Tuesday, 1 April 2014

தமிழன் தமிழ் வரலாறு - உலக வரலாறு

தமிழன் தமிழ் வரலாறு - உலக வரலாறு

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன்
முதலில் தமிழ் நாட்டில் மனித இனம்
தோன்றியது. தென் குமரிக்குத்
தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில்
மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப்
ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித்
திரிந்தது.

கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில்
யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள்
கொண்டு வந்தனர்.

கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும்
ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால
மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள்
வாழ்ந்தனர்.

கி.மு. 75000
கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7
மில்லியன்.

கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம்
பிரிவு.

கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய
மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள்
தமிழிலிருந்து பிரிந்தகாலம்
( இந்தோ ஐரோப்பிய மொழிகள்)

கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன்
காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449
புலவர்கள் கூடினர். முதுநாரை,
முதுகுருகு, களரியாவிரை முதலிய
நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள்
காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற
நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்,
நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன்,
பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக
மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம்
தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம்
மூழ்கியது.

கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன்
பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன்.
இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான்.
3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம்,
தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள்
எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன்
மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த
தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன்
வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன்
ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன்,
முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன்.
சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம்.
முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.
சுமேரியாவில்
புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி
வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள்
இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்
முழு மறை வடிவங்கள்
நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள்
தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின்
"கலியாண்டு" ஆண்டு தொடக்கம்,
சிந்து சமவெளியில் தமிழர்களின்
நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட
வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்-
நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்;
நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000
ஆரியர்கள்
சிந்து சமவெளி வழி நுழைந்தனர்.
துணி நெய்தல்
ஐரோப்பா சிந்து சமவெளியில்
ஆரம்பித்தது. தென்னிந்தியாவில்
குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள்
முதல் தமிழ்ச் சங்க காலத்தில்
பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம்
அழிந்தது. ஈழம் பெருநிலப்
பகுதியிலிருந்து பிரிந்தது

கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன்
வடபுலத் தமிழ் மன்னர்களும்
சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த
காலம். கடற்பயணங்களில் புதியன
கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில்
ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர்
ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச்
சங்கம் நடந்தது.

கி.மு. - 1900
வேத கால முடிவு.
சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள்
தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில்
இருந்த துவாரக நகர் வெள்ளத்தில்
மூழ்கியது. இரும்பின் உபயோகம்.
கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய
கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டது.

கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும்
உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப்
பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000
யூதர்களை எகிப்திலிருந்து
வெளியேற்றினார்.

கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள்
மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள்
மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள்
இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு
மொழி உருவெடுத்தக் காலம்

கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய
இசுரேல், லெபனானை பேரரசாகக்
கொண்டிருந்தான்.

கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின்
உபயோகம்.

கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான
மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ்,
தென்தமிழ்) என மொழிகள் உருவாயின.
வடபுலத்தில் பிராமி எனவும்
தென்புலத்தில் தமிழி எனவும்
பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும்
எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு.
வடமொழி பாகதமாகவும்,
தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன.
(சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம்
அது போதுமான
வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.)
தொல்காப்பியம்- பிராகிருதப்
பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன,
கடைச் சங்க காலத்தில் நற்றினை,
குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு,
கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
பத்துபாட்டு, எட்டுத்தொகை,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
திருமுருகாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை,
மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,
நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின.
திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க
கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,
குண்டலகேசி முதலிய
ஐம்பெரும்காப்பியங்களும்,
முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது,
கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம்,
நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம்,
ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும்
தோன்றின.

கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டி.
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட
மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.
பித்திக்காந்திரோப் பஸ் 1 யின்
மண்டையோடு. (தூபுவா 1891ல்
கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின்
மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக
ஆரம்பித்தது.

கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில்
சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய
மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய
உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம்
சைனாவில் புழக்கம், எளிமை,
தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில்
தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து,
ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க
மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன்,
பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ்
இசைக்கருவிகள் வடநாடு முழுவதும்
வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்)
தமிழிலக்கணத்தைப்
பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத
முயற்சி மேற்கொள்ளபட்டது.
புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில்
திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம்
உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின்
பெருங்கருத்து.

கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம்,
இசைக் கற்றுக் கொடுத்தக் காலம்.
மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ்
நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின்
கல்விக்கு அடிப்படையே இவருடைய
சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம்
யாவும்.

கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள்
தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய
மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன்
இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த
காலம்.

கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400
கிரேக்கத்தில்
மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம்.
பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன்
நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன்
( ஆரியரை வென்றவன் - கிரேக்க
யவனரை அடக்கியவன்)

கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின்
மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம்.
கிரேக்க பேரரசு அமைத்த
செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர்
அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய,
சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ்,
பிராகிருதம் இரண்டும்
எழுத்து மொழியாகவும்
பேச்சு மொழியாகவும் விளங்கின.
பிராகிருதம் - மக்களின் மொழி.
நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம்
பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம்.
தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம்
இருந்தது. கலிங்க போர் இவரை புத்த
மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக
சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன்,
சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன்
ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின்
காலம்.

கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன்
மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
காலம்.

கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல்
நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ்
சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி.
உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி,
ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ
ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம்
எழுதினார்.

கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக
சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில்
ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன்
கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி,
ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய
குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறை ஆட்சி, சேரமான்
மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி.
இக்காலத்தில் வாழ்ந்தவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள்
தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார்
கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான்
மாரிவென்கோ இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த
உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய்
இருந்தார்கள்.
இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என
அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார்,
பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன்,
கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன்
குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின்
நன்கொடையாம் திருக்குறளைத் தந்த
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன்
பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன்,
பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர்
ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன்
வாழ்ந்த காலம்

No comments:

Post a Comment