நான் மிகவும் நேர்மையாகவும்,
நாணயமாகவும் வேலை செய்வேன்.
அதுதான் எனக்கு பிடிக்கும்.
அது தான் என் கொள்கை என்று சிலர்
சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான்
அப்படி எல்லாம் நீதி, நியாயம்
மாறாமல் வேலை பார்த்து என்ன
லாபம்? மற்றவர்கள் எல்லாம்
எப்படி எப்படியோ இருக்கிறார்கள்.
பொய் சொல்கி றார்கள்…
ஏமாற்றுகிறார்கள்..
அரைகுறையாகத்தான்
வேலைபார்க்கிறார்கள். உண்மையாக
உழைத்து என்ன கிடைக்கப்
போகிறது. அதை யாரேனும்
பாராட்டவா போகிறார்கள்? நாண
யத்திற்கும், நேர்மைக்கும் இந்த
காலத்தில் மதிப்போ,
மரியாதையோ இல்லவேஇல்லை. நான்
மட்டும் யோக்கியமாக
இருந்து பலனில்லை. ஊர்
எப்படி போகிறதோ அப்படியே
நானும் போய்விடலாம்
என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட
விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள்.
நாணயமாக இருக்கிறீர்கள்.
உண்மையாக இருக்கிறீர்கள் என்றால்
அதற்கு என்ன காரணம்?
நேர்மை, நாணயம், உண்மையின்
மதிப்பை நீங்கள்
உணர்ந்திருக்கிறீர்கள். அதனால்
அப்படி வாழ்கிறீர்கள்.
விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள்
உங்களுக்கு சுயமரியாதையையும்,
சுய கவுரவத்தையும் கொடுக்கும்.
மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும்
அது தரும்.
உங்களுக்கு இத்தனையும்
கிடைக்கும்போது மற்றவர்கள்
பாராட்டினால் என்ன.. தூற்றி னால்
என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன்
கவலைப்படவேண்டும்.
“நற்பண்புகள் என் வாழ்க்கையின்
அஸ்திவாரம். அதை நான்
எதற்காகவும் விட்டுக்
கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என்
மனதிற்கு அமைதியும்,
மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த
நற்குணங்கள் இன்னமும் இந்த
உலகத்தில் மறைந்துவிடாமல்
என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற
திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய்
சம்பந்தப்பட்ட விஷயங்களில்
நாணயமாகவும், நேர்மை யாகவும்
இருப்பார்கள். அதுவே ஒரு சில
லட்சங்கள் என்றாகும்போது அந்த
நாணயத்தை யும், நேர்மையையும்
விட்டு கொடுத்து விடுவார்கள்.
“நேர்மைக்கும், நாணயத்திற்கும்
என்னால் விலை நிர்ணயிக்க
முடியாது. நான் நானாக வாழ
விரும்புகிறேன்”
என்று உங்களுக்குள்ளே தினமும்
கூறிக்கொள்ளுங்கள்.
அதன்படி வாழ்ந்து பாருங்கள்.
எல்லை யற்ற இன்பத்தோடு உங்களால்
வாழ முடியும். அதற்குரிய பலனும்
நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
Friday, 25 October 2013
நாணயத்தின் விலை?
Labels:
சுயமுன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment