இன்றைய நவீன அறிவியலால்கூட
இன்னதென்று கூறமுடியாத
மர்மங்களும், வியப்புகளும்
அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான்
பெர்முடா முக்கோணம்.
இது “சாத்தானின் முக்கோணம்’
என்றும் அழைக்கப்படுகிறது.
புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ்
மற்றும் மொத்த கரீபியன்
தீவுகளையும் உள்ளடக்கிய
அட்லாண்டிக்கின்
கிழக்கிலிருந்து அசோர்ஸ்
வரை ஒரு முக்கோணமாக
அமைந்துள்ளது இது. சில
ஆய்வாளர்கள் இந்த முக்கோணப்
பகுதியில்
மெக்சிகோ வளைகுடாவையும்
சேர்க்கிறார்கள்.
”பிளைட்-19′ என்பது குண்டு வீசும்
விமானங்களுக்குப்
பயிற்சியளிக்கும் விமானமாகும்.
இது, அமெரிக்கக் கடற்படைக்குச்
சொந்தமானது. இந்த விமானம் 1945-
ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி,
ஒரு பயிற்சியில் பங்குகொண்டது.
அதன் பிறகு, அட்லாண்டிக்
கடலின்மீது பறந்துகொண்டிருந்தது.
அது மர்மமான முறையில்
திடீரென்று பெர்முடா பகுதியில்
மறைந்துபோனது. இந்த நிகழ்வைப்
பற்றி கடற்படை அதிகாரிகள்
ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த
அறிக்கையில் உள்ள விவரம்
இதுதான்:
“விமானம் தன்
கட்டுப்பாட்டை இழந்து காணாமல்
போவதற்குச் சற்று முன்பு,
விமானத்தின்
திசை காட்டி இயற்கைக்கு மீறிய
அளவுகளைக் காட்டியது. அனுபவம்
வாய்ந்த விமானி லெப்டினென்ட்
சார்லஸ் கரோல் டெய்லரின்
மேற்பார்வையில்தான் இந்த சம்பவம்
நிகழ்ந்தது. இந்த
நிகழ்வு ஒரு புரியாத புதிராக
உள்ளது.”
இதைவிட மர்மமான
இன்னொரு நிகழ்ச்சி உண்டு.
ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது.
அந்தக் கப்பலை மீட்பதற்காக
கடற்படை விமானம்
ஒன்று புறப்பட்டது. இந்த
மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர்
பயணம் செய்தார்கள். வட
அட்லாண்டிக் கடலில்
பறந்துகொண்டிருந்தது இந்த
விமானம். சில மணிநேரத்திற்குப்
பிறகு இந்த
விமானத்திலிருந்து எந்தத் தகவலும்
இல்லை.
அப்படியே தொலைந்துபோய்விட்டது
! இந்த சம்பவமும்
பெர்முடா பகுதியில் நடந்தது.
1872-ஆம் ஆண்டு 282 டன்
எடைகொண்ட “மேரி செலஸ்டி’
என்னும் கப்பலும், 1864-ஆம்
ஆண்டு செப்டம்பர் 13-ஆம்
தேதி “மேரி செலஸ்டி’
என்று அதே பெயர்கொண்ட
இன்னொரு துடுப்புக் கப்பலும்
பெர்முடா முக்கோணப் பகுதியில்
மறைந்துபோனதாக பழைய கால
செய்தித் தாள்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், இந்த பெர்முடா முக்கோணப்
பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச்
4-ஆம் தேதிக்குப்
பிறகு ஒரு சம்பவம் நடந்தது.
பார்படோஸ்
தீவிலிருந்து கிளம்பியது “
யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ எனும்
ஒரு பயணிக்கப்பல். அது எந்தச்
சுவடும் இல்லாமல் தனது 309
ஊழியர்களுடன்
தொலைந்து போனது.
”ஆரான் பர்’ என்பவர் முன்னாள்
அமெரிக்க துணை ஜனாதிபதி.
இவரது மகள் “தியோடோசியா பர்
அல்ஸ்பான்’,
தெற்கு கரோலினாவிலிருந்து
நியூயார்க்
நகரத்திற்கு “பேட்ரியாட்’ எனும்
கப்பலில் பயணம் செய்தார். பின்பு,
அவரைப் பற்றி எந்த தகவலும்
இல்லை. பெர்முடா முக்கோணத்தில்
1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம்
தேதி நடந்த சம்பவம் இது.
முக்கோண எல்லைக்கு உட்பட்ட
பகுதிதான் போர்டோரிகோ.
இங்குள்ள சான்ஜூ நகரின் வான்
பகுதியிலிருந்து ஒரு விமானம்
பறந்தது. இந்த விமானத்தின் பெயர்
“டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச்
சென்றுகொண்டிருந்த இந்த விமானம்
திடீரென்று மறைந்துபோனது. அதில்
32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள்
என்ன ஆனார்கள்
என்று தெரியவில்லை.
இது நடந்தது 1948-ஆம்
ஆண்டு டிசம்பர் 28-ஆம்
தேதி.அசோர்ஸிலிருந்து பெர்முடா
செல்லும் பயணிகள் விமானம் 1948-
ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம்
தேதி காணாமல் போனது. 1949
ஜனவரி 17-இல்
ஜமைக்காவிலிருந்து,
கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற
இன்னொரு விமானத்தைப் பற்றிய
எந்தத் தகவலும் தெரியவில்லை.
இந்த இரண்டு விமானங்களும் தென்
அமெரிக்க பிரிட்டிஷ்
ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக
விமானங்கள். இதுவும்
பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.
இன்னும் ஒரு பெர்முடா தகவல்.
முன்பு கந்தகம் ஏற்றிச்
சென்றுகொண்டிருந்தது “எஸ் எஸ்
மரைன் சல்பர் குயின்’ எனும் கப்பல்.
இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம்
தேதி எண்ணெய்
ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக
சென்றுகொண்டிருந்தது. அதில் 39
பயணிகள் இருந்தார்கள். அந்தக்
கப்பலிலிருந்து பிறகு எந்தத்
தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல்
“காண முடியாத இடத்திற்குச்
சென்றுவிட்டது’ என்ற
தகவலை மட்டும் பத்திரிகைகளில்
காணமுடிந்தது.
மேலும், ஒரு வியப்பான சம்பவம்
பெர்முடா முக்கோணப் பகுதியில்
நடந்தது. இது நடந்தது 1921-இல்.
“ரய் ஃபுகு மரு’ எனும் ஜப்பானியக்
கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல்
ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது.
அப்போது கப்பலிலிருந்து,”கத்திக்
கூம்புபோல அபாயம் தெரிகிறது…!
விரைந்து உதவிக்கு வாருங்கள்…”
எனும் வார்த்தைகள் அபாய
அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக்
கூறப்படுகிறது. கத்திக்
கூம்பு எனும் வார்த்தை எதைக்
குறிக்கிறது என்று இன்றுவரை
அறியப்படவில்லை.
மேற்கண்ட அனைத்து மர்மச்
சம்பவங்களும்
பெர்முடாமுக்கோணப்பகுதியில்
நடந்திருந்தாலும், ஏன்
இப்படி நடக்கின்றன? என்ற
கேள்விக்கு இன்னும் சரியான
விடை கிடைக்கவில்லை.
1962-இல் “பிளைட்-19′
தொலைந்துபோன
நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின்
புகழ்பெற்ற இதழ்
ஒன்று ஒரு கட்டுரை
வெளியிட்டிருந்தது. விமான
ஓட்டி,”நாங்கள்
இப்போது எங்கே இருக்கிறோம்
என்பதே எங்களுக்குத்
தெரியவில்லை…” என்று தகவல்
அனுப்பியதாக, அக்கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தது. மேலும்,
வின்சென்ட் காடிஸ் என்பவர் “
அர்கோசி’ எனும் இதழில்
எழுதும்போது, இந்த விமானம்
தொலைந்ததற்கு மாயச்
சக்திகளே காரணம்
என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால்,
கடற்படை விசாரணைக்
குழு அதிகாரிகள், “விமானம்
செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுவிட்டது” எனும்
அதிர்ச்சித்
தகவலை வெளியிட்டனர். இந்தச்
சமயத்தில் பெர்முடா முக்கோணம்
குறித்த திடுக்கிட வைக்கும்
சுவாரஸ்யத் தகவல்கள் உலக
நாடுகளெங்கும் பத்திரிகைகளில்
பிரசுரமாயின.
இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும்
திகிலூட்டும்
விதமாக,”நமது கொல்லைப்
புறத்தில் கடல் மர்மம்’ எனும்
கட்டுரையும், “கண்ணுக்குத்
தெரியாத வெளிகள்’ மற்றும்
“சாத்தானின் முக்கோணத்தில்’ எனும்
புத்தகங்களும் வெளிவந்தன. இந்த
வெளியீடுகளில், “வேற்றுக்
கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள்
கப்பல்களையும், விமானங்களையும்
பிடித்துச் சென்றிருக்கலாம். அதில்
இருந்த மனிதர்களை அந்த மாய
சக்திகள் என்ன செய்தன
என்று கடவுளுக்குத்தான் தெரியும்’
என்று எழுதப்பட்டிருந்தன.
கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப்
பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள்
அனைத்திற்கும்
மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச்
சக்திகளே காரணம்
என்று முழுமையாக நம்பினார்கள்.
இந்த மர்மங்களுக்கு மாயச்
சக்திகள்தான் காரணம் என்பதைப்
பொய்யாக்கும் வகையில்,
அரிசோனா பல்கலைக்கழக
ஆய்வு நூலகர் டேவிட்
குசெ என்பவர்,
“தி பெர்முடா டிரையாங்கிள்
மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற
நூலை வெளியிட்டார். அவர், அந்த
நூலில் பெர்முடா பகுதியில்
நடைபெறும்
தொலைதல்களுக்கு மனிதத்
தவறுகள்தான் காரணம்
என்று எழுதினார்.
மேலும், சூறாவளித்தாக்குதல்,
கடலுக்கு அடியில் ஓடும்
வளைகுடா நீரோடைகள், மிகப்
பெரிய முரட்டு அலைகள்,
கடற்கொள்ளையர்களின் செயல்கள்
ஆகியவையும் காரணங்கள்
என்று உறுதியாகக் கூறினார்.
அதற்கான தகவல்களையும் அவர்
வெளியிட்டிருந்தார். சில
எழுத்தாளர்களும்
பத்திரிகையாளர்களும்,
இது மனிதனுக்கு அப்பாற்பட்ட
சக்திகளின்
வேலை என்று கதைவிடுவதற்கு
வியாபார நோக்கமே காரணம்
என்று அவர் குற்றம் சாட்டினார்.
சில ஆய்வாளர்கள்,
“”பெர்முடா முக்கோணப் பகுதியில்
உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன்
ஹைட்ரேட் படிமங்களாகச்
சேகரமாகியிருக்கின்றன. இந்த
மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக்
குறைத்து பெரிய நீர்க்
குமிழ்களை உருவாக்கி கப்பல்களை
மூழ்கடித்துவிடுகின்றன”
என்று தெரிவிக்கின்றனர். மேலும்
சில ஆய்வாளர்கள்,””திடீர் மீத்தேன்
வெடிப்புகள்
சேற்று எரிமலைகளை உருவாக்கி
கப்பல்களை மிதக்க முடியாமல்
மூழ்கடித்துவிடுகின்றன” என்ற
தகவல்களை வெளியிட்டனர்.
ஆனால்,
இதற்கு மறுப்பு தெரிவிக்கும்
வகையில் அமெரிக்க நிலவியல்
நிறுவனம்
ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில்,””உலகம் முழுதும்
கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள்
பெருமளவில் இருக்கின்றன.
குறிப்பாக,
தென்கிழக்கு அமெரிக்கக்
கடற்கரையை ஒட்டிய “ப்ளேக்ரிட்ஜ்’
பகுதியில் இச்சேகரங்கள் மிக
அதிகமாக இருக்கின்றன.
இருப்பினும், அக் கடற்பகுதியில்
பெர்முடா முக்கோணப் பகுதியில்
நடப்பதைப்போன்ற எந்த
நிகழ்வுகளும் நடப்பதில்லை.
பெர்முடா முக்கோணப் பகுதியில்
மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக்
குறைவு. எனவே, மர்மச்
சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான்
காரணம் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது”
என்று தெரிவித்திருந்தது.
இதுவரை ஏராளமான
விமானங்களும், கப்பல்களும்
பெர்முடா முக்கோணப்பகுதியில்
மிகவும் மர்மமான முறையில்
மறைந்திருக்கின்றன. ஆயினும்,
இதற்கெல்லாம் அடிப்படையான
காரணம் என்னவென்று உறுதியாகக்
கூறமுடியாத நிலையே உள்ளது.
Tuesday, 29 October 2013
பெர்முடா முக்கோணம் எனும் ஆபத்தான பிரதேசம்
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment