Thursday, 24 October 2013

தமிழ் புத்தாண்டு

தமிழர்களுக்கு எது பொருத்தாமான
புத்தாண்டு -
தை ஒன்றா சித்திரை ஒன்றா ?

தமிழர்களுக்கு எது பொருத்தாமான
புத்தாண்டு -
தை ஒன்றா சித்திரை ஒன்றா ?
தமிழர்கள் தற்போது பெருவாரியாக
கடைபிடிக்கும்
புத்தாண்டு என்பது அடிப்படையில்
சமஸ்க்ரித்த புத்தாண்டே ஆடும்.
இந்த ஆண்டுகளின்
பெயர்களை பார்த்தாலே விளங்கும்.
இப்பெயர்கள் அனைத்தும்
நாரதருக்கும் கிருஷ்ணருக்கும்
பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்
என்று புராணம் சொல்கிறது.
இப்பெயர்கள் எதுவும் தமிழர்
பண்பாட்டிற்கு பொருத்தமானது
அன்று. மேலும்
சித்திரை ஒன்று புத்தாண்டை நாம்
கடைபிடித்தால் தமிழருக்கான
திருவள்ளுவருக்கு பின்
திருவள்ளுவருக்கு முன் என்ற காலக்
கணக்கை நிர்ணயம் செய்ய இயலாது .
இதனால் தமிழர் வரலாறு பண்பாடு ,
இன அடையாளம் மறைக்க படும்.
அதனால் தான் பார்பனர்கள்
சித்திரை ஒன்றை தமிழ்
புத்தாண்டாக நம்மை கொண்டாடும்
படி வலியுறுத்துகிறார்கள்.
தமிழர்கள் இந்த பண்பாட்டு இன
அழிப்பை முறியடித்து தமிழர்
புத்தாண்டான
தை ஒன்று திருவள்ளுவர் ஆண்டாக
கடைபிடித்தல் வேண்டும் .
தமிழர் புத்தாண்டு எது என்ற
பிரச்சனையை பொறுத்தவரை
பார்ப்பனியம்
நமக்கு வேண்டுமா வேண்டாமா?
என்று பார்ப்பதே சரியானது.
தமிழரின் மொழி உரிமை ,
பண்பாட்டு உரிமை, ஆட்சி உரிமை,
தேசிய உரிமை இவையெல்லாம்
பார்ப்பனியமயத்தால்
நசுக்கப்படுகிறது.
60 ஆண்டுகள் வரையே உள்ள
பார்ப்பனிய
ஆண்டுமுறையை பின்பற்றினால்
தொடர்ச்சியான கால நிர்ணயம்
இல்லாமல் போகும்.
இப்போது இயற்றப்படும் தமிழ்
படைப்புகள், இன்னும் 500
ஆண்டு கழித்து எப்போது
இயற்றப்பட்டது என்றே கண்டுபிடிக்க
முடியாது. இதற்கு முன்பான
வரலாறும் இப்படி தான்
அழிந்துள்ளது.
இதுபோல நம் இனமும்
அழிந்துவிடும்.
ஏனென்றால்
"ஒரு இனத்தை அழிக்க
வேண்டுமென்றால் அதன் மொழி,
வரலாற்றை அழித்தால் போதும்
குறிப்பு : இக்கட்டுரை ஒட்டுமொத்த
பார்பனர்களுக்கு எதிராக எழுதப்
பட்டது அல்ல

No comments:

Post a Comment