Thursday, 24 October 2013

சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?

அந்தக்காலங்களிலெல்லாம்
வீடுகளில், கிளி, மைனா,
புறா என்று பறவைகளைச் செல்லமாக
வளர்ப்பார்கள். அப்படி வளர்க்க
முடியாத, ஆனால் எல்லோரையும்
அன்போடு பார்த்துக்கொண்டே
இருக்கத்தூண்டும்
பறவை எது என்றால்,
அது சிட்டுக்குருவிதான்.
பெரும்பாலும் விவசாயிகளின்
வீடுகளில் கூடுகட்டிக்கொண்டு,
முட்டையிட்டு,
குஞ்சுபொறித்து வாழும் கூட்டில்
இருந்து முட்டையோ, சிறிய
குஞ்சோ விழுந்துவிட்டால்,
அதை பத்திரமாக மீண்டும்
கூட்டுக்குள் வைப்பதையே பெரும்
கடமையாக வீடுகளில் உள்ளவர்கள்
செய்வார்கள்.
தத்தித் தத்தி வந்து,
சிதறிக்கிடக்கும்
தானியங்களை அது கொத்தி
தின்பதும், கீச், கீச்
என்று கத்திக்கொண்டே இருப்பதும்
விவசாயிகள், கிராமப்புறங்களில்
உள்ள வீடுகளில் எப்போதும்
பார்க்கும் ஒரு நிகழ்வாகும். அந்த
வகையில், சிட்டுக்குருவிகள்
என்பது மனதை மகிழ்ச்சியாக்கும்
இனிய பறவைகள்.
அவைகளின் ஒவ்வொரு செயலும்
மக்களின் நெஞ்சத்தில்
சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
அப்படிப்பட்ட
சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்,
பல இடங்களில் காணாமல்
போய்விடுவதும், சில இடங்களில்
எண்ணிக்கை பெருமள வில்
குறைந்து, தேடித்தான்
பார்க்கவேண்டிய நிலையில்
இருப்பதும் நிச்சயமாக
சுற்றுச்சூழலைப் பாதிக்கும்
நிகழ்வாகும்.
சீனாவில் மா சே துங் தலைமையில்
1958 முதல், 1962 வரை எலிகள்,
ஈக்கள், கொசுக்கள் மற்றும்
சிட்டுக்குருவிகள் தானிய
உற்பத்திக்கும், மனித உடல்
நலத்துக்கும் கேடாக
இருப்பதாகக்கருதி அவற்றை
ஒழிக்கவேண்டும்
என்று கட்டளையிடப்பட்டது.
சிட்டுக்குருவி இனம்
ஒட்டுமொத்தமாக அழிந்துபோனது.
ஆனால் பிறகுதான் அறிந்தார்கள்,
சிட்டுக்குருவிகள் தானியங்களைத்
தின்பதைவிட,
தானியங்களை அழிக்கும்
பூச்சிகளைத்தான் அதிகம்
தின்கிறது, எனவே, நாம்
சின்னஞ்சிறு பூச்சிகளைத்
தேடி அழிக்கமுடியாது என்பதால்,
அந்த வேலைகளை நமக்காகச் செய்யும்
உற்ற தோழன் என்பதைக்
கண்டுபிடித்து,
சிட்டுக்குருவிகளை
அழிக்கவேண்டாம், அதற்கு பதிலாக
கரப்பான் பூச்சிகளை ஒழியுங்கள்
என்று மா சே துங் அறிவித்தார்.
ஆனால், அதற்குள் காலம்
கடந்துவிட்டது.
இன்று நாமும் அத்தகைய
சூழ்நிலையைத்தான்
சந்தித்துவருகிறோம். மங்கலகரமான,
வளத்துக்கு அடையாளமாக
விளங்கும்
சிட்டுக்குருவிகளை இப்போது
காணவில்லை என்பதே நிதர்சனமான
உண்மையாகும். இயற்கையைப்
பொருத்தவரை, அது மெல்லிய
சிலந்தி வலையை போன்றது. அதில்
எந்தப்பகுதி அறுந்தாலும்,
ஒட்டுமொத்த
வலையே பாதிக்கப்பட்டுவிடும்.
அதே நிலையைத்தான்
சிட்டுக்குருவி
அறுகிப்போய்க்கொண்டு இருக்கும்
நிலையையும்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஓட்டு வீடுகள், கூரை வீடுகளில்
சிட்டுக்குருவிகள்
கூடு கட்டிக்கொள்ள வசதியாக
இருந்தது. நவீன கட்டிடக்கலை யில்
கட்டப்பட்ட வீடுகளில் அந்த
வசதிகள் இல்லை. மேலும்,
கிராமங்களில் முதலில் வீடுகளில்
உள்ள மின்சார விசிறிகள் நிறைய
சிட்டுக்குருவிகளை பலிவாங்கியது
. அதற்குப்பிறகு செல்போன்களுக்காக
போடப்பட்டுள்ள டவர்களில்
இருந்து வெளியாகும் மின்காந்த
அலைகள் சிட்டுக்குருவிகளின்
மெல்லிய இதயத்தை இயங்காமல்
நிறுத்திவிடுகின்றன.
பயிர்களுக்கு பயன்படுத்தும்
பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள்
தங்கள்
பங்குக்கு சிட்டுக்குருவிகளை
அழித்துவிட்டன. வீடுகளிலும்
முன்பு நெல், அரிசி போன்ற பல
தானியங்களைக் காயப்போடுவார்கள்.
அவை சிதறும்போது,
சிட்டுக்குருவிகளுக்கு உணவா
கியது.
இப்போது எல்லா வீடுகளிலும்
கடைகளில் பேக் செய்யப்பட்ட
பொருட்களையே வாங்குவதால்,
சிட்டுக்குருவிகளின்
உணவுக்கு அந்த வாய்ப்பும்
பறிபோய்விட்டது.
இந்தக்குறைகளையெல்லாம்
எப்படி நிவர்த்தி செய்வது என்பதை
ஆராய்ந்து சரி செய்தால்,
அழிந்துவரும் சிட்டுக்
குருவி இனங்களைக் காப்பாற்ற
முடியும்.
ஒவ்வொருவரும் தங்கள்
பங்குக்கு வீட்டுத்
தோட்டங்களை உருவாக்கி,
பூச்சி மருந்து பயன்படுத்தாத
தாவரங்களை வளர்த்து, மரங்களில்,
வீட்டு பால்கனி, மொட்டை மாடிகள்
போன்ற இடங்களில் சிறிய கூடுகள்
வைத்து, அதில் சிறிது தண்ணீரும்,
தானியங்களும் வைத்தால்,
சிட்டுக்குருவிகள் தேடி வரும்,
தொடர்ந்து வைத்தால், அது உங்கள்
வீட்டு பறவையாகிவிடும்.

No comments:

Post a Comment