Thursday, 31 October 2013

ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

காலையில்
எழுந்தவுடனே நமக்கு ஒரு
சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய
வேலைகள் எல்லாம்
சிறப்பா முடியும்.
அப்படி இல்லாமால்
ஒரு அயர்ச்சியுடன்
எழுந்திருக்கணுமான்னு
நினைச்சோம்னா அன்றைக்கு
முழுக்கவே மந்தமா தான் இருக்கும்.
பொதுவா சிலர்கிட்ட ஏன்
டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே
தலைவலின்னு சொல்வாங்க.ஆன
காலம் மாறிட்டு வருது அதனால
இப்பல்லாம்
தலைவலின்னு சொல்லமாட்டாங்க.
ஒற்றைத் தலைவலின்னுதான்
சொல்வாங்க. ஏன் அப்படி?
பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய
பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90
சதவீதம் நோய்கள் வராது. அதோட 6
மணி நேர தூக்கம் மற்றும்
வேளைக்கு உணவு மற்றும்
மனசு விட்டு பேசுதல், கொஞ்சம்
உடற்பயிற்சி செஞ்சாலே பல
வியாதிகளை தவிர்க்கலாம்னு தீர்வு
சொல்றாங்க.
சரி இந்த ஒற்றைத்
தலைவலிக்கு தீர்வு என்ன
என்று பார்ப்போம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) :
உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத்
தலைவலியால் அவதிப்பட்டுக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.
முறையான வழிகாட்டுதல்களும்
சிகிச்சைகளும் இல்லாததால்,
அல்லது இருந்தும் எடுத்துக்
கொள்ளாததால் பலர்
தலைவலியை முற்றவிட்டு,
பக்கவாதம் உட்பட வேறு சில
ஆபத்தான நோய்களுக்கும்
ஆட்படுகிறார்கள். சிலருக்குக்
கண்பார்வை கூட மங்கிப் போகும்
வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.
அறிகுறிகள்:
ஒற்றை தலைவலி என்று
சொல்லப்படும் மைக்ரேன்
ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய
தலைவலி என்றாலும்,
தலை முழுவதும் வலி தெரியும்.
தலையின் மேல் பகுதியிலோ,
பக்கவாட்டிலோ துடிப்பது போலவும்
அடித்துக் கொள்வது மாதிரியும்
லேசாக வலி ஆரம்பிக்கும்.
படிக்கட்டில் ஏறும்போது,
வீட்டு வேலைகளைச் செய்யும்
போது வலி கூடும். ஒலியைக்
கேட்கவோ, ஒளியைப்
பார்க்கவோ கூச்சமாக இருக்கும்.
கூடவே குமட்டலும் வாந்தியும்
வரும்.
1. கிளாசிக் மைக்ரேன்: (Classic
Migraine)
தலைவலியின்போது நரம்பு
தொடர்பான அறிகுறிகள்
தென்படுவதை (avra)
இது குறிக்கும்.
அதாவது தலைவலி வருவதற்கான
அறிகுறிகள் இல்லாமல், நோய்
வருவது போன்ற உணர்வு மட்டும்
எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில்,
பொட்டெலும்பு, பின்பக்கத்
தலை போன்ற இடங்களில் இதன்
வலி தெரியும். கண்களிலும்,
தாடையிலும், முதுகிலும்கூட
வலி தெரியலாம். பேச்சு குழறுதல்,
கவனமின்மை, மனநோய்
போன்றவை இதனால் வர
வாய்ப்புண்டு. தற்காலிகமாக
பார்வையில் கோளாறு, உணர்வில்
கோளாறு, கண்களுக்குள் மின்னல்
போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல்
போன்றவை ஏற்படும்.
நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும்
வலி ஏற்பட்டு,
வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க
முடியாமல் தவிப்பார்கள். சிலர்
எதிலாவது தலையை
முட்டிக்கொண்டு அழுவது கூட
உண்டு.
கை, கால்களைப் பலவீனப்படுத்தும்
இந்த வலி இரண்டு நாட்களுக்கு
ஒருமுறைகூட வரலாம்.
2. பொதுவான மைக்ரேன்: (Common
migraine)
மனநிலையில் பாதிப்பு,
அடிக்கடி மூடு மாறுதல்,
சோர்வுறுதல், மனப்பதட்டம்
ஆகியவற்றால்
இத்தலைவலி ஏற்படும்.
இது தொடர்ந்து மூன்று நான்கு
நாட்களுக்கு இருந்தால் குமட்டல்,
வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர்
அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
ஒற்றைத் தலைவலி எதனால்
வருகிறது?
migraine-headaches
மூளை இயங்குவதற்குத்
தேவைப்படும் செரடோனின் என்ற
வேதியியல் திரவத்தின்
அளவு குறையும் போதுதான் இந்த
ஒற்றைத் தலைவலிகள்
ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக,
தலைக்குச் செல்லும் நரம்புகள்
சுருங்கி இரத்த ஓட்டம்
தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக
விஞ்ஞானிகள் நம்பினார்கள்.
புதிய கண்டு பிடிப்புகளின்படி,
மூளையைச் சேர்ந்த சில செல்களில்
ஏற்பட்டுள்ள பரம்பரைக்
குறைபாடுகள் தான் காரணம் (gentic
disorder)
என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம்
தடைப்படும்போது, மூளைக்குச்
செல்லும் செல்கள் அழிந்துபோக
வாய்ப்புகள் உண்டு. அதனால்
தலைவலி ஏற்படுவதாகக்
கூறப்படுகிறது.
பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக
வரக்கூடியது என்று
சொல்லப்படுகிறது என்றாலும்,
இது மரபில் உள்ள கோளாறால்தான்
என்று திட்டவட்டமாகக் கூற
முடியவில்லை. கணவன்-
மனைவி இருவருக்கும் ஒற்றைத்
தலைவலி இருந்தால்
பிள்ளைகளுக்கு 75 சதவிகித
வாய்ப்பு உண்டு. இருவரில்
ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50
சதவிகித வாய்ப்புகள் உண்டு.
அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம்
வரும் என்று சொல்லமுடியாது.
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத்
தலைவலியை நெருங்க விடாமல்
செய்ய முடியும். இதற்கு சில
வழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்:
சரியாக உணவு உண்ணாததும்,
ஒத்துக்கொள்ளாத சில
உணவுவகைகளை உண்பதும்,
அளவுக்கு அதிகமாக உண்பதும்
ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக்
காரணங்களாகும். இதனால் நல்ல
ஆரோக்கியமான உணவை,
வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள
வேண்டும். பால், காய்கறி வகைகள்
நல்லது. இறைச்சி வகைகளைத்
தவிர்த்தல் மிக நல்லது.
2. முறையான தூக்கம்:
தூக்கமில்லாமல்
அவதிப்படுபவர்கள் காலையில்
எழுந்ததும் தலைவலிப்பதாகச்
சொல்வது வாடிக்கையாகிவிட்டது.
அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும்
வழி முறைகளைத்
தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டும். உதாரணமாக தூக்கம்
வரும்வரை படிப்பது.
walking_exercise
3. உடற்பயிற்சி:
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள
வேதிப்பொருட்களை உற்பத்தி
செய்யும் தன்மை கொண்டது. இதனால்
மூளை நன்கு செயல்படத்
தொடங்கும். முறையான தொடர்
உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத்
தலைவலி அண்டாது.
4. சுற்றுச்சூழலில் கவனம்:
அதிக சூரிய வெப்பம் படுதல்,
வானிலை மாற்றங்கள்,
காற்றோட்டமில்லாத புழுக்கமாக
சூழலில் வாழ்தல் ஆகிய
சுற்றுச்சுழல்களாலும்
சிலருக்கு தலைவலி வரும். அதனால்
இவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
காற்றோட்டமுள்ள இடத்தில்
தூங்குவதும், மலச்சிக்கல் வராமல்
பார்த்துக் கொள்வதும் மிக
அவசியம்.
5. மது, புகை, காபி தவிர்த்தல் :
மது அருந்துதல், புகை பிடித்தல்,
காபி குடித்தல்
சிலருக்கு தலைவலியை உண்டாக்கும்
. இவை முற்றிலும் நிறுத்தப்படல்
வேண்டும். சிலருக்குக்
காப்பி சாப்பிட்டால்
தலைவலி நிற்பது போல் தெரியும்.
ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
6. கவலை, சோர்வு, மனஅழுத்தம்
வேண்டாம் :
அதிகமாகக் கவலைப்படுபவர்கள்,
அடிக்கடி சோர்வு அடைபவர்கள்,
மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி
ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில்
இருந்து விடுபட, மற்றவர்களுடன்
நட்பாகப் பேசிப் பழக வேண்டும்.
மனம் விட்டுப் பேசி குறைகளைக்
களைய வேண்டும்.
7. தடுப்புமுறைகள்:
ஒற்றைத் தலைவலி எதனால்
வந்தது என்பதை அறிந்துகொண்டு
அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது.
உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப்
போனால் தலைவலி வந்திருக்கும்.
திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக்
காணாது தவிர்த்தல். சில பொருட்கள்
அலர்ஜியாகி தலைவலி
கொடுத்திருக்கும். அவற்றைத்
தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன்
நடந்து கொள்ளலாம்.
8. மருந்துகள்:
இது போன்று ஒற்றைத்
தலைவலி அல்லது பொதுவான
தலைவலி அடிக்கடி வரும் போது,
டாக்டர்களை அணுகித்தான்
மருந்துக்களை சாப்பிட வேண்டும்.
தங்களுக்கு தெரிந்த
மாத்திரைகளை வாங்கி
சாப்பிடுவதும்
அல்லது தலைவலிக்கு மருந்துக்
கடைகளில் தரும்
மாத்திரைகளை வாங்கி
சாப்பிடுவதும் முறையானது அல்ல.
அதிக அளவில் மருந்து எடுத்துக்
கொள்வதும் சிலருக்குத்
தலைவலி வரக் காரணமாக இருக்கும்.
இதனால் மருத்துவர்
ஆலோசனைப்படி மட்டுமே மருந்து
எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த விடீயோ லிங்க்கையும்
பாருங்களேன்:: http://
www.youtube.com/watch?
v=7XUZg2X9P2U

யாருக்கு வேண்டும் உதவி

எவ்வளவு கடினமாக இருந்தாலும்
தன்மேல்
நம்பிக்கை வைத்து சுயமுடிவுகளை
எடுப்பவர்களே வெற்றியாளர்களாக
உருவாக முடியும். தெரியாத
புதிர்களுக்கு அந்தந்த
துறையை சார்ந்தவர்களிடம்
ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்
அதில் ஒன்றும் தவறில்லை, உங்கள்
திறமையை வளர்ப்பதற்கு ஜோசியர்கள்
வழிகாட்ட மாட்டார்கள், நம்
முன்னோர்கள்தான்
ஜோதிடத்தை நம்பி அந்த
இயல்பை நமக்கு கொடுத்துவிட்டு
போனார்கள்
நாமாவது நம்மை நம்பி நம்
சந்நதிகளை தன்னம்பிக்கை யின்
இயல்பில் வளரச்செய்வோம்.
தனக்கு பலமாக தானே இருக்கும்
போது எதற்கு வேறுயாரையோ
ஒட்டிக்கொள்ள வேண்டும், பிறர்
துணை இருந்தாலும் இல்லாமல்
போனாலும் எந்த தடையுமில்லாமல்
நம்
வேலைகளை நாமே செய்து கொள்ள
முடியாதா? தெரியாததை பிறரிடம்
கேட்கலாம் ஆனால்
முழு பொறுப்பையும் அவரிடம் ஏன்
ஒப்படைக்க வேணாண்டும்,
நம்மை சுற்றியிருப்பவர்களெல்லாம்
நமக்கு உதவியார்கள்தான், நாமும்
நம்
சுற்றத்தார்களுக்கு உதவியாளர்தான்
அதர்காக வீணாபோன
யாரோ ஒருவரை சார்ந்திருந்து அவர்
காட்டும் வழியில் நம்
வாழ்க்கையை விட்டுவிட்டால்
பின்பு நம்
வாழ்க்கை எங்கே காணோமே என்று
தேடிக்கொண்டு
திரியவேண்டியதுதான்.
பிறர் நம்மை பாராட்ட
வேண்டுமென்று கூட எதிர்பார்க்க
வேண்டாம்.
தகுதியில்லையென்றாலும்
பாராட்டுக்களை
கேட்டுக்கொண்டிருந்தால்தான்
சிலருக்கு புதுவேகம் வரும்.
பாராட்டுகளை எதிர்பார்பதால்தான்
இந்த வேகம் வருகிறது, யாரும்
பாராட்டவில்லையென்றால் மனம்
உறங்கிக் கொண்டுதான் இருக்கும்.
பாராட்டுதலை எதிர்பாராதவனின்
மனம் தூங்குவதில்லை அவனை
தூற்றினாலும், போற்றினாலும்,
உற்சாகமாகவே காணப்படுவான்,
தூக்கமருந்து சாப்பிடுகிறவன்
தொடர்ந்து சாப்பிட்டால்தான் நல்ல
தூக்கத்தை காண்பான்
அதை நிறுத்தி விட்டால், தூக்கமும்
நின்று விடும். அது போலதான்
பாராட்டுதலை நிறுத்தி விட்டால்
உற்சாகமும் நின்று விடுகிறது.
எனவே பாராட்டுதலை
எதிர்பார்க்காதீர்கள். தூக்க
மருந்தை படிப்படியாக
குறைப்பதை போல பிறர் பாராட்ட
வேண்டுமென்ற எண்ணத்தையும்
படிப்படியாக குறைத்துக்
கொள்ளுங்கள்
பிறரின் வார்த்தையை, பிறரின்
பொருளை சார்ந்திராமல்
நமக்கு நாமே ஊன்றுகோலாக
நிற்பதுதான் தன்னுறுதி கொண்ட
மனதின் அடையாளமாகும். பலர்
சேர்ந்து சாதிக்க முடியாததை சிலர்
தனியாக
நின்று சாதித்து விடுவார்கள்,
மனதை பிறரில் சாய்க்காமல்
தனியாக விடும் போதுதான் அதன்
வலிமை வெளிப்படும். உறுதியான
மனம் உள்ளவர்களுக்கு உலகில்
வேறு என்ன வேண்டும்,
யாரை தாங்கி பிடிக்க வேண்டும்
எனவே, மனதை உறுதியாக
வைத்திருங்கள், எப்போதும்
உங்களை சார்ந்திருங்கள்,
உங்களை உங்கள் வசமே விட்டபின்
இனி யாருக்கு வேண்டும் உதவி.

நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா?

மற்றவர்கள் நம்மை எப்படி எடை
போடுகிறார்களோ,
அதைப்போலவே நாமும்
நம்மை எடை போட்டால், நம்
திறமையை வெளிக்கொண்டு வர
முடியுமா! நம்
ஆற்றல்களை பற்றி அடுத்தவன்
சொல்லும்
அபிப்ராயங்களை நினைத்துக்
கொண்டிருந்தால் சிறிதேனும்
முன்செல்ல முடியுமா! பயனற்றவன்,
வீணானவன் என்று புறக்கணிக்கப்
படுகிறவர்கள் அதை வெறியாக,
வைராக்கியமாக வைத்துக் கொண்டால்
நாளை எதாவது ஒரு கதவு
அவனுக்காக
திறக்கப்படுவது நிச்சயம்
ஒருமுறை புறக்கணிக்கப்பட்டால்
இனி போதும், இந்த ஓவியமோ,
விளையாட்டோ, கவிதையோ முதல்
முறையே நிராகரிக்க
பட்டு விட்டது இனி போதும்
இது நமக்கு ஆகாது என்று
ஓரங்கட்டினால் அங்கேயே உங்கள்
திறமைகளெல்லாம் செத்துவிடும்.
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்திருப்பேன் என்ற
உறுதி வேண்டும்.
சிறு தோல்விகளையோ,
அவமானங்களையோ தாங்கிகொள்ள
முடியாமல் ஓடி ஒளிகிறவர்கள்
என்றும் தன்னை தாழ்வாக
நினைத்து பல
விஷயங்களை கோட்டை விட்டுக்
கொண்டே இருப்பார்.
ஒரு சிறு துணிவு இல்லாமையினால்
பல வாய்ப்புகளை நாம்
இழந்து விடுகிறோம்,
துணிவில்லாமல் கோட்டை விட்ட
விஷயங்களை நினைத்து பாருங்கள்,
அதில் சிறு துணிவு மட்டும்
இருந்திருந்தால், எதையும்
இழந்திருக்க மாட்டீர்கள்.
ஒரு விஷயத்தை செய்ய துவங்கும்
வரையிலும் அதை செய்வதற்கான
துணிவோ,
ஆர்வமோ வருவதில்லை செய்ய
துவங்கிய பிறகுதான்
இவளவு நாட்களாக இது ஏன்
தோன்றவில்லை என்று நினைப்பீர்கள்.
ஆக
சிறு துணிவு இல்லாமையினாலே
பலர் புறக்கணிக்கப்பட்ட
அதே இடத்தில் இன்னும்
கிடக்கிறார்கள்
யாரும் நம்மை, நம்பிக்கையோடு,
தைரியமூட்டி வாழ்த்தி அனுப்ப
வேண்டிய அவசியமில்லை,
அதைவிடவும் வலிகளையும்,
அடிகளையும், அவமானங்களையும்
சுமந்து சென்றே நம்மால் ஜெயிக்க
முடியும். துன்பங்கள்
வருவதனால்தான்
இன்பங்களை முழுமையாக
அனுபவிக்க முடிகிறது,
புறம்பே தள்ளப்படுவதாலே வெற்றி
இலக்கை அழுத்தமாக பிடித்துக்
கொள்ள முடியும்.
ஆரம்பமே வாழ்த்தும், வரவேற்புமாக
இருந்தால் பல
சூட்சுமங்களை தெரிந்து கொள்ள
தவறி விடுவோம்.
ஒட்டு மொத்த மனிதர்களும்
உங்களை புறக்கணித்தாலும்
பரவாயில்லை ஆனால்
ஒரே ஒரு மனிதர் மட்டும்
உங்களை புறக்கணிக்காமலிருந்தால்
உங்களுக்கு வெற்றி நிச்சயம், அந்த
ஒரே ஒரு மனிதர் நீங்களேதான்.
எத்தனை பேர் அணிவகுத்து வந்து
புறக்கணித்தாலும்,
இறுதி வரையிலும் உங்களை நீங்கள்
புறக்கணியாதிருங்கள்,
ஒட்டு மொத்த மனிதர்களும் ஒருநாள்
உங்களை திரும்பி பார்ப்பார்கள்.

காதலர் தினம்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர்
தினம்
குறித்து பல்வேறு சுவையான,
தகவல்கள் கூறப்படுகின்றன. காலம்
காலமாய் கூறப்பட்டு வரும்
காதலர்தினக் கதைகள் தியாகம்
நிறைந்தவை. அந்த கதைகளை காதலர்
தினத்திற்காக
பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ்
டே என்று உலகமெங்கும்
கொண்டாடப்படும் காதலத் தினம்
வேலண்டைன் பாதிரியாரின்
நினைவாக
கொண்டாடப்படுகிறது என்பது
நம்பிக்கை. கி.பி 270 ம்
ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம்
கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள்
திருமணம் செய்து கொள்ள
தடை இருந்தது. திருமணம்
செய்து கொண்டால் ஆண்களுடைய
வீரம் குறைந்து விடும்
என்பது அரசரின் நம்பிக்கை.
இதனால் பெண்களை ஏறெடுத்தும்
பார்க்கக் கூடாது என்ற
தடை விதித்திருந்தார் ரோமப்
பேரரசர்.
திருமணம்
செய்து கொண்டு வாழ்க்கையை
என்ஜாய் செய்யவேண்டும்
என்று துடித்தவர்களுக்கு உதவி
செய்து அவர்களுக்கு அரச
கட்டளையை மீறி திருமணம்
நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த
உதவிக்கு மன்னன்
மரணதண்டனையை பரிசளித்தார்.
இரண்டு மனங்களை திருமண
பந்தத்தில் இணைத்து வைத்த
பாதிரியார் வேலண்டைன்
கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14.
வேலண்டைன்ஸ்
டே குறித்து உலவும் கதைகளில்
பெரும்பாலானவர்கள்
ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின
கதை சுவாரஸ்யமானது.
சுவர்க்கத்தின்
சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள்.
ஏழாவது மகளான
ஸி நூ அழகிகளுக்கெல்லாம்
அழகி ! பேரழகி. ஒரு நாள்
ஏழு சகோதரிகளும் நதியில்
குளித்துக் கொண்டிருந்தார்கள்.
நுவூ எனும் இளைஞன் அவர்களைப்
பார்த்தான். குறும்புத் தனமாக
எல்லாருடைய ஆடைகளையும்
எடுத்துப் போய்விட்டான். ஆடைகள்
இல்லாமல் வெளியே வரமுடியாமல்
சகோதரிகள் தவித்தனர். கடைசியில்
தங்கள் கடைசித் தங்கையான
ஸி நூ வை அவனிடம்
சென்று ஆடை வாங்கி வர
அனுப்பினார்கள். ஈரம் சொட்டச்
சொட்ட எழிலுடன் வந்து நின்ற
அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல்
கொண்டான். இந்த காதல்
திருமணத்தில் முடிந்தது. விஷயம்
தெரிந்த மன்னர் இருவரையும்
பிரித்து வானத்தின்
இரண்டு மூலைகளில்
கொண்டு போய் விட்டார். அவர்கள்
ஏழாவது மாதத்தின்,
ஏழாவது நாளில் மட்டும் தான்
சந்தித்துக் கொள்ள முடியும். அந்த
நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில்
கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர்
கேலியா. இது பிப்ரவரி 13 முதல்
பிப்ரவரி 15
வரை கொண்டாடப்படும்.
வாழ்க்கை வளமாக அமைய
கடவுளை வேண்டும் விழா இது.
ரோம் நகரில் ஆடல் பாடல் என
அமர்க்களப்படும். இதனை கி.பி 490
களிலி போப் கெலேஷியஸ்
தடை செய்தார். ஆனாலும் மக்கள்
இதனை விடவில்லை. இந்த
விழாவின் வீரியத்தைக்
குறைக்கவும், ஒரு கிருஸ்தவ
விழாவின் மூலம்
செயலிழக்கச்செய்யவும் போப்
தீர்மானித்தார். எனவேதான்
பிப்ரவரி 14ம் தேதியை புனித
வேலண்டைன்நாள் என அறிவித்தார்
என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார்போக்
பகுதியில் வேலண்டைன்ஸ்
தினத்தை சிறப்பாக
கொண்டாடுகின்றனர். கிருஸ்துமஸ்
காலத்தில் கிருஸ்துமஸ்
தாத்தா வீடுகளில்
பரிசு வழங்குவதைப் போல
பிரியத்திற்குரியவர்களின்
பின்வாசல் கதவைத்
தட்டி இனிப்புகளை வைத்துச்
செல்லும் வழக்கம் இருந்துள்ளது.
இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள்
ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில்
இந்தநாளை “அனைத்து இதயங்களின்
தினம்” என்று அழைக்கின்றனர்.
போர்ச்சுக்கல் நாட்டில் காதலர்
தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்”
என்று அழைக்கின்றனர்.
இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட்
மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம்
என்பதாகும். ஸ்பெயினில் இந்த
நாளை செயின்ட் வேலண்டைன்
என்று அழைக்கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ்
டே சற்று வித்தியாசமானது.
இது காதலர்களுக்கான தினம் அல்ல.
இந்த நாளை அவர்கள்
‘ஸ்டேவான்பாபியா’
என்று அழைக்கின்றனர்.
அதாவது இதற்கு நண்பர்கள் தினம்
என்று பொருள். நண்பர்களாய்
இருப்பவர்கள் இந்த
நாளை விமரிசையாக
கொண்டாடுகின்றனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள்
அனுப்புவதும், பரிசுகள்
கொடுப்பதும் என இந்த
நாளை சிறப்பாக
கொண்டாடுகின்றனர்.
எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள்
எல்லாம் ஒன்றாக கூடி இந்த
நாளை உற்சாகத்துடன்
கொண்டாடுவது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம்
தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ்
என்று அழைக்கின்றனர். அந்த
நாளை அமர்க்களப்படுத்துவார்
பிரேசில் நாட்டினர். அபோல்
அவர்களுக்கு காதலர் தினம்
வேறு தனியாக ஒருநாள் உண்டு.
அது ஜூன் 2 ம் தேதி அந்தநாளில்
காதலர்கள் மற்றும் தம்பதியர்
வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு,
முத்தம் என சகலத்தையும்
பரிமாறிக்கொள்வது வாடிக்கை.

என்னதான் பிரச்சினை, உங்களுக்கு?

அதிகப்படியாக
வேலை பார்த்து உயிர் விட்டவர்கள்
யாரும் கிடையாது. பார்க்கிற
வேலையில் அதிகப்படியாக
குழப்பங்களை ஏற்படுத்திக்
கொண்டு அதனால் வந்த
சிக்கல்களை சமாளிக்க முடியாமல்
உயிர் விட்டவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம். `ஒரு வார
வேலையை விட ஒரு நாள்
கவலை அதிக தளர்ச்சியை தரும்
என்கிறார், இங்கிலாந்து அறிஞர்
ஆவ்பரி.
விஷயங்களை வரிசைப்படுத்தி
முடிவெடுக்கும் திறமை தான்
இங்கே முக்கியம். சிலர்
தலைக்கு மேல்வேலை கிடக்கிறது
என்று சலித்துக் கொள்வார்கள்.
இருக்கட்டும். அதில் எந்த
வேலை உடனடியாக செய்யப்பட
வேண்டியது என்பதை தீர்மானம்
செய்து கொள்ளுங்கள்.
அதையே முனைப்பாக முடியுங்கள்.
அந்த வேலையை முடிக்கும்போதே
அதையடுத்த முக்கியம் உங்கள்
மனதிற்குள்வந்து விடும்.
ஒரே மூச்சாக அதையும்
முடியுங்கள்.
இடையில் சில வேலைகள் எட்டிப்
பார்க்கும். அது உங்களுக்கு மெயின்
வேலையை முடக்க வந்த
வேகத்தடையாகவும் தோன்றலாம்.
வேலை நேரத்தில் `லஞ்ச் அவர்’
குறுக்கிட்டால் கோபித்துக்
கொள்ளவா செய்கிறீர்கள்? அவசரமாய்
அள்ளிப்போட்டுக்
கொண்டு வந்து வேலையை
தொடருகிறீர்களா, இல்லையா?
அதுமாதிரிதான் இடையில்
குறுக்கிடும் வேலையை அதன்
மீது சலிப்பு தோன்றாமல் முடித்துக்
கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.
அலுவலகப் பணியாளர்கள் பலரும்
தங்கள் டேபிளின் மேல்
கண்டதையும்
கொட்டி வைத்திருப்பார்கள்.
பார்க்கும்போதே `இத்தனை வேலைகளா
’ என்ற மலைப்பு எட்டிப் பார்க்கும்.
அத்தனையையும் அடுக்கி அதில்
அன்றைய முக்கியமாக
தோன்றுவதை முதலில் எடுத்துக்
கொள்ளுங்கள். `மதியத்திற்குள்-
மாலைக்குள்’
என்று பிரித்து வைத்துக்
கொள்ளுங்கள். இந்த திட்டமிடல்
உங்களுக்கு வேலையை
சுலபமாக்குவதோடு,
மனநெருக்கடியையும் வெகுவாக
குறைத்து விடும்.
சிலர் அலுவலகத்தில்
எல்லா வேலைகளையுமே பாதிப்பாதி
முடித்து வைத்திருப்பார்கள்.
இந்தப்பாதி முடிந்த வேலைகள்
அப்படியே கிடக்க, புதிய
வேலை வந்து நெருக்கடி கொடுத்து
விடும். அப்போது பெண்டிங்
வேலை சம்பந்தமான
பைலை உடனடியாக முடித்து தர
மேலதிகாரிகள் நெருக்குவார்கள்.
அவசரம் கருதி அந்த
வேலையை முடிக்கத் தலைப்பட்டால்,
இன்றைய
அவசரவேலை தடைப்பட்டு விடும்.
மத்தளத்துக்கு இரு பக்கமும்
இடி என்பது போல் கடைசியில்
குறித்த நேரத்தில் இதையும்
முடிக்க முடியாமல் அதையும்
முடிக்க முடியம் வீணாக
கெட்டபெயர் தான் மிஞ்சும்.
காலையில் குளித்ததும் பிரஷ்சாக
காபியை அருந்தத்
தொடங்கும்போதே இன்றைய
வேலைகள் உங்கள் மனதில் எட்டிப்
பார்க்கத் தொடங்கி விட வேண்டும்.
அந்த பட்டியலில் எதை முதலில்
செய்தால் சரியாக இருக்கும் என்ற
திட்டமிடலும் நல்லது. காலையில்
வங்கிக்குப்போய் பார்க்க வேண்டிய
வேலையை மாலையில் பார்க்க
முடியாதல்லவா! காலையில்
பார்த்தே ஆக வேண்டிய
வேலைகளை தெளிவான
திட்டமிடலோடு செய்யத்தொடங்கி
விட வேண்டும். இரவில்
படுக்கைக்கு போனதும் இன்றைய
வேலைகளை எல்லாம் ஒருகணம்
மனதில் கொண்டு வர வேண்டும்.
அப்போது அதை குறையில்லாமல்
செய்தீர்களா என்பது உங்கள்
மனக்கண்ணில் பளிச்சிடும். அதில்
ஏதாவது தவறு இருந்தால்
அடுத்தகணம் மனதுக்குள் `அய்யோ’
என்று ஒரு பிளாஷ் அடிக்கும்.
அதை மட்டும் மறுநாள் முதல்
வேலையாக நினைவூட்டி சரிசெய்ய
பழகிக் கொள்ள வேண்டும்.
சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக
அத்தனை வேலையையும்
தாங்களாகவே இழுத்துப்
போட்டுக்கொண்டு செய்வார்கள்.
இப்படிச்செய்யும்போது அலுவலகம்
நிச்சயம் உங்களை தலையில்
தூக்கி வைத்துக் கொண்டாடத்தான்
செய்யும். புரமோஷன், சம்பள
உயர்வு வந்து கிச்சுக்கிச்சு மூட்டும்
. இப்படி ஓய்வு, ஒழிச்சல்
இன்றி நீங்கள் வேலைகளை எடுத்துக்
கொள்ளும்போது மனஅமைதி,
தூக்கம் இரண்டையும்
அதற்கு தாரை வார்க்க
வேண்டியிருக்கும்.
வேலையே செய்யாதவர்களுக்காக
இந்த ஜோக்.
“நான் கார் வாங்கி பத்துவருஷம்
ஆகிறது. இதுவரை என் காரில்
சின்ன கீறல் கூட விழுந்ததில்லை”
என்றார், ஒருவர்.
“அட என்ன ஆச்சரியம்…நான் உங்கள்
காரை பார்க்கணுமே” என்றார்
அடுத்தவர்.
“கார்ஷெட்டில் தான்
விட்டு வைத்திருக்கிறேன்
வாங்கிய நாள் முதலாக கார்
அங்கே தான் இருக்கிறது” என்றார்
முதலாமவர்.
இதெப்படி இருக்கு?
கடைசியாக ஒன்று:
மேலதிகாரிகளை மதிப்பது உங்கள்
வேலையின்
கட்டாயம் .மேலதிகாரிகளின்
கட்டளைக்கு கீழ்ப்படியாத எவரும்
தங்கள் பணிக்காலத்தில்
கட்டளையிடும் பதவிக்கான
இடத்தை கடைசிவரை அடையவே
முடியாது. இன்று நீங்கள்
கொடுக்கும்
மரியாதை நாளை உங்களை தேடிவர
வேண்டுமானால் முதலில் நீங்கள்
பணியுங்கள்.