பூமிக்கு இரு வித இயக்கம்..! ஏப்ரல் 22
பூமி தினம்
ஏப்ரல் 22 பூமி தினம்..!
Earth Day World, April 22..
போலந்து நாட்டு விஞ்ஞானி 1545ஆம்
ஆண்டில் பூமி, சூரியனைச் சுற்றி
வருகிறது என்று முதன் முதலாக
தெரிவித்தார். ஆனால், இதை மக்கள் நம்ப
மறுத்தார்கள். காரணம், பூமி சுற்றும்
போது அதன் மேல் வசிக்கும் மனிதர்கள்,
மரங்கள், விலங்குகள் அனைத்தும் ஏன்
இயங்ககாமல் இருக்கின்றன என்பதே அதற்கான
காரணமாக இருக்கிறது.
பூமிக்கு இரு விதமான இயக்கம்
இருக்கிறது. பூமி தன்னைத் தானே
சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி
வருகிறது. இதை மனிதர்கள் உள்ளிட்ட
யாரும் உணராதற்கு காரணம், பூமியின்
ஈர்ப்பு விசை. இதனால், காற்று மண்டலம்
உள்ளிட்ட அதன் மீது இருக்கும் ஒவ்வொடு
பொருளும் பூமியுடன் சேர்ந்தே
சுற்றுகிறது. பூமி தன் அச்சில் தானே
சுற்றிக் கொள்வதால் இரவும் பகலும்
ஏற்படுகிறது.
சூரியனை நோக்கி திரும்பி இருக்கும்
பூமியின் பகுதிக்கு பகல், மற்ற
பகுதிக்கு அப்போது இரவு. பூமி தன்னைத்
தானே சுற்றவில்லை என்றால் சூரியனை
நோக்கி இருக்கும், பூமியின் பகுதி
எப்போதும் பகலாகவும், மற்றப் பகுதி
எப்போதும் இரவாகவும் இருக்கும்..
மேலும், சூரியனைச் சுற்றி வரும்
தளத்தின் செங்குத்து கோட்டுடன் பூமியின்
அச்சு 23.5 டிகிரி கோணத்தில்
சாய்ந்துள்ளது. இதனால், தொடந்து 6
மாதங்களுக்கு ஒவ்வொரு துருவமும்
சூரியனிக்கு எதிரில் வருகிறது.
அடுத்த ஆறு மாதத்துக்கு அப்படி
வருவதில்லை. இதனால், துருவங்கள் 6
மாதத்துக்கு பகலும், ஆறு மாதங்களுக்கு
இரவும் மாறி மாறி வருவதன் காரணம்
இதுவே.
பூமி சில தகவல்கள்
புறப்பரப்பு: 51,01,00,500 ச.கி .மீ
நிலப்பரப்பு: 14,89,50,800 ச.கி .மீ
நீர்ப்பரப்பு: 36,11,49,700 ச .கி .மீ
எடை : 5.98*10இன் அடுக்கு
No comments:
Post a Comment