Wednesday, 23 October 2013

இல்லறம் அது நல்லறம்

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும்
இன்றைய கால கட்டத்தில் அன்பும்,
அறனும் சரிவர பேணப்படாத
காரணத்தாலே பல குடும்பங்களில்
சண்டை, சச்சரவுகளும்,
குழந்தை வளர்ப்பில் சிக்கல்களும்
நிறைந்து நிகழ்கால, எதிர்காலச்
சமுதாயங்கள்
பாதிப்புக்குள்ளாகின்றன.
உலகில்
எத்தனையோ வகை ஜீவராசிகள்
இருப்பினும், மனித குலத்திற்கேற்ற
இறைவனால் அருளப்பட்ட
ஒரு தெய்வீக மார்க்கம் தான்
இல்வாழ்க்கை என்பது.
“அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ”
என்று இல்லறத்தின்
பெருமையைப்பற்றி இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
திருவள்ளுவர் சொல்லியுள்ளார்.இல்
வாழ்கையில் ஒரு மனைவியின்
பங்கு மிக முக்கியமானதாகும்.
ஆனாலும் இல்வாழ்க்கை ஒரு தராசைப்
போன்றது.
தராசின் இரு தட்டுக்களும் சமமாக
இருந்தால் தான் இல்லறம் இனிக்கும்.
இல்வாழ்க்கையை ஒரு வண்டியின்
இரு சக்கரங்களாகப் பாவித்தால்,
இரு சக்கரங்களும் ஒரே சீராய்
இயங்கினால் தான் வண்டி சரியான
பாதையில் செல்வது போல்,
வாழ்க்கையும் சரியான பாதையில்
செல்லும்.இதோ இல்லற
வாழ்க்கை சிறப்புற சில
ஆலோசைனைகள்.
1 . சந்தோஷமான
வாழ்க்கைக்கு பரஸ்பரம்
நம்பிக்கை அவசியம். அதே சமயம்,
கணவன், மனைவி இருவரும்
சந்தேகத்துக்கு இடமளிக்காமல்
நடந்து கொள்ள வேண்டும்.ஒருவர்
மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள
வேண்டும் எனில்
புரிந்துணர்வோடு செயல்
படுவது முக்கியமாகும். சின்ன
சந்தேகம்கூட மிகப்பெரிய
விளைவை ஏற்படுத்தி விடும்.உடல்
ரீதியான, மனரீதியான கோளாறுகள்
எதுவென்றாலும் ஒருவரைப்
பற்றி ஒருவர் அறிந்து கொண்டால்
இல்லறம் நல்லறமாக இனிக்கும்.
2 .இல்லற வாழ்க்கையில் கணவன்
மனைவியிடையே ஒளிவு மறைவு
ஒரு துளியேனும் இருத்தல் கூடாது.
மனைவியால் செய்யப்படும் எந்த
ஒரு சிறிய விடயமாக இருந்தாலும்
அது கணவனுக்கும் தெரியும்
வகையில் செய்தல் தான் உத்தமம்.
அவ்விதமே கணவனும்
நடந்து கொள்ள வேண்டும்.
3 .கணவனோ மனைவியோ செய்யும்
சிறு தவறுகளை சகிப்புத்
தன்மையுடன் ஏற்றுக்
கொள்ளாவிடில் அவைகளே பெரிய
பிரச்சினைகளுக்கு
வித்திட்டுவிடும்.
ஒருவருக்கொருவர் காட்டும்
சகிப்புத் தன்மை பரஸ்பரம் அன்பைக்
கூட்டுவதோடு அபிமானத்தை
வெளிப்படுத்தும் சக்தியாக
மாறும்.இல்வாழ்க்கையில்
இணைந்தவர்கள்
தோழமை உணர்வு உள்ளவராக
இருப்பது அவசியம். இருவரும்
ஒருவருக்கொருவர் உதவும்
மனப்பான்மை உள்ளவர்களாக
இருப்பது நல்லது.
4. கணவன்
மனைவியிடையே ஒருபோதும் எந்த
ஒரு செயல் காரணமாகவும் கோபம்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல்
வேண்டும், கனிவான முறையில்
பேசிப்பழகிட வேண்டும். கோபம்
கொள்ளும் செயல்
என்று ஒருசெயலை அல்லது ஒரு
நிகழ்வினைக் கூட சுட்டிக்
காட்டுதல் கூடாது.சில சமயங்களில்
பல குடும்பங்களில் அமைதிக்குப்
பங்கம் விளைவதே தகவல்களைப்
பறிமாறிக் கொள்வதில் எப்படிப்
பேசுகிறார்கள் என்பது தான்!. சொல்ல
வந்த செய்தியைக் கடுமையாக
சொல்லுவதும், தெளிவில்லாமல்
சொல்லுவதும் அமைதிகுலையக்
காரணமாக அமையும்.
5 .இல்வாழ்க்கையில் கணவன்
மனைவி இருவருமே எந்த
அளவிற்கு விட்டு கொடுக்கும்
மனப்பான்மையோடு வாழ்கிறார்களோ,
அந்த
அளவிற்கு அவர்களுக்கு பெயரும்
புகழும் ஏற்படுவதோடு மன
மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதில்
ஐயம் இல்லை.
6. அடிக்கடி அன்பையும்
காதலையும்
வெளிபடுத்துங்கள்.அது கணவன்
மனைவி யி டத்து ஆழமான
பிணைப்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment