மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்
பயன்களும்!
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல்
ஆரோக்கியத்தைக் காப்பாற்ற
மூலிகை செடிகளின் இலை, வேர், காய்,
பழம், பட்டை, மற்றும், விதைகளைப்
பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த
சித்தர்கள், தன்வந்திரி, மூலனார்,
நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத்
திறனாலும் அனுபவத்தாலும் பல
மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில்
எழுதிவைத்துள்ளனர்.சுமார் 4000
வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில்
மூலிகை மருத்துவத்தைப்
பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர்
வேதமருத்துவத்தில் 341 மருந்துச்
செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.
தற்போது இது நடைமுறையில் உள்ளது.நம்
நாட்டில் சுமார் 2000 முதல் 7000
வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன.
இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச்
செடிகள் நாட்டு மருந்துகள்
தயாரிப்பிலும் 100 முதல் 150
மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும்
பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம்
மூலிகை செடியிலிருந்து
மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த
மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால்
மூலிகை மருந்து உற்பத்தியில் நம்
நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.
நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை,
மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப
நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன.
அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம்
அடைந்துள்ளோம்.
மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில்
தீராத நோய்களையும் பக்க விளைவுகள்
இன்றி குணப்படுத்தவும்,
பிணியின்றி வாழவும் இயற்கையான
முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள்,
மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும்,
ஆங்கில மருத்துவத்தை விட
மூலிகை மருத்துவப்
பணச்செலவு குறைவாக இருப்பதாலும்,
மேலும் பக்க விளைவுகளும்
இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம்
காட்டுகின்றனர்.இந்நிலையில்
இங்கு பரவலாக நாம் பயன்படுத்தும்
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்
பயன்களும்:-
*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை,
கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள்
பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும்,
சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான
கொழுப்பை குறைக்கும். இரத்த
கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி,
ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :-
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த
மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய்,
தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும்,
நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி,
ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச
கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும்,
உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி,
இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த
கொதிப்புக்கு சிறந்தது, உடல்
குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :-
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்
நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :-
நரம்பு தளர்ச்சி நீங்கும்,
ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு,
சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண்,
வயிற்றுபுண் ஆறும்.
சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த
மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி,
நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல்
கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு,
அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண்
ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல்,
வரட்டு இருமல் நீங்கும், குரல்
இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள்,
வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :-
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல்
நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :-
அனைத்து விஷக்கடிக்கும்,
சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை,
சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி,
முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி,
உடல் பொலிவு, சரும
பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு,
தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு,
கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :-
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :-
கொழுப்புசத்தை குறைக்கும்.
மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை,
கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள்
அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள்
இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக
கோளாறு, கல் அடைப்புக்கு மிகச்
சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண்,
வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல்,
வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும்,
முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண
கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு,
ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண்
நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில்
கலந்து குடித்துவர சூடு குறையும்,
முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி,
வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல்
குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி,
நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக
கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால்
ஏற்படும் அதிகப்படியான
இழப்பை சரி செய்யும், உடல்
வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :-
தினசரி பூசி வர முகம்
பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர
நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும்,
வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல்
குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில்
பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை,
பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்..
No comments:
Post a Comment