Saturday, 12 April 2014

வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்...

வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30
வழிகள்...

மற்றவர்களை புண்படுத்தாமல் நம்
வாழ்க்கையை சந்தோசமாக நடத்த
1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய்
விட்டு சிரியுங்கள்
2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர்
குடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க
பழகிக் கொள்ளுங்கள்.
4. செய்யக் கூடாது என்று நினைக்கும்
செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய
மனதை பழகிக் கொள்ளுங்கள்.
5. நீண்ட நாளைய பழகிய
நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி,
உங்கள் பசுமையான பழைய
நினைவுகளை ஞாபகப்படுத்திக்
கொள்ளுங்கள்.
6. இது வரை நீங்கள் அறிந்திராத
ஒரு நாட்டைப் பற்றிய
புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள
முயற்சி செய்யுங்கள்.
7. ஒவ்வொரு நாளும் நடைப்
பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
ஐந்து பழத்துண்டுகளையோ,
காய்கறிகளையோ,விரும்பி உண்ண பழகுங்கள்.
9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய
விஷயங்களை நீங்கள்விரும்புகின்றவர்களிடமோ
, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார
பகிர்ந்துகொள்ளுங்கள்.
10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த
கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து
பரவசமடையுங்கள்
11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச்
செய்யுங்கள் – நீங்கள்
மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத்
திரும்பி வருகிறது.
12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும்
மனதாரப் பாராட்டுங்கள் –
பாராட்டுக்களால்மகிழ்வுறுவது ஒரு
இயற்கையான மனித சுபாவம்.
13) மன்னிப்பைக்
கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் –
இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும்
தவறு இழைதவர்களை மனதார
மன்னித்து விடுங்கள்.
14) எவரைப் பற்றியும் விரோத
மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக்
கொள்ளாமல் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்
– எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை,
பேராசை, கோபம் ஆகியவை துன்பம்
விளைவிக்கும்.
16) எது நடக்கிறது என்பதை விட
நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம்
என்பதேமுக்கியம் – சில
நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது.
ஆனால் அதை எப்படிஎதிர்கொள்கிறோம்
என்பதுதான் வாழ்க்கையின்
நிம்மதியை நிச்சயிக்கிறது.
17) நல்லது நடக்குமென்றே நம்புவோம்
ஆனால் மோசமானவை நடந்தாலும்
அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள்
எப்போதும் தங்களிடம் அக்கறைகாட்டவும்,
வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற
முறையில் பழக வேண்டும்.
19) மனதையும் உடலையும்
ஆரோக்கியமாகவும் வலிமையாகவும்
வைத்துக் கொள்ளவேண்டும்.
20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக்
கொண்டிருக்க
முடியாது என்பதை உணர்ந்துகொள்ள
வேண்டும்.
21) நண்பர்கள் வாழ்கையில்
முக்கியமானவர்கள்.
22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த
ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு தனித்துவம் உண்டு. இதைப்
புரிந்து கொண்டு நாம்
சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.
23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும்
புரிந்து கொள்ளுங்கள்.
24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் –
குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
25) அச்சம் தவிருங்கள்.
26) இறைவனின் அருளால்
எல்லாமே சாத்தியம்தான்.
27) நாளை நடப்பதைப் பற்றிக்
கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான்
என்பதை நம்புங்கள்.
28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக்
கொள்ளுங்கள். சிரித்து வாழக்
கற்றுக்கொள்ளவேண்டும்.
மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச்
சிரித்து வாழ வேண்டும்.
ஆனால்மற்றவர்களைப்
பார்த்து நகைக்கக்கூடாது.
29) வெற்றி என்பது பணத்தினாலோ,
பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை.
மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப்
பொறுத்தே இருக்கிறது.
30) எந்த நிலையிலும் இறைவனை மனதார
நினையுங்கள்

No comments:

Post a Comment