மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்
கிழக்கேயிருந்து வரும் சூரிய
சக்தியையும்,வடக்கேயிருந்து வரும்
காந்த சக்தியையும் வீட்டுக்குள்
தேக்கி வைப்பதே வாஸ்து.
கோயிலின் வாஸ்து வேறு வீட்டின்
வாஸ்து வேறு என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் அடிப்படை ஒன்றே!
அவற்றை மட்டுமே சிற்ப சாஸ்திர
சிந்தாமணி என்ற நூலில்
விளக்கி இருப்பதை சுலபமாக்கி
கொடுத்துள்ளேன்.
பழங்கால கிழக்குப் பார்த்த சிவன்
கோவிலுக்குச்
சென்றால்,உள்ளே நுழைந்தவுடன்
இடது கைப்பக்க மூலையில் மடப்
பள்ளி உள்ளது.(அதுவே சமையலறை வைக்க
உகந்த இடம். அக்னி மூலை என்றழைக்கப்படும்
தென் கிழக்கு மூலையே அது),அதில்
கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள்
சமைக்கிறார்கள்.வீட்டிலும்
அது போலவே மனையாளும்
கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும்.
பிறகு பிரகாரம் சுற்றி வரும்
போது கன்னி மூலையில் கணபதி(தென்
மேற்கு மூலையில்) உள்ளார்.அவர்
கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில்
உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான
மேல்நிலைத் தொட்டி,மாடிப்
படிக்கட்டு தென்மேற்கு மூலையில்
அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான
இடமாக இது அமையட்டும்)
அடுத்து அமைந்துள்ளது முருகன்
சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன்
நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட
ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில்
கொண்டு போய்
சேர்த்தது வாயு பகவான்தான்.சம்பந்தம்
புரிகிறதா!இந்த மூலை
கன்னிமூலையை(தென்மேற்கை) அடுத்த
உயரமாக அமையலாம்.கன்னி மூலை தோதாக
அமையவில்லையானால்
இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.
அடுத்து தீர்த்தத் தொட்டி,தண்ணீர்
விழுவது கிழக்கானாலும்
வெளியேறுவது வடகிழக்குத்
திசையில்தான்
வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத்
திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு,
கிழக்குத் திசையில் இருந்து வரும் காந்த
சக்தியை தேக்க
முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக்
கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி,
ஆகியவை அமைக்கலாம்.இந்தத்
திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும்
திசை.
மூலைகளில் கழிவறை அமைக்க
வேண்டாம்.அவை தேவதைகளின்
இருப்பிடம்.அது போல மனையின்
நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று பெயர் அந்த
இடத்தையும் முக்கியத்துவம் கொடுங்கள்.
கழிவறைகளை வீட்டின்
கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில்
அமையுங்கள்.வீட்டின்
ஈசானியத்தை எவ்வளவுக்கெவ்வளவு திறப்பாக
வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய
சக்தியும்,காந்த சக்தியும்
உள்ளே வரும்.அது வீட்டின் மூன்றில்
ஒரு பங்கு இருந்தால் நல்லது.
அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில்
ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.
வீட்டின் ஈசானியத்தில் வாசல் வைப்பது,
வடக்கு, கிழக்குத் திசைகளில்,சன்னல்
வைப்பது போன்றவை சூரிய சக்தியும்,காந்த
சக்தியும் உள்ளே வர ஏதுவாக
இருக்கும்.தென்மேற்கு மூலையான,கன்னி
மூலையில்
(அல்லது தெற்கு,மேற்கு திசைகளில்),பரண்
அமைப்பது,கனமான
பொருட்களை வைப்பது,அந்தத்
திசையை மூடுவது போன்றவை சூரிய
சக்தியும்,காந்த சக்தியும் வீட்டின்
உள்ளேயிருந்து வெளியே போகாமல்
தடுக்கும்.
பீரோ,பணம் வைப்புப்
பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில்
கிழக்கு நோக்கி வைப்பது இந்தக்
காரணத்துக்காகவே.வடக்கு குபேரன்
திசை எனவும் அங்கிருந்து செல்வம்
வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும்
திசையான தென்மேற்கில்
பணப்பெட்டியை வைத்து பிடித்துக் கொள்ளச்
சொல்கிறார்கள்.
Friday, 18 April 2014
மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து
Labels:
அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment