உலகின்
மிகச்சக்தி வாய்ந்த
மற்றும்
இயற்கையாகவே மருத்துவ குணம்
நிறைந்துள்ள பொருட்களில்
ஒன்று தான் மஞ்சள்.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான
ஆன்டி-பயாடிக்
பண்புகளை கொண்டுள்ளன.
உங்களுடைய அன்றாட உணவில்
இந்த
இரண்டு இயற்கை பொருட்களையும்
சேர்த்துக் கொள்வதால்,
பல்வேறு நோய்கள் மற்றும்
நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
அதிலும் மஞ்சள்
தூளை சற்றே சூடான பாலுடன்
கலக்கப்படும் போது,
எண்ணிலடங்கா பலவித சுகாதார
பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக
இருக்கிறது.
மஞ்சள் பால் செய்முறை:
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக்
கொள்ளவும். அதை பாலில்
போட்டு 15 நிமிடங்கள்
கொதிக்கவிடவும். பின்
பாலை வடிகட்டி மஞ்சளை
எடுத்துவிடவும். பின்பு குளிர
வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.
சுவாசக் கோளாறு
மஞ்சள் பால்,
பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும்
நச்சுயிரி சார்ந்த
நோய்த்தொற்றுகளைத் தாக்கும்
நுண்ணுயிர் ஆகும்.
இந்த மசாலாப் பொருள்
உடலை வெப்பப்படுத்தும் என்பதால்
நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும்
சைனஸ் பிரச்சனைக்கு விரைவான
நிவாரணம் வழங்குகிறது.
அதுமட்டுமின்றி சுவாச
அமைப்பு தொடர்பான நோய்களான
ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய்
அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை
அளிப்பதில் பயனுள்ளதாகவும்
இருக்கிறது.
புற்றுநோய்
மஞ்சள் பால்
நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக்
கொண்டுள்ளதால் இது மார்பகம்,
சரும, நுரையீரல், புரோஸ்டேட்
மற்றும் பெருங்குடல் புற்றுநோயின்
வளர்ச்சியை தடுக்கிறது மற்றும்
நிறுத்தவும் செய்கிறது.
தூக்கமின்மை
வெதுவெதுப்பான மஞ்சள் பால்
அமினோ அமிலம், டிரிப்தோபன்
போன்றவற்றை உற்பத்தி செய்து
அமைதியான மற்றும் பேரின்ப
தூக்கத்தைத் தூண்டும்
என்று கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமல்
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும்
இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக
கருதப்படக் காரணம் அதன்
நச்சுயிரிக்கு எதிரான குணமும்
மற்றும்
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும்
ஆகும். இது தொண்டைப் புண்,
இருமல் மற்றும்
சளிக்கு உடனடி நிவாரணம்
அளிக்கிறது.
கீல்வாதம்
மஞ்சள் பால்,
கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும்
நாள்பட்ட மூட்டு வலிகளின்
காரணமாக ஏற்படும்
வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க
பயன்படுத்தப்படுகிறது.
இது வலியை குறைத்து
நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள்
மற்றும் தசைகள் உருவாக்க
உதவுகிறது.
மேலும் உடலில் உள்ள
முதுகெலும்பு மற்றும்
மூட்டுகளையும் வலுப்படுத்த
முடியும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
மஞ்சள் பால் ஒரு தடையற்ற
முழுமையான எதிர்
ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த
ஆதாரமாக உள்ளது. இதனால் பல
வியாதிகளை குணப்படுத்தவும்
முடியும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
மஞ்சள் பால் ஆயூர்வேத
பாரம்பரியத்தில்
இரத்தத்தை தூய்மைப்படுத்தும்
ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும்
சுத்தப்படுத்தியாகவும்
கருதப்படுகிறது.
இது உடலில் உள்ள இரத்த
ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு
பொருளாகவும் மற்றும் இரத்த
ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும்
உதவுகிறது.
மேலும் இது நிணநீர்
அமைப்பு மற்றும் இரத்த
குழாய்களில் இருக்கும்
அனைத்து நச்சுக்களையும் நீக்கி,
இரத்த மெலிவூட்டியாக
வேலை செய்கிறது.
கல்லீரல் நச்சு நீக்கி
மஞ்சள் பால் ஒரு இயற்கையான
கல்லீரல் நச்சு நீக்கியாக
விளங்குகிறது.
இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி
இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட
உதவும் ஒரு ஊக்கியாகவும்
இருக்கிறது.
இதன் தூய்மைப்படுத்தும்
குணத்தினால்
இது கல்லீரலுக்கு ஆதரவாகவும்
மற்றும் நிணநீர் மண்டலத்தையும்
சுத்தமாக்குகிறது.
எலும்பு சுகாதாரம்
மஞ்சள் பாலில் கால்சியம்
நிறைந்து காணப்படுவதால்
அவை எலும்புகள் ஆரோக்கியமாக
மற்றும் வலுவாக வைத்திருக்கவும்
உதவுகிறது.
மேலும் எலும்பு தேய்மானத்தையும்
மற்றும்
ஆஸ்டியோபோரோசிஸையும்
குறைக்கிறது.
செரிமான நலம்
இது ஒரு சக்தி வாய்ந்த
கிருமி நாசினியாக இருப்பதால்,
குடல்
சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது.
மேலும் வயிற்று புண்களையும்
மற்றும் பெருங்குடல் அழற்சியையும்
கட்டுப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி இது சிறந்த
செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும்
வயிற்றுப்புண்கள், வயிற்றுப்
போக்கு மற்றும் அஜீரணத்தையும்
தடுக்கிறது.
எடை குறைப்பு
மஞ்சள் பால் உணவில் இருக்கும்
கொழுப்பை முறிக்க உதவுகிறது.
இதனால் இது உடல் எடையைக்
கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக
இருக்கிறது.
எக்ஸிமா/சிரங்கு
எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும்
ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க
வேண்டும். இதனால் நாளடைவில்
அந்த பிரச்சனை குணமாகும்.
Friday, 25 October 2013
மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment