குடும்பம் ஒரு கோயில் என்ற நம்
கலாசாரத்தின் ஆணிவேரான
நம்பிக்கை படிப் படியாக உருமாறி,
உருக்குலைந்து கொண்டு
இருக்கிறதோ என்று அஞ்சும்
அளவிற்கு காணப்படுகின்றது
இன்றைய கணவன் – மனைவிஉறவுச்
சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்…
இத்தனை உறவுச் சிக்கல்கள்?
ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக
ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச
வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-
பெண்
இருவருக்குமே இதுவரை சமூகம்
கடைபிடித்து வந்தகட்டமைப்பை
மீறுவதற்கான நிறைய
வாய்ப்புகளும், வசதிகளும்
பெருகிவிட்டன.
சமூகத்திலும் முன்பு இருந்த
இறுக்கம் சில விஷயங்களில்
தளர்ந்திருக்கிறது.அதை
எதிர்மறையாக பயன்படுத்திக்
கொள்பவர்கள், எல்லை மீறி,
குடும்பச் சூழலைசிக்கலாக்கிக்
கொள்கிறார்கள்.
அவன், அதனால் இப்படிச் செய்தான்,
இவள், இதனால் இந்த
நிலைமைக்குஆளானாள்
என்று தனி நபர் பிரச்னையாகப்
பார்க்காமல், பெருகிவரும்
இந்தபொதுப் பிரச்னையின் சமூக,
பொருளாதார, அரசியல் காரணங்கள்
என்ன என்பதை ஆராய
வேண்டியதும்,
அதிலிருந்து மீள்வதற்கு வழி
காட்டுவதும் சமூகத்தின்பொறுப்பு
பெரிய அளவில் பொருளாதார
மாற்றங்கள்
வருவதற்கு முன்பு தனிநபர்
ஒழுக்கம் பெரிய விஷயமாக
வலியுறுத்தப்பட்டது. ஆனால்
இன்று கடவுள் பக்தி கூட
வியாபாரம் ஆகிவிட்டது.
இராமாயணம் போன்ற
இதிகாசங்களில் பிறன்
மனை நோக்காமல் இருப்பதுதான்
பேராண்மை என்று போதிக்கப்பட்டது.
இன்றைய தொலைக்காட்சி தொடர்
நாடகங்கள், சினிமா போன்ற
ஊடகங்களில் முறை தவறும்
ஒழுக்கம் தான் வாழ்க்கையில்
பிழைப்பதற்கான
வழி என்று திரும்பத் திரும்பக்
காண்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதையெல்லாம்
பார்ப்பவர்களின் மனநிலை,
சிந்தனை என்னவாகும்?
முந்தைய தலைமுறை மனிதர்கள்
மானம் பெரிது என்றார்கள்.இன்றைய
தலைமுறைக்கு பணம்தான்
வாழ்க்கை என்றாகிவிட்டது.
பணத்தைத் தேடி ஒடிக்
கொண்டே இருப்பதால், வீட்டுக்குள்
ஒவ்வொருவரும் ஒரு தீவாக
வாழ்கிறார்கள். இந்த
வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின்
மூலகாரணம்.‘இப்படித்தான் வாழ
வேண்டும் என்கிற தீர்மானத்தைவிட
எப்படியும் வாழலாம் என்கிற
மனநிலையை வளர்க்கும்
சூழ்நிலைகள்.
குடும்ப உறவுகள்
சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான
காரணங்கள் என்ன,
கணவன்-
மனைவி உறவு இதயத்துக்கு
இணக்கமாகவும்,
உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க
வழிகள் என்ன?
ஆண், பெண்
இருபாலருமே தங்களுக்கான
எல்லையைக்
கடந்து வரும்போது உறவுச்சிக்கலில்
மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு ஆணின் மனநிலையும்
பெண்ணின்மனநிலையும்
முற்றிலும் வேறானவை. ‘என்
மனைவிக்காகவும்
குழந்தைகளுக்காகவும்தானே
உழைக்கிறேன் என்று நேரம் காலம்
பார்க்காமல்
உழைப்பதும்,சம்பாதிப்பதும்தான்
கௌரவம் என ஆண் நினைக்கிறான்;
அதுதான் சந்தோஷம்
எனநம்புகிறான்.
ஆனால், ஒரு பெண், ஆணின்
உடல்தேவை சார்ந்த
அருகாமையைவிட அவன்
அன்பும்,பாசமும்தான்
பெரிது என்று நினைக்கிறாள்.
நிறைய குடும்பங்களில்
பிரச்னையே,என் கணவர் என்கூட
உட்கார்ந்து பேசுவ தில்லை,
எனக்காக நேரம்
செலவிடுவதில்லை என்பது தான்.
அந்த குறைந்தபட்ச எதிர்
பார்ப்பு தொடர்ந்துநிறைவேறா மல்
போக, அந்த எதிர் பார்ப்பை யார்
பூர்த்தி செய்கிறார்களோஅவர்களை
நம்பி எல்லை தாண்டுகிறாள்.
ஆண், பெண் இருவருக்கும் நடக்கும்
இளவயது திருமணங்கள்.
சிறுவயதில்பொருத்தமில்லாத
ஒருவரை கல்யாணம்
செய்து கொள்கிறார்கள்.
ஆனால்,குறிப்பிட்ட
வயதுக்கு அப்புறம்
அவர்களது ஆழ்மன
விருப்பத்துக்கு ஏற்றஒருவரைப்
பார்க்கும்போது மனம்
தடுமாறுகிறார்கள். அதேபோல்
அதீதஎதிர்பார்ப்புடன் திருமண
பந்தத்தை உருவாக்கி, அந்த
எதிர்பார்ப்பில் பலன்பூஜ்யமாகிப்
போகும்போது அடுத்த
உறவை நாடுகிறார்கள். உளவியல்
ரீதியாக இந்தகாரணங்கள் உறவுச்
சிக்கலை எண்ணெய்
ஊற்றி வளர்க்கின்றன. இதைத்
தொடர்ந்துவிவாகரத்துகள்
அதிகரிக்கும், தனித்து வாழும்
பெண், ஆண்
எண்ணிக்கைஅதிகரிக்கும்.
பிரச்னைகளும் அதிகரிக்கும்.
வாழ்க்கை இனிக்க வழிகள்…
கணவனுக்கும் மனைவிக்கும்
ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக
கருத்து வேறுபாடுவந்தால், ‘யார்
சரி? ‘யார் தவறு? என்ற
போட்டி மனப்பான்மையில்
சண்டையைநீட்டிக்கொண்டே
இருக்காமல், யாராவது ஒருவர்
உடனே முற்றுப்புள்ளி வைப்பது,
வாழ்க்கையை இனிமையான
தொடர்கதையாக்கும்!
நம் சமூகத்தில்,
மனைவி தன்னை கவனிக்க
வேண்டும்
என்று எல்லா ஆண்களும்எதிர்
பார்க்கிறார்கள். குழந்தை, தாய்
வீட்டுப் பிரச்னைகள்,
ஆபீஸ்வேலைகள்
என்று மனைவி பிஸியாக
இருந்துவிட்டு,
கணவருக்கு கவனிப்புதராதபோது…
கணவர் கண்ணியம் மீறுகிறார்.
அதற்கு வாய்ப்புத் தராமல்
இருந்துவிடுவதே வாழும் கலை
கணவன்-மனைவி இருவரில் ஒருவர்
தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம்
நாட்டம்உள்ளவராக இருந்து,
மற்றொருவர் அந்த
நாட்டத்துக்கு இணையான
ஜோடியாகஇல்லாமல்
போகும்போதுதான் பிரச்னைகள்
பூதாகாரமாக எழுகின்றன.
விரிசல்கள் ஆழமாகின்றன.
அந்தரங்கத்துக்கும் அன்புடன்
நேரத்தை ஒதுக்குவது
காதலைவெல்லும் வழி.
Thursday, 31 October 2013
கலாச்சார மாற்றத்தில் இன்றைய தலைமுறை
Labels:
சுயமுன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment