மற்றவர்கள் நம்மை எப்படி எடை
போடுகிறார்களோ,
அதைப்போலவே நாமும்
நம்மை எடை போட்டால், நம்
திறமையை வெளிக்கொண்டு வர
முடியுமா! நம்
ஆற்றல்களை பற்றி அடுத்தவன்
சொல்லும்
அபிப்ராயங்களை நினைத்துக்
கொண்டிருந்தால் சிறிதேனும்
முன்செல்ல முடியுமா! பயனற்றவன்,
வீணானவன் என்று புறக்கணிக்கப்
படுகிறவர்கள் அதை வெறியாக,
வைராக்கியமாக வைத்துக் கொண்டால்
நாளை எதாவது ஒரு கதவு
அவனுக்காக
திறக்கப்படுவது நிச்சயம்
ஒருமுறை புறக்கணிக்கப்பட்டால்
இனி போதும், இந்த ஓவியமோ,
விளையாட்டோ, கவிதையோ முதல்
முறையே நிராகரிக்க
பட்டு விட்டது இனி போதும்
இது நமக்கு ஆகாது என்று
ஓரங்கட்டினால் அங்கேயே உங்கள்
திறமைகளெல்லாம் செத்துவிடும்.
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்திருப்பேன் என்ற
உறுதி வேண்டும்.
சிறு தோல்விகளையோ,
அவமானங்களையோ தாங்கிகொள்ள
முடியாமல் ஓடி ஒளிகிறவர்கள்
என்றும் தன்னை தாழ்வாக
நினைத்து பல
விஷயங்களை கோட்டை விட்டுக்
கொண்டே இருப்பார்.
ஒரு சிறு துணிவு இல்லாமையினால்
பல வாய்ப்புகளை நாம்
இழந்து விடுகிறோம்,
துணிவில்லாமல் கோட்டை விட்ட
விஷயங்களை நினைத்து பாருங்கள்,
அதில் சிறு துணிவு மட்டும்
இருந்திருந்தால், எதையும்
இழந்திருக்க மாட்டீர்கள்.
ஒரு விஷயத்தை செய்ய துவங்கும்
வரையிலும் அதை செய்வதற்கான
துணிவோ,
ஆர்வமோ வருவதில்லை செய்ய
துவங்கிய பிறகுதான்
இவளவு நாட்களாக இது ஏன்
தோன்றவில்லை என்று நினைப்பீர்கள்.
ஆக
சிறு துணிவு இல்லாமையினாலே
பலர் புறக்கணிக்கப்பட்ட
அதே இடத்தில் இன்னும்
கிடக்கிறார்கள்
யாரும் நம்மை, நம்பிக்கையோடு,
தைரியமூட்டி வாழ்த்தி அனுப்ப
வேண்டிய அவசியமில்லை,
அதைவிடவும் வலிகளையும்,
அடிகளையும், அவமானங்களையும்
சுமந்து சென்றே நம்மால் ஜெயிக்க
முடியும். துன்பங்கள்
வருவதனால்தான்
இன்பங்களை முழுமையாக
அனுபவிக்க முடிகிறது,
புறம்பே தள்ளப்படுவதாலே வெற்றி
இலக்கை அழுத்தமாக பிடித்துக்
கொள்ள முடியும்.
ஆரம்பமே வாழ்த்தும், வரவேற்புமாக
இருந்தால் பல
சூட்சுமங்களை தெரிந்து கொள்ள
தவறி விடுவோம்.
ஒட்டு மொத்த மனிதர்களும்
உங்களை புறக்கணித்தாலும்
பரவாயில்லை ஆனால்
ஒரே ஒரு மனிதர் மட்டும்
உங்களை புறக்கணிக்காமலிருந்தால்
உங்களுக்கு வெற்றி நிச்சயம், அந்த
ஒரே ஒரு மனிதர் நீங்களேதான்.
எத்தனை பேர் அணிவகுத்து வந்து
புறக்கணித்தாலும்,
இறுதி வரையிலும் உங்களை நீங்கள்
புறக்கணியாதிருங்கள்,
ஒட்டு மொத்த மனிதர்களும் ஒருநாள்
உங்களை திரும்பி பார்ப்பார்கள்.
Thursday, 31 October 2013
நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா?
Labels:
சுயமுன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment