Friday, 25 October 2013

வாழ்க்கை என்பது என்ன?

வாழ்க்கை என்பது என்ன! அதில்
எப்படி வாழ வேண்டும்! மிகவும்
சந்தோஷமாக வாழ வேண்டிய,
அமைதியாக வாழ வேண்டிய,
நிறைவுடன் வாழவேண்டிய
வாழ்வை நாம் எப்படி வாழ்கிறோம்.
வாழ்க்கை என்பது கோழைகளுக்கும்,
சோம்பேறிகளுக்கும்
சொந்தமானதல்ல, முதலில்
உங்களை சுறுசுறுப்பானவர்களாக
மாற்றிக் கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பு இருந்தால்தான்
செய்யும் வேலையில் ஆர்வம்
ஏற்படும். சோம்பலும்,
கோழைத்தனமும் கலந்த மனிதனால்
நிஜ உலகில் எதுவும்
சாத்தியமாகாது.
நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்ள
வேண்டும், நல்ல
நண்பர்களோடு சேர்ந்து யாருக்கும்
தீங்கிழைக்காமல், கூட்டாக வாழும்
வாழ்க்கை எல்லோருக்கும்
அமையாது அப்படி
அமைத்துக்கொண்டவர்கள்
பாக்கியசாலிகளே, கிடைத்த
நண்பர்களை பகைத்துக்கொள்ளாமல்
மேலும் விரும்பவைக்கும் வகையில்
நம்மை அவர்களிடம்
வெளிப்படுத்திக் கொள்ள
வேண்டும். நம்மிடமுள்ள எந்த
பழக்கம் மற்றவர்களை வெறுப்படைய
செய்கிறதோ அதை
முடிந்தவரையிலும் திருத்திக்
கொள்ள வேண்டும்.
நாம் பார்க்கும் அனைத்திலிருந்தும்
பாடங்கற்றுக்கொள்ள வேண்டும்,
சின்ன சின்ன விஷயங்கள் கூட
பெரிய
பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
பறவைகள், பட்டாம் பூச்சி,
தாவரங்கள் என்று அனைத்தும்
ஏதோ ஒன்றை நமக்கு
சொல்லிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கையை கற்றுக்கொள்ள
யாரை தேடியும் போக
வேண்டியதில்லை,
கண்ணை திந்து வைத்திருந்தாலே
போதும். நாம் கூர்ந்து
கவனித்தால், எது வேண்டுமானாலும்
ஆசானாக
இருந்து வாழ்க்கை முறையினை
சொல்லிக் கொடுக்கும்
மிருகங்களிடமிருந்து கூட
அன்பை, நன்றியை கற்றுக்கொள்ள
முடியும்.
கற்றுக்கொண்ட விஷயங்களில்
நன்மை எது,
தீமை எது என்று ஆய்ந்து
நன்மையாதை தேர்ந்தெடுப்பவன்
வாழக் கற்றுக்கொள்கிறான்.
சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்
இருந்தால் மட்டும்
போதாது அதனை தக்கவைத்துக்
கொள்ள வேண்டுமானால் நல்லவனாக
இருக்க வேண்டும்.
மகிழ்ச்சி வேண்டும் என்பதற்காக
பிறரை துன்பப்படுத்தி
மகிழக்கூடாது, முகத்திற்கு நேராக
புகழ்ந்து பின்னால்
தூற்றித்திரிந்தால்,
கெடுவது உங்கள் மகிழ்ச்சிதான்.
சுயநலத்திற்காக
பிறருக்கு தீங்கிழைக்காமல்
வாழ்ந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய
தேவையில்லை, யாரை பார்த்தும்
தலைகுனிந்து நிற்க
வேண்டியதில்லை.
உண்மை என்பதை பற்றி
பிடித்துக்கொள்ள வேண்டும்.
உண்மையின்
வலிமை மிகப்பெரியது,
வாழ்க்கை முறைக்கு உண்மை பேசுவது
அல்லது பிறருக்கு உண்மையாக
நடப்பது மிகவும்
இன்றியமையாததாகும். நீங்கள்
உயரமோ குள்ளமோ,
கறுப்போ சிகப்போ அதுவெல்லாம்
முக்கியம் கிடையாது,
உங்களை நம்பலாம்,
நம்பி எதை கொடுத்தாலும்
உண்மையாக செய்து முடிப்பீர்கள்
என்ற நம்பிக்கை ஏற்படும்
வகையில் நடந்து கொள்வதுதான்
உண்மையான
அழகு அதற்கு உங்களில்
உண்மை இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக
இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறைவனின் பார்வையில்
நல்லவனாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு இறை நம்பிக்கை
இல்லையென்றாலும்
உண்மையை கைவிடாதீர்கள்
ஏனெனில் உண்மைதான் கடவுள்.
அதை உறுதியுடன்
பற்றிக்கொண்டாலே போதும்
வாழ்க்கையின் விளக்க முடியாத
அனுபவங்களையெல்லாம்
கண்டு கொள்ளலாம்.

No comments:

Post a Comment