Wednesday, 9 October 2013

காது பாதுகாப்பு

காதுக்
குடுமியை அகற்றுவது எப்படி?
இப்படிக் கேட்பவர்கள் பலர்,
குப்பை வாளிக்குள் (Dustbin)
இருக்கும்
குப்பைகளை அகற்றுவதுபோல
காதுக்குடுமியையும் அகற்ற
வேண்டும் என அவர்கள்
நினைக்கிறார்கள்.
உண்மையில் காதுக்
குடுமி என்பது காதையும்
செவிப்பறையையும்
பாதுகாப்பதற்காக எமது உடல்
தானாகவே உற்பத்தி செய்யும்
பாதுகாப்புக் கவசம் போன்றது.
பொதுவாக இது ஒரு மென்படலம்
போல காதுக் குழாயின் சுவரின்
தோலில் படிந்திருக்கும். இதனால்
கிருமிகள், சிறுகாயங்கள், நீர்
போன்றவவை காதைத்
தாக்காது பாதுகாக்கிறது.
அத்துடன் காதை ஈரலிப்பாகவும்
வைத்திருக்கவும் உதவுகிறது.
அதிலுள்ள
கிருமியெதிர்ப்பு (antibacterial
properties) பண்பானது வெளிக்
கிருமிகள் தொற்றி, காதின்
உட்புறத்தில்
நோயை ஏற்படுத்துவதையும்
தடுக்கிறது.
காதுக்குடுமி (Cerumen)
என்பது இயல்பாக எண்ணெய்த்
தன்மை உள்ள ஒரு திரவமாகும்.
சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால்
(Sebaceous and Ceruminous glands)
சுரக்கப்படுகிறது.
ஒவ்வொருவரது உடல் நிலைக்கும்
ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ,
பாணிபோலவோ, திடமான
கட்டியாகவோ இருக்கக் கூடும்.
காதின் சுவரிலிருந்து உதிரும்
சருமத் துகள்கள், முடித் துண்டுகள்,
ஆகியவற்றுடன் கலந்து திடப்
பொருளாக மாற்றமுறும்.
தலை முடியின் உதிர்ந்த கலங்கள்
அதிகமாக இருப்பதும்,
எவ்வளவு நீண்ட காலம்
வெளியேறாது காதினுள்ளே
இருந்தது என்பதும்
எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு
முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.
காதுக்குடுமி காதின்
பாதுகாப்பிற்கு மிக
அவசியமானது என்பதால் வழமையாக
எவரும் அதனை அகற்ற
வேண்டியதில்லை. தினமும்
புதிது புதிதாக உற்பத்தியாகி வர
பழையது எம்மையறியாது தானாகவே
சிறிது சிறிதாக
வெளியேறிவிடும்.
மென்மையான குடுமியானது முகம்
கழுவும் அல்லது குளிக்கும் நீருடன்
கலந்து வெளியேறிவிடும்.
அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும்.
சிலருக்கு, பல்வேறு காரணங்களால்
வெளியேறாது உள்ளேயே தங்கி
இறுகி விடுவதுண்டு.
காதுக்குழாய் ஒடுங்கலாக
இருப்பதும்
சற்று வளைந்து இருப்பதும்
காரணமாகலாம்.
சிலருக்கு அது இறுகி,
கட்டியாகி வெளியேற
மறுப்பதுண்டு.
அது அதிகமாகி செவிக்குழாயின்
விட்டத்தின் 80
சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால்
காது கேட்பது மந்தமாகும்.
ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம்.
வேறு சிலருக்கு கிருமித் தொற்றும்
ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
காதுக் குடுமிப் பிரச்சனை என
மருத்துவர்களிடம் வருபவர்கள்
அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12
மில்லியன் அமெரிக்க மக்கள்
இப்பிரச்சனைக்காக மருத்துவ
உதவியை நாடுவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதில் 2/3 பேருக்கு அதாவது 8
மில்லியன் பேருக்கு மருத்துவ
ரீதியாக அதனை அகற்ற வேண்டிய
தேவை ஏற்படுகிறது.
இதை அகற்றுவது எப்படி?
1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ்
நல்லதா, சட்டைப் பின் நல்லதா,
நெருப்புக் குச்சி நல்லதா?
2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப்
போன்ற ஆபத்தான செயல்
வேறெதுவும் கிடையாது.
அவை காதிலுள்ள மென்மையான
சருமத்தை உராசி புண்படுத்தக்
கூடும் அல்லது அவை உராசிய
இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப்
பிடிக்கக் கூடும்
அல்லது அவை காதுக்
குடுமியை மேலும் உற்புறமாகத்
தள்ளி செவிப்பறையைக
காயப்படுத்தலாம்.
இதனால் நிரந்தரமாக காது கேட்காமல்
செய்துவிடவும் கூடும்.
எனவே இவற்றை உபயோகிப்பது
அறவே கூடாது.
3. காதுக்
குடுமியை கரைத்து இளகவைத்தால்
தானாகவே வெளியேறிவிடும்.
மிகவும்
சுலபமானது குடுமி இளக்கி நீர்தான்
. உப்புத் தண்ணீர், சோடியம்
பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில்
போன்றவையும் உதவக் கூடும்.
அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட
(Waxol, Cerumol)
காதுத்துளி மருந்துகளும் உள்ளன.
ஐந்து நாட்கள் காலை,
மாலை அவ்வாறு விட்டபின்
சுத்தமான வெள்ளைத்
துணியை திரி போல
உருட்டி அதனால் காதைச்
சுத்தப்படுத்துங்கள். பட்ஸ்,
குச்சி போன்றவற்றைப் பாவிக்க
வேண்டாம். அல்லது சுத்தமான
நீரை காதினுள் விட்டும்
சுத்தப்படுத்தலாம்.
இவ்வாறு வெளியேறாது விட்டால்
மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம்
அகற்றக் கூடும்.
அல்லது அதனை கழுவி
வெளியேற்றுவார். இதற்கென
விசேடமாகத் தயாரிக்கப்பட்ட
ஊசி போன்ற குழாய்கள் மூலம்
நீரைப் பாச்சி கழுவுவார்கள்.
இதன்போது எந்தவித வலியும்
இருக்காது. சில விசேட
சிறு ஆயுதங்கள் மூலம்
அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction
device) உபகரணம் மூலம் சுலபமாக
அகற்றவும் முடியும்.தற்போதுள்ள
குடுமி அகற்றப்பட்ட போதும்
சிலருக்கு இது மீண்டும் மீண்டும்
சேரக் கூடிய சாத்தியம் உண்டு.
மீண்டும் ஏற்படாமல் தடுக்க
முடியுமா?
அதற்கென மருந்துகள் எதுவும்
கிடையாது. வாரம்
ஒரு முறை குளிக்கும்
போது கையால்
ஒரு சிரங்கை நீரை காதுக்குள்
விட்டுக்
கழுவுவது அதனை இறுகாமல்
தடுக்கக் கூடும். ஆயினும் காதில்
கிருமித் தொற்றுள்ளவர்களும்,
செவிப்பறை துவாரமடைந்தவர்களும்
அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.
அடிக்கடி குடுமித்
தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12
மாதங்களுக்கு ஒருமுறை
மருத்துவரைச்
சந்தித்து ஆலோசனை பெறவோ
குடுமியை அகற்றவோ நேரலாம்.
ஆயினும் காதுக் குடுமியை நாமாக
அகற்றுவதை விட,
தன்னைத்தானே சுத்தம் செய்யும்
படி காதின்
பாதுகாப்பை அதனிடமே விட்டு
விடுவதுதான் உசிதமானது.

No comments:

Post a Comment