Tuesday, 29 October 2013

கூடா நட்பு வாழ்க்கையை சீரழிக்கும்!

நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில்
இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு
வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக்
கொள்கின்றது. எல்லோருக்கும்
எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள்
கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப
கால
அரை காற்சட்டை வாழ்ககையோடு
விடைபெறுகிறார்கள். சிலர்
கல்லூரிக்கால வாழ்க்கையுடன்
நின்று போய் விடுகிறார்கள்.
வேறு சிலர் அலுவலக
வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து
விடுகிறார்கள். இன்னும் சிலர்
வாழ்க்கைத் துணையாகவும்
மாறிவிடுகின்றார்கள்.
வெகு சில நண்பர்களே இந்த
எல்லைகளை எல்லாம்
தாண்டி எமது இதயத்தின்
மேடையில் கூடாரமடித்துக்
குடியிருக்கிறார்கள்.
நமது வாழ்க்கையின் பாதையில்
நண்பர்களின் பங்களிப்பு மிக மிக
முக்கியமானது. இளம் வயதில்
நண்பர்களுடன் அதிக நேரம்
செலவிடுவதால் நண்பர்களின்
குணாதிசயங்கள் நம்மையும்
தொற்றிக் கொண்டு விடுகிறன.
வாச மலர்களை மாலையாக
தொடுக்கும் வாழைநார் கூட பூவின்
வாசனையைப் பெற்று நறுமணம்
வீசுகின்றது. அதுபோல
சாக்கடையில் விழ்ந்த நறுமண
மலரும் சாக்கடையின்
வாசத்தையே பெற்று விடுகின்றது.
ஒருவருடைய
குணாதிசயங்களை அறிய அவருடன்
நெருங்கிப் பழகும்
நண்பர்களை வைத்து சுலபமாக
கணித்துக் கொள்ள முடியும்
என்பதும், ஒருவருடைய பொருளாதார
நிலையைக் கணிப்பிட அவர்
சந்தையில் வாங்கும்
பொருட்களை வைத்து கணித்துக்
கொள்ள முடியும் என்பதும் பழைய
பழமொழிகளாகும். விளக்கமாக
கூறுவதாயின் ஒருவரின் அகத்தின்
அழகை முகம் காட்டுவதுபோல்
அவரின் குணத்தின்
அழகை நண்பர்களின் நடத்தையில்
கண்டு கொள்ள முடியும்
எனக்கூறலாம்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும்,
தோல்விக்கும் பெரும்பாலான
நேரங்களில் நண்பர்களே காரணமாக
இருக்கிறார்கள். அதனால்தான்
நமக்கு அமையும் நண்பர்கள்
நல்லவர்களாக இருக்க
வேண்டியது அவசியமாகிறது.
அதனால் போலும் வள்ளுவன்
“அழிவினவைநீக்கி ஆறுய்த்து
அழிவின்கண் அல்லல் உழப்பதாம்
நட்பு என அறிவுறுத்துகின்றார்.
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப்
பறக்கவிடுவார்களோ, அதே போல
தீய நண்பர்கள்
நம்மை உயரத்திலிருந்து இழுத்து
பள்ளத்தில் போட்டு விடுவார்கள்.
ஒரு நல்ல நண்பனிடம் இருந்து நல்ல
பல விடயங்களை கற்றுக்
கொள்ளலாம் அதேபோல் தீய
நண்பர்களிடம் இருந்து தீய பழக்க
வழக்கங்களையும் தீய
குணங்களையுமே கற்றுக்
கொள்ளலாம்.
உண்மையான நண்பன் உங்களுடைய
ஆரோக்கியத்தில் கவனம்
செலுத்துவான். உங்களுடைய
முன்னேற்றத்தில் கவனம்
செலுத்துவான். உங்களைத் தீய
வழியில் இழுக்க மாட்டான்
என்பதை மனதில் அழுத்தமாய்
எழுதுங்கள்.
ஒருவேளை நீங்கள் புகை,
மது போன்ற பழக்கங்களில் இருந்தால்
உங்களை அதில்
இருந்து வெளியே கொண்டு
வருவதுதான் உண்மையான
நண்பனின் பண்பு.
அதை உற்சாகப்படுத்துவது அல்ல.
நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக்
கடிந்து கொள்வான். உங்கள் மனம்
கோணாமல் எப்போதும் நல்ல
விடயங்களையே சொல்லிக்
கொண்டிருப்பவன் ஆத்மார்த்த
நண்பன் அல்ல, நல்ல நண்பன் நாளைய
வாழ்வில் நீங்கள் நன்றாக, இருக்க
வேண்டும் எனும் ஆர்வம்
கொள்பவன், அப்படிப்பட்டவர்கள்
உங்கள் குறைகளை உங்களிடம்
சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள்,
அதற்காக நட்பே போனால் கூட
கவலைப்பட மாட்டார்கள்.
”நான் தண்ணியடிக்கிற
விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே
” என்பது போன்ற சத்தியங்களை நல்ல
நண்பன் கண்டுகொள்வதில்லை. சில
நேரங்களில் சத்தியம் கூட
மீறப்படலாம் என்பது உண்மைத்
தோழனுக்குத் தெரியும்.
உங்களுடைய
இலட்சியங்களை உங்கள் நண்பன்
ஆதரிக்கிறானா?
அல்லது அவனுடைய செயல்பாடுகள்
உங்களுடைய இலட்சியத்துக்குத்
தடைக்கல்லாய் இருக்கின்றதா?
என்பதைப் பாருங்கள். உங்களுடைய
இலட்சியங்களைக் கிண்டலடிப்ப
வனோ, அதை நோக்கிய உங்கள்
பயணத்தின்
போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல்
இருப்பவனோ உங்களுடைய நண்பன்
அல்ல.
உண்மையான நண்பன் உங்களுடைய
திறமைகளை முழுமையாய்ப்
பயன்படுத்த ஊக்குவிப்பான்.
உதாரணமாக ஓர் இசைக்கலைஞன்
ஆவது உங்கள் இலட்சியமெனில்,
அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்
எனும் விஷயங்களில்
உங்களுக்கு உதவி செய்வான்.
உங்களைப் படிப்படியாக அந்தப்
பாதையில் நடத்துவான்.
வெறுமனே உங்களுடைய
வெற்றிகளில்
வந்து கை குலுக்கிவிட்டுப்
போகும் மனிதனாக அவன்
இருப்பதில்லை.
மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம்
தரக்குறைவாக விமர்சிக்கும்
நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய்
இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள்
வேறு நண்பர்களிடமும் அதே போலப்
பேசித் திரியும் வாய்ப்பு உண்டு.
நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும்
போது அடுத்தவர்களைப்
பற்றி ஏகப்பட்ட
கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள்
என யோசியுங்கள். அந்த நண்பன்
நல்ல நண்பன் அல்ல என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்,
அன்னை திரேசாவின் வாழ்வில்….
அன்னை திரேசா சிறுமியாக
இருந்தபோது அவருடைய
தோழியரில் ஒரு தீய
தோழி இருப்பதை அவருடைய தாய்
கவனித்தார். ஒரு தீய
நட்பு நல்லவர்களையும்
கெடுத்துவிடும் எனவே அந்த
நட்பைத் துண்டிக்க வேண்டும் என
திரேசாவின் தாய் முடிவெடுத்தார்.
ஒருநாள் அவர்
திரேசாவை அழைத்தார். அவருடைய
கையில் ஒரு பெரிய பெட்டியில்
நிறைய அப்பிள் பழங்கள் இருந்தன.
அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட
திரேசாவின் கண்கள் ஆனந்தத்தில்
விரிந்தன. ஆர்வத்துடன்
ஒரு பழத்தை எடுக்கப்போன
திரேசாவை தாய் நிறுத்தினார்.
அவற்றுள் நல்ல பழங்களாகத்
தெரிந்து இரண்டு கூடைகளில்
வைக்கும்படி தாய் கூறினாள்.
அதன்படியே திரேசாவும் நல்ல
பழங்களாகத்
தெரிந்து இரண்டு கூடைகளில்
நிரப்பினாள். தாய்
தனியே வைத்திருந்த ஓர் அழுகிய
பழத்தை எடுத்தார்,
திரேசா புரியாமல் பார்த்தாள். தாய்
அந்த அழுகிய பழத்தை நல்ல
பழங்கள் இருக்கும் ஒரு கூடையின்
நடுவே வைத்தார்.
“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட
பழத்தையும் வைக்கிறீர்கள்?” என
திரேசா கேட்டார்.
“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த
இரண்டு கூடைகளையும்
அப்படியே கொண்டு போய்
ஒரு இடத்தில் வை. நான் சொல்லும்
போது எடுத்து வா” என்றார் தாய்.
திரேசா அப்படியே செய்தார்.
சில நாட்களுக்குப் பின் தாய்
திரேசாவை மறுபடியும் அழைத்தார்.
அந்த பழக்
கூடைகளை எடுத்து வரச்சொன்னர்.
பழக்
கூடைகளை திரேசா எடுத்து வந்து
தாயின் முன்னால் வைத்தார்.
அழுகிய பழம் வைத்த கூடையில்
இருந்த பழங்கள்
எல்லாமே அழுகிப்போய் இருந்தன.
மற்றக் கூடையில் இருந்த பழங்கள்
பழுதடையாது அப்படியே இருந்தது.
இதனைப் பார்த்த
திரேசா வருந்தினார். நன்றாக இருந்த
பழங்கள் கெட்டுப்
போய்விட்டனவே என்று அவருக்கு
அழுகையே வந்து விட்டது.
தாய் திரேசாவை அருகில்
அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்…
பார்த்தாயா? ஒரு அழுகிய அப்பிள்
பழம் ஒரு கூடை நல்ல
பழங்களை அழுக வைத்துவிட்டது.
தீய நட்பும் இப்படித்தான். ஒரு தீய
நட்பு ஒரு நல்ல
குழுவையே நாசமாக்கி விடும்.
ஒரு மனிதனைக்
கொல்வதற்கு ஒரு துளி விஷம்
போதும்.
எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில்
கவனம் தேவை. உண்மை நண்பர்கள்
உங்களுடைய சந்தோஷத்தின்
போது காணாமல் போனாலும்
உங்களுடைய துயர வேளையில்
நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.
உடுக்கை இழந்தவன் கைபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப்
போக்கத் துடித்து செல்வதே நல்ல
நப்புக்கு இலக்கணமாகும்.
மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது.
பணக்
கஷ்டமாயிருக்கு உதவி தேவையாய்
இருக்கிறது, என கஷ்டம் என்றால்
மட்டுமே உங்களிடம் வரும்
நண்பர்கள் சிலர் இருப்பார்கள்.
நட்பின் முக்கிய
தேவையே உதவுவதில்தான்
இருக்கிறது. ஆனால் அத்தகைய
சூழல்களில் “மட்டுமே” உங்களைத்
தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின்
சின்னங்கள் என்பதை மனதில்
கொள்ளுங்கள்.
சில நண்பர்கள் அவர்கள்
சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர்
பொம்மை போலத் தலையாட்டும்
நண்பர்களே வேண்டுமென்றார்கள்.
அவர்கள் உண்மையான நண்பர்கள்
அல்ல, அவர்களுடைய நட்பில்
வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான”
ஒரு செயலைச்செய்ய
உங்களை ஊக்கப்படுத்துபவன்
உங்கள் நண்பனல்ல.
அப்படிப்பட்டவர்களை நீங்கள்
முளையிலேயே கிள்ளி எறியலாம்.
போதை, திருட்டு, பாலியல், சமூக,
விரோதச் செயல் போன்ற பல
தவறுகளுக்கு இளைஞர்களை
இட்டுச்செல்வதில் பெரும்பாலான
பங்கு நண்பர்களையே சாரும்,
அத்தகைய ஒழுக்கத்தை மீறிய
செயல்களுக்குள்
உங்களை இழுப்பவர்கள் உங்கள்
எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள்
எப்படி இருக்கிறீர்களோ அதே
நிலையில் எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல்
பழகுபவனே உண்மை நண்பன்.
“எனக்குப் பிடித்த
மாதிரி மாறினால் தான்
உன்னோடு நட்பாய் இருப்பேன்” என
நிபந்தனைகள் விதிப்பவர்களின்
நட்பை விலக்கி விடுங்கள்.
உங்கள் நண்பர்களுடன்
பேசும்போது உங்களுடைய மனம்
நேர் சிந்தனைகளில் நிறைகிறதா?
எதிர் சிந்தனைகளில்
நிரம்புகிறதா? என்று பாருங்கள்.
எதிர்
சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த
நட்பு தப்பானது என்பதைக்
கண்டு கொள்ளுங்கள்.
சில நண்பர்களோடு பழகும்போது
உங்களுடைய நல்ல குணாதிசயங்கள்
எல்லாம்
வளர்ந்து கொண்டே இருக்கும்
அத்தகைய
நண்பர்களை எப்போதுமே அருகில்
வைத்திருங்கள்.
உங்களுடைய நெருங்கிய
நண்பர்களில்
நான்குபேரை நினையுங்கள்,
அவர்கள் நல்லவர்களா,
மோசமானவர்களா என
இப்போது அளவிடுங்கள், தீய
நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய
நண்பனோடு பழகு வதை விட
நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச்
சிறந்தது.
கடைசியாக ஒன்று நல்ல
நட்பை நீங்கள்
எதிர்பார்ப்பது போலவே
அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள்.
எனவே நீங்களும்
பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல
நண்பனாகவே இருங்கள்!
நமது பெற்றோரையும்,
உடன்பிறந்தோரையும் நம்மால்
தீர்மானிக்க முடியாது. ஆனால்
நமது நண்பன் யாராக இருக்க
வேண்டும் என்பதை நம்மால்
தீர்மானிக்க முடியும்.
நட்பு என்பது ஒருவரின்
வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக்
கொண்டதால், அது விஷயத்தில்
ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர
எச்சரிக்கையும், கவனமும் தேவை.
கூடா நட்பு தூக்கு மேடைக்கு
வழிகாட்டும். ஆனால் நல்ல
நட்பு வாழ்க்கையின்
சிகரத்திற்கே வழிகாட்டும்.

No comments:

Post a Comment