Tuesday, 1 April 2014

பயம்...

பயம்,பயம்,பயம்....

பயம் என்ற அனுபவம் நமக்கு புதிதல்ல.
ஆனால் அதென்ன?
அதெங்கிருந்து வருகிறது?
எங்கு தோன்றுகிறது? அதன் தன்மை என்ன?
அதன் விளைவு என்ன? அதைத் தவிர்க்க என்ன
வழி? இப்படி நாம் சிந்தித்துப்
பார்ப்பதில்லை.
இதை சற்று ஆராய்ந்து பார்ப்போமா?
உங்களைக் கேட்டால் நீங்கள் சொல்வீர்கள் பயம்
எனபது ஒரு நினைப்பு (Feeling) என்று.
அதன் உற்பத்தி இடம் ஏது?
எல்லா எண்ணங்களும் மனதில் தோன்றுகின்றன,
காரணம் மனம் என்பதே ஒரு இடைவிடாத
எண்ணங்களின் சேர்க்கை.
அது நம்முள் எழும் ஒரு அவநம்பிக்கையின்
(Insecurity feeling) பிரதிபலனம்
(Reflection).
ஒரு நாய்
குரைத்துக்கொண்டு நம்மை நோக்கி ஓடி
வருகிறது.
அதைக் கண்டதும் நாம் அது நம்மைக்
கடிக்குமோ என்ற நினைப்பில் (பயத்தில்)
ஒர் அவநம்பிக்கை பிறக்கிறது.
நம் தைரீயம் நம்மை விட்டு விலகுகிறது.
நாம் ஓடத் துவங்குகிறோம்.
நாயும் வெகு வேகவேகமாக நம் பின்
வருகிறது.
அதன் விளைவு?
நம் தேகம் நடுங்குகிறது. நம்மில்
ஒரு தரம் சூடு பரவுகிறது,
நமக்கு வியர்க்கிறது. நம் நாடி வேகமாக
துடிக்கிறது. மூச்சு வாங்குகிறது.
கடைசியில் நாம் செயலற்றுப் போகின்றோம்.
ஓட முடியாமல் நின்றுவிடுகின்றோம்.
இதைப் பார்த்த நாய் தன்னைக் கால்லால்
அடிப்பார்களோ என்று பயந்து பின்
நோக்கி ஓடுகிறது.
அப்போது நமக்குத்
தன்னம்பிக்கை பிறக்கிறது.
நம் தேகத் துடிப்பு குறைகிறது.
சரியாக மூச்சுவிட முடிகிறது. பயம்
அகலுகிறது.
இப்போது நாம் உணர்வது என்ன? நாய் நம்மைக்
கடிக்குமோ என்ற பொய் எண்ணம்
நம்மை பயத்தில் ஆழ்த்தியது.
அது திரும்பிப் போனதும்
நமக்கு உண்மை விளங்குகிறது.
இறப்பில் எல்லோருக்கும் பயம்
வருவது சகசம்.
காரணம் இறப்பு என்பது நம் உலக
அனுபவங்களின் முடிவு.
நம்மால் அதை நினைத்துக்கூடப் பார்க்க
இயல்வதில்லை.
காரணம்,
நாம் உலக வாழ்க்கையே நிஜம் என்ற தவறான
கருத்தில் இருக்கிறோம்.
உலக வாழ்க்கை தற்காலிகம்,
அது ஒரு மாயை,
அதற்கு முடிவு உண்டு என்ற எண்ணம்
நமக்கில்லை.
கனவில் (Dream) நாம் இறப்பதாகக்
காண்கிறோம்.
அப்போது நமக்குக் கனவிலேயே பயம்.
விழிப்பு வந்து பார்த்தால் நம் உடல்
ஆடுகிறது, வியர்க்கிறது, நம்
நெஞ்சு பதைக்கிறது.
பிறகு அது ஒரு கனவே என்ற
உண்மை புரிந்த பிறகு நாம்
சமநிலைக்கு வருகிறோம்.
கனவில் வரும் நினைப்புகள் பொய்யே என்ற
உண்மை நாம்
உணர்ந்தபொழுது புரிகிறது.கனவில்
புரிவதில்லை.
காரணம்,
அப்போது நாம் ஒரு பொய் வாழ்க்கையில்
இருந்தோம்.
விழித்திருப்பது நிஜ வாழ்க்கை என்றும்
கனவு பொய் வாழ்க்கையென்றும் தெரிகிறது.
உங்களுக்குத் தேர்வு காலத்தில்
படிக்கும்போது பாஸ் பண்ணுவோமா என்ற
திகில் எழுகிறது.
ஏன்? நீங்கள் நன்றாகப் படிக்கவில்லையேல்
உங்கள்
மேலே உங்களுக்கு சுயநம்பிக்கை (Self
Confidence) இல்லாமல் போகிறது.
அதனால்,
இந்த பயம் உங்களைத் தாக்குகிறது. நீங்கள்
நன்றாகப் படித்து சுயநம்பிக்கையுடன்
தேர்வு எழுதினால் நிச்சயம் பாஸ்
செய்வீர்கள்.
பொய் நினைப்பு, அவநம்பிக்கை,
உண்மை உணராத நிலை இவைகளே நம் பயத்தின்
அடித்தளம் (Foundation). எந்த
நிலையிலும் தைரியத்தை (Courage)
கைவிடக் கூடாது.
எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும்
(Positive thinking), கெட்ட
நினைப்பை (Negative thinking) அகற்ற
வேண்டும்.
அப்பொழுதுதான் நமக்கு நம்மேல் சுய
நம்பிக்கை (Self Confidence) எழும்,
அப்பொழுது பயம் நம்மைத் தாக்காது.
சுருங்கச் சொன்னால் பயம் என்பது மனதில்
எழும் ஒரு கெட்ட எண்ணமே.
அதன் அடித்தளம் (Base)
சுயநம்பிக்கை இல்லாமலிருப்பது (Loss of
Self Confidence), கெட்ட நினைப்புகள்
(Negative Thinking) நம்மைத் தாக்குவது,
உண்மையை உணராத நிலை.
பயம் நம்மைத் தாக்கினால் உண்மை ஏது பொய்
ஏது என்ற தரம் திரித்துப் பார்க்கும்
சக்தியை இழக்கிறோம்.
அது நம் உடல், மனம்,
புத்தி இவைகளை பாதிக்கிறது.
நாம் இந்த மூன்று நிலையிலும்
செயலிழந்து போகிறோம்.
இதைத் தவிர்க்க,
ஏதொரு காரியமானாலும் அதை சீர்தூக்கிப்
பார்த்து அதன் உண்மை நிலையை உணர்ந்து,
தைரியமாக வருவதை எதிர் கொள்ள நம்மைத்
தயார் செய்து, செய்யும் காரியத்தில்
முழு மனதைச் செலுத்தி,
விளைவு நன்றாகவே அமையும் என்ற
சுயநம்பிக்கையுடன் (Self Confidence)
சரிவர அந்தக் காரியத்தில்
ஈடுபடுவோமானால், வரும் பலன்
நல்லதாகவே நிகழும்.
எண்ணத்தில் தெளிவும்,உள்ளத்தில்
உறுதியும் இருந்தால் பயம்
நம்மை நெருங்காது.

No comments:

Post a Comment