருங்கல்லால் ஆனது.
இது உடையுமே தவிர வளையாது.
மணமகளானவள் குடும்ப
கௌரவத்தை காப்பாற்ற இந்த
அம்மியை போல்
உழைத்து தேய்ந்து உடைய
வேண்டுமே தவிர, குடும்ப
கௌரவத்தை என்
இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன்
என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.

ஆசீர்வாத நிகழ்ச்சி:

வேதியர் தமிழ் வேத மந்திரம்
ஓதி மணமக்களுக்கு திருநீறு இட்டு
ஆசீர்வதித்த பின் பெரியோர்கள்
தத்தம் குல வழக்கப்படி மஞ்சள்
அரிசி தூவி வாழ்த்துவார்கள்.
இறுதியில் மணமக்களுக்கு பாலும்
பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில்
அமர செய்து வாழ்த்துவார்கள்.

உடல் எடையை நம் கட்டுப்பாட்டில் வைக்க...

உலகில் பெரும்பாலானோர்
கஷ்டப்படும் பிரச்சனைகளில்
ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய
உடல்
பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான
கொழுப்பு உள்ள
உணவுகளை அதிகம்
உட்கொள்வதால்,
கொழுப்புக்களானது உடலில்
ஆங்காங்கு தங்கி, உடல்
எடையை அதிகரித்துவிடுகிறது.
மேலும் தற்போதைய
வாழ்க்கை முறையில் உண்ணும்
உணவுகள்
அனைத்திலுமே கொழுப்புக்கள்
அதிகம் இருக்கிறது. கடைகளில்
விற்கப்படும் எந்த ஒரு உணவையும்
ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட
முடியாது.
அதுமட்டுமல்லாமல் கடைகளில்
கொழுப்பில்லாத உணவுகள்
என்று குறிப்பிட்டு விற்கப்படும்
உணவுகளில் தான் கொழுப்புக்கள்
அதிகம் உள்ளது. எனவே உடல்
எடையை குறைக்க நினைப்போர்,
உணவுகளில் கவனமாக இருப்பவராக
இருந்தால், இந்திய உணவுப்
பொருட்கள் என்று சொல்லப்படும்,
வீட்டில் இருக்கும் சில
பொருட்களைக் கொண்டே உடல்
பருமனை எளிதில்
குறைத்துவிடலாம்.
மேலும் இந்த உணவுகள் உடல்
எடையை குறைப்பதோடு,
உடலை ஆரோக்கியமாக நோய்கள்
எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும்.
இப்போது உடல் எடையை குறைக்க
உதவியாக இருக்கும் சில இந்திய
உணவுப் பொருட்களைக்
கொடுத்துள்ளோம். அதைப்
படித்து முயற்சித்து, உடல்
எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ளுங்கள்...

மஞ்சள்...

இந்திய உணவுகள் அனைத்திலும்
சேர்க்கப்படும் மஞ்சுள் தூளில்,
உடலில் தங்கியிருக்கும்
கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்
சக்தியானது உள்ளது. எனவே உடல்
எடையை குறைக்க நினைத்தால்,
மஞ்சள் தூளை உணவில் அதிகம்
சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால்
கொலஸ்ட்ரால் பிரச்சனையில்
இருந்தும் விடுபடலாம்.

பூண்டு...

அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால்,
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
என்று தெரியும். ஏனெனில்
பூண்டில் அல்லிசின் என்றும்
கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள்
இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால்
தங்குவது தடைபட்டு, இதயம்
ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல்
எடையையும் கட்டுப்பாட்டுடன்
இருக்கும்.

மிளகாய்...

உடலில் உள்ள
கொழுப்புக்களை கரைப்பதில்
மிளகாய் மிகவும் சிறப்பான
பொருள். ஏனென்றால், அதில் உள்ள
கேப்சைசின் என்னும் பொருள்,
உடலின்
மெட்டபாலிசத்தை அதிகரித்து,
கொழுப்புக்களை தங்க விடாமல்
செய்கிறது. இதனால் உடல் எடையும்
அதிகரிக்காமல் இருக்கிறது.

முட்டை...

தினமும்
ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால்,
அதிலிருந்து உடலுக்கு வேண்டிய
புரோட்டீன், கொழுப்பு மற்றும்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
போன்றவை கிடைத்து,
எனர்ஜி மற்றும் நல்ல கொலஸ்ட்ரால்
அதிகரித்து, உடல் எடை குறையும்.

எலுமிச்சை...

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம்
முழுவதும் சாப்பிடக்கூடிய
உணவுப் பொருள் தான் எலுமிச்சை.
இத்தகைய எலுமிச்சையை தினமும்
ஜூஸ் போட்டு குடித்து வந்தால்,
நிச்சயம் உடல் எடை சரியான
அளவில் இருக்கும்.

பட்டை...

பட்டையை உணவில்
சேர்த்தால், கொழுப்புக்கள் அதிகம்
சேராமல் உடல்
எடை கட்டுப்பாட்டுடன்
இருப்பதோடு, இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவும்
கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

காபி...

காபியை குடித்தால், உடலின்
மெட்டபாலிசமானது அதிகரித்து,
கொழுப்புக்கள் கரையும்.
எனவே தினமும் 2 கப்
காபி குடிப்பது நல்லது. குறிப்பாக
காபியை அளவுக்கு அதிகமாக
குடித்தால், உடலுக்கு கேடு தான்
விளையும்.

முட்டைகோஸ்...

பெரும்பாலான இந்திய
சாலட்டுகளில்
முட்டைகோஸானது பச்சையாக
சேர்க்கப்படும்.
இவ்வாறு முட்டைகோஸை பச்சையாக
சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
ஏனெனில் பச்சையாக
முட்டைகோஸை சாப்பிட்டால்,
சர்க்கரையின்
அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு,
கார்போட்ஹைட்ரேட்
கொழுப்புக்களாக மாறாமல்
இருக்கும்.

வாழைப்பழம்...

வாழைப்பழத்தை தினமும் காலையில்
சாப்பிட்டு வந்தால்,
உடலுக்கு எனர்ஜி கிடைப்பதோடு,
அதிகப்படியான நார்ச்சத்தும்
கிடைக்கும். மேலும்
இது எடை குறைவுக்கும்
வழிவகுக்கும்.

தக்காளி...

தினமும் சமையலில் சேர்க்கப்படும்
தக்காளியை அதிகம் சாப்பிட்டால்,
அடிக்கடி பசி ஏற்படுவது குறையும்.
இதனால் தேவையில்லாத
கொழுப்புக்கள் உடலில்
சேர்வதை தடுக்கலாம்.

கடுகு எண்ணெய்...

சமையலில்
கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால்,
அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இதயத்தை ஆரோக்கியமாக
வைத்திருப்பதோடு, ஒல்லியாகவும்
வைத்திருக்க உதவும்.

மோர்...

இந்தியாவில் குடிக்கப்படும்
ஸ்பெஷல் பானங்களில் ஒன்று தான்
மோர். இந்த மோர் செரிமான
மண்டலத்தை சீராக இயக்குவதோடு,
குறைவாக கலோரிகளைக் கொண்டது.
அதிலும் இதில் உள்ள சிட்ரிக்
எசன்ஸ், கொழுப்புக்களை கரைக்க
உதவியாக இருக்கும்.

ஆப்பிள்...

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும்
இரும்புச்சத்து அதிகம்
நிறைந்திருப்பதோடு,
இதனை சாப்பிட்டால், உடலில்
தங்கியிருக்கும் தேவையற்ற
கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு,
உடலை பிட்டாக வைத்துக் கொள்ள
உதவி புரியும்.

பாசிப் பருப்பு...

பாசிப் பருப்பில் கொழுப்புக்கள்
குறைவாக இருப்பதால்,
அது கொலஸ்ட்ரால்
பிரச்சனையை எதிர்த்துப் போராடும்
மற்றும் அத்தியாவசிய
வைட்டமின்களை உடலுக்கு தருகிறது.
எனவே உடல் எடையை குறைக்க
நினைப்போர், இதனை அதிகம்
உட்கொள்வது மிகவும் சிறந்தது.

தேன்...

தேன் இந்தியாவில்
மட்டுமின்றி உலகம் முழுவதும்
சுவைக்காக உணவில் பயன்படுத்தும்
ஒரு பொருள். ஆனால் இந்த உணவுப்
பொருள் இந்தியாவில் உள்ள
அனைத்து வீடுகளின்
சமையலறையிலும்
இருக்கக்கூடியது.
ஆகவே எடை குறைய
வேண்டுமெனில்,
சர்க்கரைக்கு பதிலாக தேனைப்
பயன்படுத்துவது மிகவும்
சிறந்தது.

தயிர்...

குறைந்த அளவு கொழுப்புள்ள
தயிரில் கலோரிகள் குறைவாகவும்,
சிட்ரிக் ஆசிட் அதிகமாகவும்
இருப்பதால், உடல்
எடை குறைவிற்கு வழிவகுக்கும்.
மேலும் தயிரும் செரிமான
பிரச்சனையை சரிசெய்து, உடலின்
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

கறிவேப்பிலை...

இந்தியாவில் சமையலில்
பயன்படுத்தும் ஒரு பொதுவான
மூலிகை தான் கறிவேப்பிலை.
இத்தகைய கறிவேப்பிலையில்
கொழுப்புக்களை கரைக்கும் பொருள்
அதிகம் நிறைந்திருக்கிறது.
ஆகவே எடை குறைய
வேண்டுமெனில் சாப்பிடும் போது,
உணவில் உள்ள
கறிவேப்பிலையை தூக்கி எறியாமல்,
அதனை சாப்பிட தொடங்குங்கள்.

மாதுளை...

மாதுளையில் நிறைய ஆன்டி-
ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்
கொழுப்புக்களை கரைக்கும் பொருள்
அதிகம் உள்ளது. எனவே தினமும்
ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால்,
உடலில் தங்கியுள்ள
கொழுப்புக்களை கரைத்து, பிட்டாக
இருக்கலாம்.

ஏலக்காய்...

சமையலில் சுவைக்காகவும்,
மணத்திற்காகவும் சேர்க்கப்படும்
ஏலக்காய், உடல் எடை குறைவதற்கும்
பயன்படுகிறது...உடல்
எடையை குறைக்க இந்த உணவுப்
பொருட்களைக் முயற்சித்து, உடல்
எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ள வாழ்த்துக்கள்...

Monday, 30 December 2013

நாம் எப்படி சாப்பிடலாம்!

நாம் எப்படி சாப்பிடலாம்!

நாம் உண்ணுவது,
நமக்கு மனநிறைவையும்,
முழுமையையும் கொடுத்தால் தான்
மகிழ்ச்சியாகவும் மன
நிறைவுடனும் வாழ முடியும்.
அந்த வகையில் சாப்பிடும்
உணவில் கடைபிடிக்க வேண்டிய
ஒழுங்கு முறைகள்
பெருமளவிற்கு நம்முடைய
வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.
உண்ணும் உணவு மனதிற்கும்
வயிறுக்கும் நிறைவாக இல்லாமல்
இருந்தாலோ அல்லது சாப்பிட்ட
ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு
நொறுக்குத் தீனிகளைத் தேடிச்
செல்லத்தூண்டினாலோ நமது உணவு
பழக்கம் சரியில்லை என்று பொருள்.
அதனால், சாப்பிடும்
உணவை ரசித்து,
சுவைத்து சாப்பிட்ட பின், அதில்
மனநிறைவையும் முழுமையையும்
கொடுக்கும் சில உணவுப்
பழக்கங்களைப்
பற்றி தெரிந்து கொள்வோம்.
சாப்பிடும்
போது தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டோ அல்லது பேசிக்
கொண்டோ சாப்பிடக் கூடாது.
உணவு உண்ணும் நேரத்தை,
சாப்பிடுவதில் மட்டுமே செலவிட
வேண்டும்.
அப்படி கவனத்துடன் சாப்பிடும்
வேளை களில், வேகமாகவும்,
முழுமையாகவும் உண்டு முடித்த
மனநிறைவு கிடைக்கும். மேலும்
சாப்பிடும் நேரங்களில் வேகமான
இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க
வேண்டும்.
ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது
அதிகப்படுத்திவிடும். இதனால்
உடல் நலத்திற்கும்
கேடு விளையும்.
நுகர்தலும், மெல்லுதலும்
உணவை நுகர்ந்து பார்க்கும் போதே,
பாதி மனநிறைவு ஏற்படும்.
இரண்டாவதாக, மெதுவாக
மென்று சாப்பிட வேண்டும்.
ஏனெனில் நொறுங்கத் தின்றால்
நூறு வயது! நன்றாக
மென்று சாப்பிடும் போது, நாவின்
உயிரணுக்கள் தூண்டப்பட்டு, இந்த
செய்தியை மூளைக்குக்
கொண்டு செல்லும். இதன் மூலம்
'நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்ற
உணர்வும் கிடைக்கும்.
நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற
உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு
காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள
உணவுகள் வேகமாக
வயிற்றை நிரப்பிவிடும்.
எனவே காய்கறி சாறும்,
திராட்சை களையும் சாப்பிடலாம்.
புரதச்சத்து அதிகமாக உள்ள
உணவுகளை விட,
கொழுப்பு அதிகமாக உள்ள
உணவுகள்
மனநிறைவை ஏற்படுத்தும்
உணர்வைத்
தூண்டுவதற்கு சற்று அதிகமான
நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
எனவே கொழுப்பு அதிகம் உள்ள
உணவுகளை தவிர்க்கலாம்.
தூக்கம்
தூக்கம் குறைவாக இருக்கும் போது,
க்ரெலின் மற்றும் குறைவான
அளவு லெப்டின் ஆகிய
ஹார்மோன்கள் உற்பத்தியாகும்.
இவை தான் உணவுத் தேவைக்கான
வேலைகளில் ஈடுபட்டு வருபவை.
வயிற்றில் சுரக்கும் க்ரெலின்
பசிக்கான
தூண்டுதலை அதிகப்படுத்தும்
போது, லெப்டின் மனநிறைவிற்கான
தூண்டுதலை உருவாக்கி, பசியைக்
குறைக்கும்.
எனவே உடலுக்கு ஓய்வும்,
தூக்கமும் தேவை.
தினமும் சராசரியாக 8
குவளை (3முதல் 4 லிட்டர்) தண்ணீர்
குடிக்க வேண்டும். சில
சமயங்களில்
அடிக்கடி பசியெடுக்கும்.
இதற்கு உண்மை யான காரணம்
தாகமாக இருப்பது தான்!
எனவே சாப்பிடும் முன் ஒரு தம்ளர்
அளவு அல்லது அதற்கும் மேல்
தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால்
உணவில் மனநிறைவும்,
முழுமையும் கிடைக்கும்.
சிறிய தட்டுகள்
சாப்பிடும்
தட்டு எவ்வளவு பெரியதாக
இருந்தாலும், அந்த தட்டு முழுவதும்
உணவைப் பரிமாறி,
தட்டு காலியாகும்
வரை சாப்பிடு வது தான் வழக்கம்.
இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன்
நோக்கம் முழுமை யாக மற்றும்
மனநிறைவாக
சாப்பிடுவது என்று இல்லாமல்,
தட்டை காலியாக்குவது தான்
என்று மாறி விடுகிறது. எனவே,
பெரிய தட்டுக்கு மாற்றாக,
சற்றே அளவில் சிறிய
தட்டினை பயன்படுத்தத்
தொடங்கினால்,
மனநிறைவை உணரலாம்.
நெடுநேரம் சாப்பிட வைக்கும்
உணவுகள்
சாப்பிட அதிக நேரம் எடுக்கும்
உணவு வகைகளை உண்ணும் போது,
உண்ணுவதில் முழுமையாக கவனம்
திரும்பும் மற்றும் மனநிறைவும்
ஏற்படும். எடுத்துக்காட்டாக,
நார்ச்சத்த அதிகமுள்ள அவரை,
வாழைத்தண்டு, காரமான
குழம்பு ஆகிய உணவுகள்
உண்ணும்
நேரத்தை அதிகப்படுத்தும்.
ஆப்பிள்
சாப்பிடுவதற்கு 20
நிமிடங்களுக்கு முன்னர்,
ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால்,
உணவின் அளவு குறைவதுடன்,
மனநிறைவும் கிடைக் கும்
என்று ஆராய்ச்சி முடிவுகள்
சொல்கின்றன. எனவே,
தினசரி உணவில்
ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன்
மூலம், தேவையான நார்ச்சத்தும்
கிடைக்கும்.
இயற்கை உணவுகள்
செயற்கையாக தயாரிக்கப்பட்ட
உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும்
பொருட்கள் அதிகமான
கலோரிகளைக் கொண்டது. எனினும்,
இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள்
மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும்
போது, அதிகமாக மென்று தின்ன
வேண்டியதாக இருப்ப தால்,
ஒவ்வொருமுறை மெல்லும் போதும்
மனநிறைவும், முழுமையும்
கிடைப்பதை உறுதி செய்ய
முடிகிறது.
இவைகளையெல்லாம் பின்பற்றும்
போது, உடலை பருமனடையச்
செய்யும் அதிகமான
உணவு உட்கொள்ளுதல்
குறைவதோடு, நீண்ட நாட்கள் நல்ல
உடல் நலத்துடன் இருக்கும்.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்...

தவறாக புரிந்து கொண்டுள்ள
ஏழு அறிவியல் உண்மைகள்...

என்னதான்
அறிவியல்
வளர்ந்தாலும்,
மக்கள் சில
விடயங்களை தவறாக
புரிந்து கொண்டுள்ளனர்.

வைரம்...

வைரம் என்பது மிக உயர்ந்த
விலையுள்ள ஆபரணம் ஆகும் .
இது எங்கிருந்து கிடைக்கிறது
என்று தெரியுமா, ஆம்
பூமிக்கு அடியில் புதைந்துள்ள
இறுகிப்போன நிலக்கரியில்
இருந்து தான் இந்த அரிய
வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த
ஆழத்திலிருந்து கிடைக்கிறது
என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.
அனைவரும்
இது பூமிக்கு அடியில் 2 மைல்
தொலைவில் கிடைக்கும்
என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90
மைல் தொலைவில் தான் இந்த
வைரம் இருக்கும்.

வௌவால்...

வௌவால் ஒரு வித்தியாசமான
உயிரினம், இவைகளுக்கு கண்கள்
இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் இந்த உயிரினத்தால் பார்க்கவும்
முடியும் . இவைகள் தங்கள்
மீஒலி எனப்படும்
சத்தத்தை எழுப்பி அதன் மூலம்
தனக்கு எதிரில் என்ன பொருள்கள்
இருக்கின்றது என்பதை உணர்ந்து
கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்...

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக
மின்சாரம்பாயாது. ஆனால்
தண்ணீரில் நின்று மின்சாரக்
கம்பியய் பிடித்தால் மின்சாரம்
பய்கிறதே அது ஏன்
என்று கேட்கலாம்.
பொதுவாக தண்ணீரில் பல வகையான
மினரல்கள் மற்றும் அழுக்குகள்
படிந்திருப்பதால் அதில் மின்சாரம்
பாய்கிறது.
ஆனால் சுத்தமான நீரில்
இப்படிப்பட்ட தாதுக்கள்
இல்லாதிருப்பதால் மின்சாரம்
பாய்வதில்லை.

மருக்கள்...

மனிதனின் மருக்கள் உருவாகக்
காரணம் தவளைகள் மற்றும் தேரைகள்
என்று பலரும் கருதுகின்றனர்
இது தவறான கூற்றாகும்.
இதற்கு காரணம் தேரைகள் அல்ல,
மனிதர்கள் தான், மருக்கள்
இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக்
குலுக்கினால் இவ்வாறான மருக்கள்
தோன்றும் என்று அறிவியல்
அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி...

தீக்கோழியை யாராவது
அச்சுறுத்தினால் அவற்றின்
தலையை மணலில்
புதைத்துக்கொள்ளும் என்று சிலர்
கூறுவார்கள்.
ஆனால்
அவற்றினை அச்சுறுத்தினால்
அவைகள் இறந்தவைகளைப் போல
செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்...

மனிதன் இறந்த பின்பு மனித
இரத்தம்
பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல
அடர்ந்த
சிவப்பு நிறமாகவோ இருக்காது.
ஆனால் தோலின் வழியாக பார்த்தால்
இரத்தமானது எப்பொழுதும் நீல
நிறமாகவே காட்சியளிக்கும்.

இன்றைய இளையோர் மீதான சமூக பார்வை...

பொதுவாக
இளவயதோரைப்பார்த்தாலே சிலர்
அவர்களுக்கு திமிர்,
தற்பெருமை மற்றும் ஆணவம் அதிகம்
இருக்கும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த வயதில்
உள்ள இளையோர்
அனைவருமே இத்தகைய
குணங்களை உடையவர்கள் அல்ல.
அத்தகைய குணத்தை பெற
வைப்பது சமூகம் தான்.
மேலும் உறவினர் ஒருவர்
குழந்தையில் உள்ள
ஒருவனை இளைஞனாகப்
பார்த்து விட்டால், உடனே அவர்
மனதில் ஓடுவது "அவன்
வளர்ந்துவிட்டான் மற்றும்
அவனுக்கு நிச்சயம் திமிர்
அல்லது வெட்கம் இருக்க வேண்டும்"
என்று தோன்றும். ஆனால்
இவை அனைத்துமே உண்மையில்
ஒரு கற்பனையான
ஒரு கதை தானே தவிர,
அனைத்து இளைஞர்களுக்குமே பொரு
ந்தாது. இப்போது மக்கள் மத்தியில்
இருக்கும் இளைஞர்களைப் பற்றிய
கற்பனையான மற்றும் தவறான
எண்ணங்களை பட்டியலிட்டுள்ளோம்.

1}டேட்டிங், ரொமான்ஸ், நைட்
பார்ட்டி போன்ற அனைத்தும்
இளைஞர்களுடன் தொடர்புடையது.
எனவே எந்த ஒரு இளைஞனைப்
பார்த்தாலும், அனைவரின் மனதிலும்
தோன்றுவது, அவர்களுக்கு நிச்சயம்
காதல் இருக்கும்
என்பது பற்றிய கெட்டதான
சிந்தனை மனதில் ஏற்பட
வழிவகுக்கிறது. இதற்கு காரணம்
சமுதாயமும், சூழ்நிலையும் தான்.

2}இள வயதுள்ளவர்கள்
பொறுப்பில்லாதவர்கள் என்ற
கருத்து இருக்கிறது. சரி தான்,
அவர்களால் ஏதாவது ஒரு கடினமான
சூழ்நிலை வந்தால், அதனை சரியாக
சமாளிக்கத் தெரியாது.
இதற்கு அவர்களது மன வளர்ச்சியும்,
சூழ்நிலையும் தான் காரணமே தவிர,
அவர்களது தவறில்லை.

3}பெரும்பாலானோரின் மனதில்,
இள வயதா? அப்படியெனில்
அவர்களுக்கு ஆணவம் அதிகம்
இருக்கும் என்ற எண்ணம் இருக்கும்.
உண்மையில்,
இது அவர்களது தவறல்ல. உடலில்
உள்ள ஹார்மோன்களின்
மாற்றங்களும், ஒருசில
சூழ்நிலைகளும் தான்
அவர்களது நடவடிக்கைகளை வித்தி
யாசமாக்குகிறது.

4}இளவயது தான், முதன்முதலில் மனதில்
இருக்கும்
கருத்தையோ அல்லது செயல்களையோ
வெளிப்படுத்தும் வாழ்வின் முதல்
நிலை. இந்த நிலையில் அவர்கள்
வெளியுலகத்தைப் பற்றி நிறைய
ஆராய்வார்கள்.
அப்போது அவர்களுக்கு எதற்கும்
ஒரு கட்டுப்பாடு உள்ளது என்பதை பு
ரிந்து கொள்ளும் சக்தி இருக்காது.
அதனால்
கட்டுப்பாடின்றி நடந்து கொள்வார்கள். ஆகவே இத்தகைய
அறிவை பெற்றோர்கள் தான்
சிறுவயதிலிருநந்தே சொல்லிக்
கொடுக்க வேண்டும்.

5}குழந்தையாக இருந்து, வளரும்
போது ஒவ்வொருவரின்
நடையிலும், உடையிலும் ,
பாவனையிலும் மாற்றங்கள்
நிகழ்வது சகஜம் தான்.
அப்போது அவர்களுக்கு, இந்த
உலகிலேயே மிகவும் ஸ்மார்ட் நான்
தான் என்று உணர்வார்கள். அதனால்
அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும்
துணிந்து செய்வார்கள். ஏன், இந்த
நிலையில் தவறான வழியில் கூட
செல்ல வாய்ப்புள்ளது.

ஆகவே இதனை பெற்றோர்கள் சரியாக
கண்டு கொள்ளாமலும்,
கவனிக்காமலும் ஆதரித்தால் , பின்
நிறைய பிரச்சனைகளை சந்திக்க
நேரிடும். இவையே மக்கள்
மத்தியில் இள வயதுள்ளவர்கள்
பற்றிய எண்ணங்கள்.