Saturday, 26 October 2013

உணவு...கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் By ‘ஹீலர் பாஸ்கர்’

உணவு...
கொஞ்சம் உண்மைகள் +தெளிவுகள் By ‘ஹீலர் பாஸ்கர்’

நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில்
நிறைவான வாழ்வு வாழ
ஆரோக்கியம் மிக மிக
இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற
மனிதரால் விரும்பினாலும்
மகிழ்சியாக வாழ முடிவதில்லை.
அவர் தானும் துன்புற்று தம்மை
நேசிப்பவர்களையும் வருத்தத்தில்
ஆழ்த்துகின்றார்.
இன்றைய நவநாகரீக யுகத்தில்
விளைந்த நவீன வாழ்வியல்
முறைகளும், விஞ்ஞான,
தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித
வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப்
பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன
என்பது உண்மை, எனினும் நோயற்ற
வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன
என நம்மால் நிறைவு கொள்ள
முடிவதில்லை காரணம், நாளும்
பல்கிப்பெருகி வரும் எண்ணற்ற
நோய்கள், (பிறந்த
குழந்தைகளுக்கு பெயர்
வைப்பதைப்போல
அல்லவா விஞ்ஞானிகள், நாளும்
ஒரு நோயைக்
கண்டுபிடித்து புதிது புதிதாய்
அவற்றுக்கு பெயர் வைத்துக்
கொண்டு வருகின்றனர்) !!?
இதற்கிடையில்
பெரும்பாலானோருக்கு அவர்களின்
உணவால்தான் பெரும் வியாதிகள்
வருகிற்து. பொதுவாக
ஒவ்வொருவரும் பசித்தால்
மட்டுமே உண்ணவேண்டும் .*
உண்பதற்கு அரைமணி நேரம்
முன்பும் ‍பின்பும் நீர்
அருந்தக்கூடாது. தேவைப்பட்டால்
மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.*
உண்ணும் பொழுது கண்களை மூடி,
இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல்
மென்று கூழ் போல் அரைத்து பின்
விழுங்க
வேண்டும்.*தொலைகாட்சி பார்த்தல்,
புத்தகம் படித்தல், செல்போன்
பேசுதல், கால்களை தொங்க விடுதல்
ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும்
நேரத்தில்
கூடாது.*முடிந்தவரை வீட்டு உணவு
( நம்மேல் அக்கரை கொண்டவர்கள்
சமைத்த உணவை )
உட்கொள்ளவும். அதே சமயம்
உணவுகளில் பல வகைகள் உள்ளன.
இருந்தாலும் சுலபமாகப்
புரிந்துகொள்வதற்காக நாம் சில
வகைகளாகப் பிரித்துள்ளோம்.
முதல் வகை:
இயற்கையாக, சுவையாக இருக்கும்,
சமைக்காத உணவுகள், அனைத்துப்
பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய்,
கேரட் போன்றவை சமைக்காமல்
அதே சமயம் சுவையாக இருக்கும்
உணவுகள் இவை அனைத்தும் முதல்
வகை உணவுகள். இவற்றில்
சுவை 100%இருக்கும். எனவே 100
மதிப்பெண்கள். பிராண சக்தி 100%
இருக்கும். எனவே மேலும் 100
மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100%
இருக்கும். எனவே மீண்டும் 100
மதிப்பெண்கள். ஆக மொத்தம்
முதல்வகை உணவுக்கு 300
மதிப்பெண்கள். எந்த உணவைச்
சமைக்காமலும், அதே சமயத்தில்
சுவையாக பச்சையாகச் சாப்பிட
முடியுமோ, அவையனைத்தும்
முதல் வகை உணவுகளில் வரும்.
இரண்டாவது வகை:
சமைக்காத ஆனால் சுவையில்லாத
உணவுகள் இந்த வகையில் சேரும்.
உதாரணமாக முளை கட்டிய
தானியங்கள்,
சுவையில்லா பழங்களும்,
காய்கறி வகைகளும். இந்த இரண்டாம்
வகை உணவுகளில் பிராணன் 100%
இருக்கும். எனவே 100
மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள்
100% இருக்கும். எனவே 100
மதிப்பெண்கள். ஆனால்
சுவை இருக்காது.
எனவே அதற்கு 0.மதிப்பெண்கள்.
எனவே இந்த
வகை உணவுகளுக்கு மொத்தம் 200
மதிப்பெண்கள்.
எனவே இவை இரண்டாம் தர
உணவுகள் என நாம் பிரிக்கலாம்.
உதாரணம் முளை கட்டிய
தானியங்கள்.
மூன்றாம் வகை:
சமைத்த காய்கறிகள், கீரைகள்,
தானியங்கள் அனைத்தும் இந்த
மூன்றாவது வகை உணவுகளாம். ஓர்
உணவை சமைப்பதால் (வேக
வைப்பதால்) அந்த உணவிலுள்ள
சுவை 50% குறைகிறது.
எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள்.
மேலும் சத்துப்பொருள்
பாதி குறைந்து விடுகிறது.
எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள்.
பிராணசக்தியும்
பாதி குறைந்து விடுகிறது.
எனவே மேலும் ஒரு 50
மதிப்பெண்கள். ஆக மொத்தம்
இவ்வகை உணவுகளுக்கு 150
மதிப்பெண்கள் தரலாம். உதாரணம்,
இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம்,
சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம்
வழக்கமாக எடுத்துக்கொள்ளும்
அனைத்து சமைத்த உணவுகளும்.
நான்காவது வகை:
அசைவ உணவுகள் இந்த
நான்காவது வகையில் வரும். அசைவ
உணவில் சத்துப் பொருள்100%
இருக்கும். எனவே 100
மதிப்பெண்கள். பிராணன்
ஒன்றுமே இருக்காது.
எனவே 0மதிப்பெண்.
சுவை இருக்காது.
எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம்
அசைவ
உணவுகளுக்கு 100மதிப்பெண்கள்.
எனவே அசைவ
உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது
அல்லது குறைப்பது நல்லது. ஆனால்
சில நாடுகளில், பாலைவனப்
பிரதேசங்களில், வெப்பம்
அதிகமுள்ள நாடுகளில்,
தாவரவகை உணவுகள் கிடைக்காத
காரணத்தினால் அசைவ உணவுகள்
சாப்பிட வேண்டிய
சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக
அசைவ உணவைச் சாப்பிடுவதால்
உடலுக்கு எந்தத் தீங்கும்
கிடையவே கிடையாது. ஆனால்
ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக்
கொல்வது பாபம் என்ற
அடிப்படையில் நம் மனத்தில் ஓர்
எண்ணம் தோன்றிய பிறகு நாம்
சாப்பிட்டால் அந்த எண்ணம்
நோயை உண்டாக்கும். எனவே அசைவ
உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச்
சாப்பிட்டால் பாபமில்லை என்ற
எண்ணத்துடன்
மனத்திலே எந்தவொரு குழப்பமும்
இல்லாமல் சாப்பிடும்
பொழுது சரியாக ஜீரணமாகிறது.
அதே சமயம் மனத்தில் 50/50
சாப்பிடலாமா? வேண்டாமா?
அல்லது சாப்பிட்டால் நல்லதா?
கெட்டதா? என்ற எண்ணத்துடன்
குழப்பத்துடன் சாப்பிடும்
பொழுது அது நோயை
உண்டாக்குகிறது.
இஃது அசைவத்திற்கு மட்டுமன்று.
எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும்
உடம்புக்கு ஆரோக்கியமென்ற
தெளிவான திடமான
நம்பிக்கையுடன்
சாப்பிடும்பொழுது அது மருந்தாக
வேலை செய்கிறது. அந்த
உணவு நமக்கு நோய்
ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன்
சாப்பிடும்பொழுது அது நோயை
உண்டாக்குகிறது. இறுதியாக
அசைவ உணவு சாப்பிடுவதைத்
தவிர்ப்பது நல்லது.
இது நான்காவது வகை உணவு.
ஐந்தாவது வகை:
போதைப் பொருள்கள்
(லாகிரி வஸ்துகள்)
இவை உணவே அல்ல. சில
பொருள்களை நாம் உணவுபோல்
சாப்பிடுகிறோம். ஆனால்
அவை உணவல்ல.
போதைப்பொருள்கள். உதாரணமாக டீ,
காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா,
கஞ்சா, அபின்,
பாக்கு ஆகியவை அனைத்தும்
உணவுப் பொருள்களே அல்ல.
அவை போதைப் பொருள்கள்.
உணவுப் பொருளுக்கும், போதைப்
பொருளுக்கும் எப்படி வித்தியாசம்
கண்டுபிடிப்பதென்றால்
எந்தவொரு பொருளை மூன்று
நேரமும் சாப்பிட்டு நம்மால்
உயிரோடு இருக்க
முடியுமோ இவையனைத்தும்
உணவுப் பொருள்கள். எந்தப்
பொருளை மூன்று நேரமும்
அது மட்டும்
சாப்பிட்டு உயிரோடு இருக்க
முடியாதோ, அவை போதைப்
பொருள்கள். தேங்காயை மட்டும்
சாப்பிட்டு ஒரு மனிதன்
உயிரோடு இருக்க முடியும்;
அஃது உணவு. சிகரெட் மட்டும்
புகைத்துக் கொண்டு ஒரு மனிதன்
உயிரோடு இருக்க முடியுமா?
அது போதைப் பொருள். அசைவம்
சாப்பிட்டு ஒருவர்
உயிரோடு இருக்க முடியும்.
எனவே அசைவம் என்பது ஓர் உணவு.
கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர்
உயிரோடு இருக்க முடியுமா?
இருக்க முடியாது.
எனவே அது போதைப் பொருள்.
உணவு என்பது நம் உடலில்
வெளியிலிருந்து சத்துப்
பொருள்களை உடலுக்கு எடுத்துச்
செல்லும் ஒரு பொருள். போதைப்
பொருள்
என்பதுஉடலிலேயே சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் சத்துப்
பொருள்களை எடுத்துச்
செலவு செய்யும் ஒரு பொருள்.
எனவே போதைப் பொருளைப்
பயன்படுத்தும் பொழுது சில
குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில்
அதிகமான தெம்பு இருக்கும்.
பிறகு நாம்
வலுவிழந்து காணப்படுவோம்.
ஏனென்றால் நம் உடலில்
சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
சில சத்துப்பொருள்களை இந்தப்
போதைப்பொருள் எடுத்துச்
செலவு செய்து நம்மை வீரியமாக
இருக்கச் செய்கிறது. ஆனால்
அது நம்
உடம்பிற்கு உணவை ஒரு போதும்
கொடுப்பதில்லை.
எனவே தயவு செய்து போதைப்
பொருள்களைச் சாப்பிடக்
கூடவே கூடாது. “நான் பல
மருத்துவரிடம் சென்றேன். பல
வருடங்களாக சிகிச்சை எடுத்துக்
கொள்கிறேன். ஆனால் எந்த நோயும்
குணமாகவில்லை”
என்று மருத்துவத்தையும்,
மருத்துவர்களையும்
குறை சொல்கிறார்கள். ஆனால்
அவர்கள் பயன்படுத்தும் போதைப்
பொருள்களைப் பற்றி அவர்கள்
வெளியே சொல்வதே கிடையாது.
எனவே அசைவம் சாப்பிடுவதை விட
டீத்தூள், காபித்தூள்
சாப்பிடுவது கெடுதல் அதிகம்.
மேலே கூறப்பட்டுள்ள
உணவு வகைகளைப்
புரிந்து கொண்டு நீங்கள்
எந்தவகை சாப்பிடுகிறீர்கள்?
என்று புரிந்து கொள்ளுங்கள்.
முடிந்தவரை முதல்
வகை உணவை நோக்கி உங்கள்
பயணம் இருக்கட்டும். சில
இயற்கை மருத்துவர்கள்
மூன்று நேரமும்
இயற்கை உணவு சாப்பிடுங்கள்
என்று கூறுகிறார்கள்.
இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க
முடியாது. நீங்கள் ஒரு மாதம்
தொடர்ந்து மூன்று வேளையும்
இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால்
ஒரு மாதம் முடிந்தவுடன்
இட்லியைப் பார்த்தால் நாக்கில்
எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்?
எனவே நம் சிகிச்சையில்
ஒரு சிறிய யோசனை உங்களுக்குத்
தருகிறோம்.
காலையில் சமைக்காத
உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்ளுங்கள். நம் உடலுக்குத்
தேவையான பிராண சக்தியும்,
தாது உப்புகளும் இயற்கையான
முறையில் காலையில்
உணவு மூலமாக நம் உடலுக்குச்
சென்று விடும். பகல்
உணவு சமைத்த உணவு. ஆசை தீர
எது எதுவெல்லாம்
பிடித்ததோ அனைத்தையும்
சாப்பிடுங்கள். இது நம்
மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக்
கொள்ளலாம். இரவு நேரங்களில்
அதிகமாக
சாப்பிடக்கூடாது என்பதற்காக
அரிசிக் கஞ்சி, கோதுமைக்
கஞ்சி போன்ற கஞ்சி,
ஏதாவது ஒரு காய்கறி பொரியலை
மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையில் சாப்பிடுவதால்
இயற்கை உணவு சாப்பிட்டது
போலவும் இருக்கும். ஆசை தீர
சமைத்த
உணவு சாப்பிட்டது போலவும்
இருக்கும். கஞ்சி என்ற நோயைக்
குணப்படுத்தும் மருந்தைச்
சாப்பிட்டது போலவும் இருக்கும்.
நமக்கு எல்லா வகையிலும்
சத்துப்பொருள்கள்
உள்ளே சென்று நாம் என்றும்
ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த
வழியையும் கொடுக்கும்.
காலையில் இராஜா போல சாப்பிட
வேண்டும். பகலில் மந்திரி போல
சாப்பிட வேண்டும்.
இரவு பிச்சைக்காரனைப் போல
சாப்பிட வேண்டும் என்று பழமொழி
கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான்
ஆரோக்கியத்திற்கான சரியான வழி.
ஆனால் நாம் காலையில்
பிச்சைக்காரனைப் போல
இரண்டு தோசை,
இரண்டு இட்லி என்று அவசர
அவசரமாகச்
சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு
ஓடுகிறோம். பகலில் மந்திரியைப்
போல அளவாக சாப்பிடுகிறோம்.
இரவு இராஜாவைப் போல
அனைத்து உணவுகளையும்
மொத்தமாக அள்ளிச்
சாப்பிடுகிறோம். நமக்கு நோய்
வருவதற்கு அடிப்படைக்
காரணமே இரவு அதிகமாக
சாப்பிடுவதுதான்.
எனவே காலை நேரங்களில் நம்
வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக
இருக்கும்,
எனவே காலை உணவை தயவு செய்து
திருப்தியாக, நிறை அமைதியாக,
ஆசை தீர சாப்பிடுங்கள். பகல்
உணவு அளவாக இருக்கட்டும்.
இரவு முடிந்தவரை அளவைக்
குறையுங்கள். ஏனென்றால் இரவில்
நமக்கு உழைப்பு குறைவு.
சூரியனும் கிடையாது. நம் உடலில்
ஜீரணம் ஆக வேண்டுமென்றால்
வெப்பம் இருக்க வேண்டும். பகலில்
நாம் உழைக்கிறோம், நடக்கிறோம்,
ஓடுகிறோம், வேலை செய்கிறோம்,
எனவே உழைப்பு மூலமாக
உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது.
மேலும் சூரியன்
இருக்கும்பொழுது இயல்பாகவே
வெப்ப சக்தி நம் உடலுக்குள்
புகுகிறது. அதனால் பகலில்
அதிகமாக சாப்பிடுங்கள். இரவில்
குறைவாக சாப்பிடுங்கள்.
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
பலருக்கு இந்த விஷயத்தில்
மிகப்பெரும் சந்தேகம்
எப்பொழுதுமே இருக்கும்.
காலையில் எவ்வளவு சாப்பிட
வேண்டும், பகலில்
எவ்வளவு சாப்பிட வேண்டும்,
இரவில் எவ்வளவு சாப்பிட
வேண்டும் என்று இந்த அளவில்
குழப்பம் ஏற்படும்பொழுது நாம்
ஒரு மருத்துவரிடம் செல்கிறோம்.
குறிப்பாக டயட்டீசியனிடம்
சென்றால் அவர்
நமக்கு அறிவுரை கூறுவார்.
காலையில் நான்கு சப்பாத்தியும்,
ஒரு கப் தயிரும் சாப்பிடுங்கள்.
இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள்,
பகலில் 750 மி.கி. சாதமும் 350
மி.லி. குழம்பும் சாப்பிடுங்கள்
என்று எழுதிக் கொடுப்பார்.
சாப்பிடும்பொழுது மி.கி., மி.லி.
பார்த்தா சாப்பிட முடியும்?
சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில்
தராசு வைத்துக் கொள்ள முடியுமா?
ஒன்று செய்யுங்கள், இனிமேல்
பகலில்
சாப்பிடும்பொழுது பக்கத்தில்
தராசு வைத்துக் கொள்ளுங்கள். 750
மி.கி. சாப்பாட்டை அளந்து தட்டில்
போடுங்கள். இது சாத்தியமாகுமா?
மருத்துவர்கள் காலையில் 4
சப்பாத்தி சாப்பிடுங்கள்
என்று எழுதிக் கொடுக்கிறார்களே,
நீங்கள் வீட்டில் எல்லா வேலையும்
செய்யும் பெண்மணியா?
அல்லது எல்லா வேலைக்கும் ஆள்
வைத்துக் கொண்டு டிவி பார்த்துக்
கொண்டு சும்மா இருக்கும்
பெண்மணியா என்று கேட்டார்களா?
டயட் எழுதித் தருவதற்கு முன்பாக
நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா?
அல்லது கம்ப்யூட்டர்
என்ஜினியரா என்று கேட்டார்களா?
ஒவ்வொரு மனிதனுக்கும்
வேலையின் அளவு, உடல் எடை,
மனத்தில் தெம்பு, சுபாவம்,
கிளைமேட், இயற்கையின்
அளவு முறை, நாடு, வயது, இடம்,
ஊர், ஆகியவற்றைப்
பொருத்து உணவின் அளவு மாறும்.
ஒரு நாள் கட்டடவேலைக்குச்
சென்று நாள் முழுவதும் கற்களைத்
தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட
வேண்டும் என்று யோசியுங்கள்.
அதே நபர் அடுத்த நாள் தன்
நண்பரின் ஏசி காரில் பயணம்
செய்யும்பொழுது அவர்
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
உலகத்தில்
யாருமே இன்று செய்வதைப் போல
அடுத்த நாள்
வேலை செய்வது கிடையாது.
அப்படி இருக்கும்பொழுது ஒருவர்
எவ்வளவு சாப்பிட
வேண்டுமென்பதை முதலிலேயே
எழுதிக் கொடுக்க முடியுமா?
உலகத்தில் எவ்வளவு பெரிய
சயன்டிஸ்ட்டாக இருந்தாலும்
எவ்வளவு பெரிய மருத்துவராக
இருந்தாலும் அடுத்த
வேளை எவ்வளவு சாப்பிட
வேண்டும்
என்பதை அவருக்கு அவரே எழுதிக்
கொடுக்க முடியாது. இப்படி நாம்
என்ன சாப்பிட வேண்டும்
என்பதை நமக்கே கூற முடியாத
நிலையில் மருத்துவர்கள்
நோயாளிகளுக்கு எப்படி கூற
முடியும்?
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
, நீங்கள் எவ்வளவு சாப்பிட
வேண்டும் என்ற அளவை உலகத்தில்
வேறு யாராலும் கொடுக்க
முடியாது. ஏன்?
உங்களுக்கே தெரியாது.
மருத்துவர்கள் காலையில் 4
சப்பாத்தி சாப்பிடுங்கள்
என்று கூறுகிறார்களே உங்கள்
வீட்டுச் சப்பாத்தி எந்த
அளவு இருக்குமென்று கேட்டார்களா?
சிலரின் வீட்டுச்
சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக
இருக்கும்.
ஒன்று சாப்பிட்டாலே போதும். சில
சப்பாத்தி அப்பளம் போல இருக்கும்.
பத்து சாப்பிட்டாலும்
வயிறு நிறையாது.
இப்படி இருக்கையில்
எப்படி நான்கு சப்பாத்தி
சாப்பிடுங்கள் என்று எழுதிக்
கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர்
சாப்பிடுங்கள்
என்று கூறுகிறார்களே, உங்கள்
வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ்
உள்ளது என்று அவர்களுக்குத்
தெரியுமா? சற்று சிந்தியுங்கள்,
இரவு 5 இட்லி சாப்பிடுங்கள்
என்று எழுதிக் கொடுக்கிறார்களே,
உங்கள்
வீட்டு இட்லி எடை அவருக்குத்
தெரியுமா?
தயவு செய்து மற்றவர்கள் எழுதிக்
கொடுக்கும் அளவு முறையில்
தயவு செய்து சாப்பிட வேண்டாம்.
இது நோயைப்
பெரிது படுத்துமே தவிர நோயைக்
குணப்படுத்தாது.
சரி எவ்வளவுதான் சாப்பிட
வேண்டும் என்ற
அளவை எப்படி கண்டுபிடிப்பது.
அதற்கு சுலபமாக
வழிமுறை இருக்கிறது.
பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட
வேண்டும். சாப்பிடும்
பொழுது கவனத்தை உணவில்
வைத்துச் சுவையை ரசித்து,
ருசித்து சாப்பிட்டால்
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல்
நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல்
முறை வாயில் எடுத்து வைக்கும்
பொழுது பிடித்த
அதே உணவு எப்பொழுது நமக்குப்
பிடிக்கவில்லையோ, போதும்
என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள்
காலையில் 10 இட்லி சாப்பிடும்
நபராக இருந்தால்
கவனத்தை இட்லியின் மீதும்,
இட்லியிலுள்ள சுவையின் மீதும்
கவனம் வைத்துச் சாப்பிட்டுப்
பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட
பிறகு ஐந்தாவது இட்லியைப்
பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப்
பிடிக்காது.
எப்பொழுது பிடிக்கவில்லையோ
உங்கள்
அளவு முடிந்து விட்டது என்று
அர்த்தம்.
கவனத்தை உணவில் வைத்துச்
சாப்பிடும்
பொழுது நமக்கு அளவு தெரியும்.
கவனத்தை செல்போனிலோ,
ட.வி.யிலோ அல்லது பேச்சிலோ
வைத்துச் சாப்பிடும்
பொழுது நமக்கு அளவு
தெரிவதில்லை.
எனவே தயவு செய்து சாப்பிடும்
பொழுது கவனத்தை உணவிலும்,
சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப்
பாருங்கள். ஒரு குறிப்பிட்ட
அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட
முடியாது.
எனவே நம் சிகிச்சையில்
எவ்வளவு சாப்பிட வேண்டும்
என்பதற்கு மி.கி., கி.கி.,
தராசு போன்ற அளவு முறைகள்
தேவையில்லை. பசி எடுத்தால்
சாப்பிட வேண்டும்.
ருசித்து சாப்பிட வேண்டும்.
மனத்திற்கு எப்பொழுது
போதுமென்று எண்ணம்
ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த
வேண்டும். எனவே ஆசை தீர
சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக
சாப்பிட்டால் ஒரு தவறும்
கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப்
போகும். அவ்வளவுதான். குறைவாகச்
சாப்பிட்டால் ஒரு தவறும்
கிடையாது. நமக்கு சீக்கிரமாகப்
பசித்து விடும்.
எனவே தயவு செய்து
சாப்பிடும்பொழுது அளவு
பார்க்காதீர்கள். உங்கள் மனத்திற்குப்
பிடித்த அளவு ஆசை தீரச்
சாப்பிடுங்கள். ஆனால்
ஒரேயொரு விஷயத்தை ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும்
பசி எடுக்கும் வரை வேறு எதையும்
சாப்பிடக்கூடாது.
எனக்குக் கண்டிப்பாக
சாப்பிடுவதற்கு அளவு வேண்டும்
என்று நீங்கள் நினைத்தால்
உங்களுக்கு ஒரு வழிமுறையைச்
சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள
நாய்க்கு ஒரு கப் சாதம் கொடுங்கள்.
அது சாப்பிட்டு முடித்த
பிறகு மீண்டும்
வேண்டுமென்று வாலை
ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும்
ஒரு கப் சாப்பாடு கொடுங்கள்.
மீண்டும் கேட்கும். மூன்றாவது கப்
சாப்பாடு கொடுத்தால் அதில்
பாதியை மட்டும்
சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே
விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும்.
அந்த நாயை “வா வந்து சாப்பிடு,
என்னிடம் இன்னும் ஏழு கப்
சாப்பாடு உள்ளது” என்று நீங்கள்
கொட்டினாலும் அது சாப்பிடாது.
ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும்.
நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும்
என்று மனிதர்களுக்குத்
தெரிவதில்லை. ஏனென்றால் நாய்
பசித்து, ருசித்து சாப்பிடுகிறது.
மனிதன் பசிக்காமல், ருசிக்காமல்
சாப்பிடுகிறான்.
எனவே நம் சிகிச்சை முறையில்
பசி எடுத்தால் சாப்பிட வேண்டும்.
ரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட
வேண்டும் என்பதைத்
தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
யார் யார் வீட்டில் 80 வயதிற்கு மேல்
தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக
இருக்கிறார்களோ அவர்கள்
கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச்
சுவையையும்
வேண்டாமென்று ஒதுக்கியிருக்க
மாட்டார்கள். சுவை, சுவையாக வித
விதமாக மனத்திற்குப் பிடித்த
உணவுகளைச்
சாப்பிடுவது மூலமாக நாம்
ஆரோக்கியமாக இருக்க
முடியுமே தவிர நோய்கள் வராது.
எனவே சுவையைப் பற்றியும்,
உணவைப் பற்றியும் தெரியாத சில
மருத்துவர்கள் கூறும் தவறான
விதிகளை தயவு செய்து கடைப்
பிடிக்க வேண்டாம்.
இன்னும் விரிவான செய்திகளுக்கு
:::http://www.anatomictherapy.org/
http://www.youtube.com/watch?
v=bBV9mzPSreU

No comments:

Post a Comment