ஜெயித்தவர்களிடம்
அப்படி என்னதான்இருக்கிறது?
Ø சாதிக்க வேண்டும் என்ற சபதம்
இருக்கிறது
Ø வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற
வைராக்கியம் இருக்கிறது
Ø வென்று காட்ட வேண்டும் என்ற
வீம்பு இருக்கிறது
Ø அடைவதற்கு என்று ஒரு லட்சியம்
இருக்கிறது
Ø அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம்
இருக்கிறது
Ø வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற
தாகம் இருக்கிறது
Ø வாய்ப்பு வரவில்லை என்றால்
அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
Ø உணவு, உறக்கம் இவற்றைக்கூட
ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
Ø தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும்
சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
Ø அடிமேல் அடிபட்டாலும் அடுத்த
அடியை எடுத்து வைக்கும் துணிச்சல்
இருக்கிறது
Ø தங்கள் தகுதிக்கும், திறமைக்கும்
சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல்
இருக்கிறது
Ø தொடர்ந்து, எந்த
வகையிலாவது ஏதாவது பலங்களைக்
கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
Ø சூழ்நிலைக்குத்
தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம்
இருக்கிறது
Ø விமர்சனத்தைச் சரியான விதத்தில்
எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
Ø அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும்
முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும்
மூளை இருக்கிறது
Ø குறிக்கோள் நோக்கிய
வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய்
ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
Ø கடமைகள் காத்துக் கிடக்க,
பொழுதுபோக்குகளில்
புத்தியை செலுத்தாத
பொறுப்பு இருக்கிறது
Ø நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம்
என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
Ø அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க
முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
Ø இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன
இருக்கிறது?
No comments:
Post a Comment